2024-07-28

கிழக்கு தோறும்

 



கோழி கூவிற்று.

அது அடைகாத்து 

வைத்திருந்த 

விடியல் முட்டையும்

உடைந்து சிதறி 

வெளிச்சச் சிறகை

விரித்து வெளியே வந்தது.

தமிழனின் மூளி வானம் மட்டும்

மொக்கையாக‌

அப்படியே இருந்தது.

பத்துப்பாட்டும் 

எட்டுத்தொகையும் 

தந்தவன்

தர்ப்பைப்புல்லொடு

தடுமாறும் 

மந்திரங்கள் சொல்லி

தடங்கள் மறந்தவன்.

தமிழ்ச்சுவடுகள் அழித்து

அமிழ்ந்து போனவன்

மீண்டு 

என்று எழுவான் என்று

இந்த உழக்குகளின் 

கிழக்கு மேற்குகளே

கிழக்கு தோறும்

விழித்து 

நோக்கிக்கொண்டிருக்கிறது.


_______________________________________

சொற்கீரன்

No comments: