" என்பு தோல் போர்த்த"..
-------------------------------------------
மதம்
சாதி
கடவுள்
இவையெல்லாம் என்ன?
மானுடத்தின்
"என்பு தோல் போர்த்த"
உடம்பு மட்டுமே இவை.
உள்ளடக்கமான
உயிர் உள்ளம் அறிவு அன்பு
இவற்றிற்கெல்லாம்
ஒரு கல்லறை கட்டுவதற்கா
இந்த சொற்கள் இங்கே
தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றன.
அந்தக் கல்லறை
உன் கருவறையாய்
மயக்கம் காட்டுவதை எதிர்த்து
ஓ! மானிடமே
விழித்துக்கொள்.
-------------------------------------------------
ருத்ரா
No comments:
Post a Comment