அவனா? இவனா?
----------------------------------------ருத்ரா.
அச்சமும் கவலைகளும்
நம் எதிரில்
ஊமைகளாய் நிற்கின்றன.
அவைகளுக்கு
கடவுள்கள் என்று
பெயர் சூட்ட
வைத்தது யார்?
நம் நரம்புகளில்
வீணையை மீட்டி
கொத்துக் கறி போட்டது யார்?
இனிமையாய் இருந்தாலும்
காலத்துச் சுருதிக்கட்டைகளின்
காதுகளைத் திருகியா
தேன் எடுப்பது?
வண்டி வண்டியாய்
வார்த்தைச்சகடங்கள்
கட கடத்த மந்திரங்களின் அடியில்
நசுங்கி க் கிடப்பது யார்?
கடவுளா? மனிதனா?
அவனை இவன் தான்
அடையாளம் காட்ட வேண்டும்!
-----------------------------------------------------