2024-03-05

அவனா? இவனா?

 

அவனா? இவனா?

----------------------------------------ருத்ரா.


அச்சமும் கவலைகளும் 

நம் எதிரில் 

ஊமைகளாய் நிற்கின்றன.

அவைகளுக்கு 

கடவுள்கள் என்று 

பெயர் சூட்ட 

வைத்தது யார்?

நம் நரம்புகளில் 

வீணையை மீட்டி 

கொத்துக் கறி போட்டது யார்?

இனிமையாய் இருந்தாலும் 

காலத்துச் சுருதிக்கட்டைகளின்

காதுகளைத் திருகியா 

தேன் எடுப்பது? 

வண்டி வண்டியாய் 

வார்த்தைச்சகடங்கள்

கட கடத்த மந்திரங்களின் அடியில் 

நசுங்கி க் கிடப்பது யார்? 

கடவுளா? மனிதனா?

அவனை இவன் தான் 

அடையாளம் காட்ட வேண்டும்!

-----------------------------------------------------


 


2024-03-02

தமிழ் மூச்சுகள்

தமிழ் மூச்சுகள்.

--------------------------------------ருத்ரா 


காற்றில் உற்றுக் கேள் 

அந்த பனை  ஓலைகளின் 

உரசல்களை.

நம் தமிழ் மூச்சுகளின் 

எழுத்தாணிக் கீறல்கள்