2023-02-27

பேட்டி

 Facebook  THANKS FOR THE LINK


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்

பேட்டி 

-------------------------------------------------------------------------------------


காலம் எனும் பொறாமைப் பேயே.

உன்னால் என்ன செய்ய முடியும்?

இந்த தோலைச் சுருக்குவாய்.

உன் வரிகளை உழுதுகொள்.

அதில் 

என் வரிகளை

உயிரெழுத்துக்களாக்குவேன்.

என் கண்களின் தீக்கங்குகளைப்பார் 

இன்னும் இன்னும் 

ஆயிரம் சூரியன்களுக்கு 

கடன் தருவேன்

ஒளியை ....நெருப்பை..

பிணமாய் முடிந்து 

சாம்பற்பூக்களை சிதறடித்து 

நீ 

பழி தீர்த்துக்கொள் கவலையில்லை.

என்னைசசுற்றி 

அன்பின் மக்கள்.

அவர்களைச்சுற்றி 

ஆவேசமான கனவுகள்.தாகங்கள்.

என் புன்முறுவல் வளைவுக்கு 

இந்த உலகத்தில் 

எந்த "ஜியாமெட்ரியும்" கிடையாது.

அகராதிகளில் அச்சிடப்படாத 

சொல் 

மனித நேயமே அது.

என் மூச்சை உதிர்த்து 

உன் மூச்சை வேண்டுமானால் 

காப்பாற்றிக்கொள்.

பிறப்பும் இறப்பும் 

ஒரே வாசல் ஆனது எனக்கு.

காலமே 

உன்னோடு இன்னும் பேசிக்கொண்டிருக்க 

நேரம் இல்லை எனக்கு.

உன் பின்னே பார்.

கோடி பிரம்மன்கள் காத்திருக்கிறார்கள் 

என் பேட்டிக்கு.


---------------------------------------------------------------------------------------------

ருத்ரா 









2023-02-26

விசைப்பலகையில்

உராங் உட்டானோ

சிம்பன்சியோ

தெரியவில்லை.

விசைப்பலகையில் 

விரல்களை மேய விட்டு

எச்சில் பண்ணி கடித்துப்பார்த்து

குதறிக் குதறி உதறியபின் 

தட்டியது இது....


போதும்டா..அங்கே

நீங்கள் விரல் த‌ட்டியது.

இனி மேலும் தட்டினால்

ராம லட்சுமணர்களை 

சுமந்து சுமந்து

தரைக்குள்ளேயே போய்விடுவீர்கள்!!!!!


____________________________________________

ருத்ரா

2023-02-25

மூளையின் மூளை

 மூளையின் மூளை

___________________________________________

ருத்ரா



யாரோ ஒருவர்

அந்த செயற்கை மூளைப்பெட்டியை

வைத்துக்கொண்டு

விளையாட விரும்பினார்.

தான் வந்திருந்த விமானம்

ஏன் இத்தனை தாமதம்

என்று

"ஏ ஐ பாட்"ல்

வினா எழுப்பச்சொன்னார்.

அதுவும்

நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்

கார சாரமாய் வினா தொடுத்தது.

சென்ற வேகத்திலேயே

விடையும் வந்தது

அதையும் விட நறுக் நறுக் என்று

ஊசி குத்திய ஆங்கிலத்தில்.

அனுப்பியது

விமானக்கம்பெனியின் 

செயற்கை மூளைப்பெட்டி.

கணிப்பொறிகள்

வாளேந்த துவங்கிவிட்டன.

என்றைக்கு 

உலகம் ஒரு

மெகா மெகா

ஹிரோஷிமா நாகசாகியாய்

கரிப்பிடித்து

காணாமல் போய்விடுமோ?

ஓட்டு கணிப்பொறி 

பட்டன் தட்டுவது போல்

அணுகுண்டின் பட்டனும் 

தட்டப்படலாம் ஒரு நாள்.

ஜனநாயகத்தைக்காட்டி

மடியில் 

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்

சர்வாதிகாரம் 

சந்திக்கு வந்து விடலாம்.

யாருக்குத் தெரியும்?

மனிதா

உன் மூளைக்கும் மூளை இருக்கிறதா

என்று

உடனே சோதனை செய்து கொள்!


____________________________________________________


அகழ்நானூறு 24

 அகழ்நானூறு 24

________________________________________

சொற்கீரன்




பாலைச்சுரம் அன்ன திரைச்சுரமும் ஆங்கோர்

நிரம்பா நீளிடை கடற்சுரம் கண்ணும் கண்போழ்ந்த‌

கடும்பல் திறத்தோன் முளிஅலை கல்லென‌

தண்பறை நாரை இனநிரை மேவ‌

வாள்மூக்கின் வன்சுறா உழப்ப ஆழல் மூழ்வும்

அலைவுறா நீச்சும் அவ்வெள்ளின் வெளியிடை

வீறு கொள வீங்கு நீர் புடைத்தாய் என்னே!

நின் குறுமகள் பாவை வண்டற் பாவை

அனையளாய் விரிமணல் எக்கர் வான்பூச்சூடி

குளகு குடையளாய் தழையாடை யுடுத்து

இன்பூ பூத்த செருந்திச் சுடரனாய் பரிமணல் 

பருங்கண் தடம் தடம் நீ இவண் ஊர்வாய் என‌

அவள் விழி இமை அடுக்கத்து உள் பூத்து

நின்றாள் நோதக நீ செய்தல் கடுங்கோறல்

கொல் அறம் தவிர்க நினை நச்சினாட்கினியனே.


_______________________________________________________

2023-02-23

முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்

 


முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்

_________________________________________

கலஞரின் நிழல்

இன்று

கலைஞர் குரலுக்கு நிழல்.

திராவிட மாடல் என்று

தமிழுக்கு ஒரு சிம்மாசனம் தந்த‌

செம்மல் தமிழே..

நீ நிமிர்த்தியது பேனா அல்ல.

உலக நாகரிகத்திற்கு

தமிழ் ஏற்றிய ஒரு

கலங்கரை விளக்கு.

நீ நீடு வாழ்க.

__________________________________

கவிஞர் ருத்ரா

2023-02-08

அயலி

அயலி
___________________________________________
ருத்ரா



வயசா?
வயசுக்கு வருதலா?
எது முந்தி வருகிறது?
எது உந்தி தள்ளுகிறது?
மின்னலடிக்கும் 
பெண்மை
தனக்குள்
கருவில்லாமலேயே 
ஒரு பயம் எனும் கருவை
சுமக்கிறது.
பிறக்காமலேயே 
பிறக்கப்போகும் அந்த‌
சமுதாய அரக்கனின்
கொடுமைகள் 
எத்தனை? எத்தனை?
ராமாயி வயசுக்கு வந்துவிட்டாள்
என்று
அன்று ஒரு படம்.
மாமூலான அந்தக்கதைக்கருவுக்கு
கிராமத்து ராட்சசமும் மூர்க்கமும்
ஒரு நெஞ்சத்துக்கிள்ளலுக்கு
தீ வளர்க்கத்தான் செய்தது.
இன்று
சானிடரி நாப்கின் கூட‌
ஒரு கதாநாயகி அந்தஸ்தையும் மீறி
வளர்ந்து கிளர்ந்து இருக்கிறது.
கதையின் சமுதாயக்கனத்தை
அதன் வலிமிகுந்த பாரத்தை
எத்தனை தேசியவிருதுகளாலும்
இலேசாக்கி விட‌ விடமுடியாது
என்று இன்று
திரைப்படைப்பாளிகள்
காமிரா உளிகொண்டு
செதுக்கி 
சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.
பெண் 
பெண்களிடமிருந்து
பெண்மையிடமிருந்து
உண்மையை உரத்து சொல்லமுடியாத‌
ஏதோ ஒரு பிரபஞ்சத்துள்
மாட்டிக்கொண்ட‌
"ஏலியன்"தான்
அயலியா?
இந்த ஒரு எரிமலைப்புழுவை
லாவகமாக‌
தூண்டிலில் மாட்டி
திரைக்கடலில் வீசி
திரவியம் தேடிக்
கண்டு பிடித்திருக்கிறார்
இயக்குநர் 
திரு முத்துக்குமார் அவர்கள்.
தொலைக்காட்சித்தொடர்கள்
தொல்லைக்காட்சி இடர்களாக‌
மாறி விட்ட நிலையில்
இப்படியொரு
அருமைக்காவியம் எப்படி உருவானது
என்பதே பெரும் வியப்பு.
பெண்களை புண்படுத்தும்
ஒரு புண்ணிய பூமியாய்
பெண்ணை ஒரு பூமாதேவியாய்
புதைத்துக்கொண்டே
புராணங்களை
பாராயணம் செய்யும் 
ஒரு சேடிஸ தேசத்தில்
பெண்மை எனும் பெருவெளிச்சமே
மனிதம் சுடரச்செய்யும்
ஒரு பேராற்றல் என்பதை
சொல்ல வந்திருக்கும் இந்த படம்
விருதுகளால் அலங்கரிக்கப்படும் என்பதைவிட‌
இந்தப்படத்தால்
அந்த விருதுகள் தான்
உயரங்கள் எட்டும் என்பதே
மிக மிக உயரமான உண்மை.

__________________________________________________________

2023-02-05

தமிழா! தமிழா!!

 தமிழா! தமிழா!!


____________________________________


சொற்கீரன் 




என்ன அழைப்பு இது?


யாருடைய குரல் இது?


உன் குரல் 


உனக்குத் தெரியவில்லை.


உன் இனம்


உனக்கு உணர்வு இல்லை.


அயல் இனத்தானின்


வாளும் கத்தியும்


உன் இனத்தானின் 


நெஞ்சில் செருகுவதற்கும்


உன் கைகள் தான்


உதவிக்கு வருகின்றன‌


என்னும் 


ஓர்மையும் உனக்கு இல்லை.


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌


நீ


இறந்து போன படுக்கையில் தான்


இருந்து கொண்டு


அட்டைக்கத்தியை


சுழற்றிக்கொண்டிருக்கிறாய்.


உன் முன்னோன்


வில் கொடி ஏற்றினான்


என்று


ஒலி பரப்பிக்கொண்டு


இந்த இமயத்தை 


நீ கொச்சைப்படுத்திக்கொண்டு


இருக்கிறாய்.


சினிமாவின் ஜிகினாவுக்குள் 


எந்த சூரியனை 


நீ கருதரிக்கப்போகிறாய்?


ஊள்ளூர் பரங்கிமலைச்சிங்கம்


என்று


அரித்தாரத்து அவதாரத்தை யெல்லாம்


பொதி சுமந்து கொண்டிருக்கிறாய்.


உன்னைத் திசை மாற்றும் 


தில்லாலங்கடிகளுக்குள் 


சட்டென்று ஒட்டிக்கொள்ளும் 


ஈசல் பூசசிகளாய் 


இறைந்து கிடக்கிறாய்.


அது வெறும் மையை 


கொப்புளித்த பேனாவா?


யாதும் ஊரே யாவரும் கேளிர் 


என்று 


கலங்கரை வெளிச்சமாய் 


நின்று கொண்டிருக்கும் 


கணியன் பூங்குன்றன் 


விதைத்த தமிழ்ச் சுவட்டை  அல்லவா 


நிமிர்த்திவைத்துக்கொண்டிருக்கிறது.


ஒரு ஆரிய சூழ்சசி அதை 


அடித்து நொறுக்க 


அலப்பறை செய்கிறது.


தமிழ்ப்பகையின் 


பொய் மீசைகள் 


முருக்கேற்றிக்கொண்டு 


மூர்க்கம் வளர்க்கின்றன.


கவனம் கொள் தமிழா!


தமிழ் மண்ணே தான் 


இந்தியா என்ன இந்தியா


உலகமெல்லாம் 


தூவிக்கிடக்கிறது


என்ற 


உண்மை என்றைக்கு


உன்னுள் ஒளி பாய்ச்சப்போகிறது?


உன் ஓலைச்சுவடியை 


முகர்ந்து பார்.


அதில் தெரியும் 


உன் உலகத்தின் வாசனை.


உன் உலகத்தின் 


உள்துடிப்பும் உள் உண‌ர்வும்.


தமிழா!தமிழா!!


மீண்டும் உற்றுக்கேள்.


எங்கோ "பெரு"விலிருந்தும்


அமெரிக்கச் சிவப்பு இந்தியக்குரலிலிருந்தும்


ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய‌


பழங்குடிகளின் 


வேர்வை மணத்திலிருந்தும்


பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு


வசன ஒலிகளிலிருந்தும்


பாரசீக அவெஸ்தா 


வரலாற்றுப்பாட்டுகளிலிருந்தும்


எகிப்து சுமேரிய‌


மற்றும்


எல்லா எழுத்துப்பூச்சிகளின்


ஊர்தல் வரிச்சுவடுகளிலிருந்தும்


உய்த்து உணர்.


தமிழா! தமிழா!!


தமிழ்க்குரல் கேட்கிறதா?




___________________________________________________






2023-02-01

ஏன்?

 


என்ன செய்யப்போகிறாய்?

இது ஒரு சினிமாப்பாடல் வரி.

காதலியை நோக்கி 

தலையை சிலிப்பிக்கொண்டு

பல்லைக்கடித்துக்கொண்டு 

கேட்கும் கேள்வி இது.

ஓ! என்னருமை இளைய யுகமே?

உன் கேள்விகள் எல்லாம்

இந்த முட்டுச்சந்துக்குள் தான்

முடங்கிக்கிடக்கிறதா?

அந்த விளிம்புமுனையில் போய் நின்று

நொறுங்குவதற்குள்

உன்னை முகத்தில் அடித்துவிட்டு

ஓடும் 

அந்த நொடிகளை புறந்தள்ளிவிட்டு

கொஞ்சம் சிந்தனை செய்.

உன்னைச்சுற்றி சுழன்று அடிக்கிறது

நெருப்பின் பெரும்புயல்.

இந்த சமுதாயம் முழுவதுமே

சாம்பல் மேடுகளாய்

எஞ்சி நிற்கப்போகும்

ஒரு நாகரிகப்பேரழிவு

உன் முதுகுப்பக்கம் 

நின்று கொண்டிருக்கிறது.

ஆம்.

என்ன செய்யப்போகிறாய்?

அதே கேள்வி தான்.

நீ மீண்டு கொள்ளவேண்டும்.

இந்த மண்ணை 

இந்த கனவை

இந்த மக்களின்

பேரழிவை

நீ தடுத்தாட்கொள்ளும்

தருணம் இது.

ஏன்?

என்ன ஆச்சு?

இந்த கேள்விக்கும் கூட‌

உன் சுநாமிக்குள் தான்

எல்லாம் இருக்கிறது.

விழித்தெழு!

சிலிர்த்தெழு!

சினந்தெழு!

சீறியெழு!


_________________________________________________________

அகழ்நானூறு 15

 அகழ்நானூறு 15

___________________________________________

சொற்கீரன்




"வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை"

_____________________________________________________


வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை

கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை

எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ

முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை 

கண்டல் அல்லது யாது உற்றனள்.

கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன்

குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!

திரை திரை பாய்ந்து துறை துறை ஊர்ந்து

ஞாலத்து உப்பக்கம் நெடுங்கரை சேர்ந்து

கனைபடு பல் ஒலி பல் தேஅத்தும் ஊடி

மறைபடு மொழிகள் பல ஈண்டு கொணர்ந்து

செறிதமிழ் அடர்த்தி செந்தமிழ் ஈன்று

செம்மை நன்மொழி ஆக்கிய திரைஞர்

திரை இடத்துப் பட்டினம் தந்தனர் தமிழர்.

அன்னவன் நின்னவன் ஆருயிர்த்தமிழன்.

முன்னீர்ப்பரவை முளிஅலை வென்று

திரைவியம் தேட நீலப்படுகை நெடும் ஊழ்

கடாஅ யானை அன்ன எழுந்து அதிரச் சிதைஇ

ஆழ்கடல் ஆளும் தகைமை ஆயிரம் இறந்து

உலகு வியப்ப விண்ணும் அளந்த‌

பெரியோன் என்ன உன்னை ஒருசிறை

பெயர்த்துப் பெயரத் தந்தோன் வரூஉம்.

எறி எல் நாளும் பூக்கும் அவிழ்க்கும் 

அணிநிரல் வென்றிக் கொடி கொண்டு

ஆயிழை உன்னைத் தழீஇயத் தந்திடும்

நெடும்பணைத்தோளொடு விரையும்  மன்னே.

___________________________________________________________