என் மேசையில்
பாதராயணார் ஒரு
பூனைக்குட்டியாய்
உட்கார்ந்திருக்கிறார்...
பிரம்மசூத்திரமாய்.
இந்த சிகரெட் பெட்டியில்
555 சிகரெட்டுகள்.
அதாவது சூத்திரங்கள்.
புகைவளையங்களாய்.
பாஷ்யம் என்று
உடுக்கை அடித்துக்கொண்டிருக்கிறார்
வெகு ஜோராய்
ஆதிசங்கரர்.
கீரியும் பாம்பும்
இன்னும் வெளியிலேயே
வரவில்லை.
இரண்டுமே பிரம்மம் தானாம்.
கேட்டால்
ஒன்று பிரம்மம்
இன்னொன்று "அப்பிரம்மம்"
என்பார்கள்.