2024-04-24

ஈசல் சிறகுகள்.



ஐனநாயகம்

என்ற சிந்தனை 

பெரும்பான்மையாக

இல்லாத நாடுகளில்

சிறுபான்மையான

சதுரங்க கட்டங்களே

பகடைகள் மூலம்

ஆள்வதற்கு

பவனி வருகின்றன.

இவர்களின் 

பரமபதக்கட்டங்களில்

சாதி மத பாம்புகளே

ஏணிகளை விழுங்கிவிடும்

அனக்கொண்டாக்களாய்

ஆட்சி செலுத்துகின்றன.

இந்த எந்திரங்களின்

தந்திரமான 

இருட்டு மூலைகளில் தான்

வாக்கு ஈசல்களின்

உதிர்ந்த சிறகுகள்

குவிந்து கிடக்கின்றன.

-------------------------------------------

செங்கீரன்.




"பாவம் மனிதர்கள்"



அந்த பெருமாள் கோயில்

பிரகாரங்களில் சிதறிக்கிடந்த

தானியங்களை

வயிறு புடைக்கத் தின்று விட்டு

அந்த மசூதியின் 

உச்சி மாடங்களில் போய்

ஆனந்தமாய்

அடைந்துகொண்டன

புறாக்கள்.

"பக்கூம் பக்கூம்"

என்று 

பேசிக்கொண்டன

"பாவம்...மனிதர்கள்" என்று.

--------------------------------------------சேயோன்.




2024-04-23

சேயோன் கவிதைகள்

 உலக புத்தக தினம்

----------------------------------

சேயோன்.


அறிவு மரத்தின்

நுனிக்கொம்பர் ஏறி

அஃதிறந்தூக்கிய

பின்னே

மனிதனுக்கு

புத்தகங்கள் வெறும்

காகித சடலங்களே.

ஏடுகளும் சிலேட்டுகளும்

எங்கோ எகிறிவிழுந்தன.

"காலிகோ பைண்டு"

கனத்த புத்தகங்களும்

குப்பைத்தொட்டி

இரைப்பைக்குள்ளே

இறந்து பட்டன.

பிஞ்சு மனிதக்குஞ்சுகள் கூட

கை பேசி சொடுக்கலில்

சாட் ஜிபிடியின்

செயற்கை மூளையில்

அண்டங்கள் அனைத்தையும்

அங்குலம் அங்குலமாய்

அளைந்து

விளையாடுகின்றன.

"குவாண்டம்

எண்டாங்கிள்மெண்டில்"

சன்னலைத் திறந்தால்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

குளிர் பூந்தமிழில்

பூச்செண்டு 

நீட்டக்காத்திருக்கும்.

---------------------------------------------




















2024-04-22

தலை எது?வால் எது?

 தலை எது? வால் எது?

---------------------------------------------

ருத்ரா.


ஆதியும்அந்தமும் இல்லாததே

"சனாதனம்" என்பவர்களே

பிரம்மத்தின் 

தலை எது? வால் எது?

அறிந்துகொண்டீரா?

அது 

இரண்டல்ல என்றீர்கள்.

ஒன்றே தான் என்று

சுட்டுவதற்கும்

இயலாது என்றீர்கள்.

அப்புறமும்

நாக்கில் நரம்பின்றி

நாலு வர்ணம் சொல்கின்றீர்.





----------------------------------------------








எத்தனை இரைச்சல்கள்.

எத்தனை இரைச்சல்கள்

-------------------------------------------ருத்ரா.


எத்தனை இரைச்சல்கள்

மந்திரங்கள் என்ற பெயரில்?

எத்தனை யாகங்கள்

உயிர்களைத் தீயிலிட்டு?

எத்தனை பொய்மைகள்

மாயைகளால்

மெருகேற்றப்பட்டு?

போதும் இறைவா!

உன்னைப் பற்றிய ஓர்மை

உனக்கே இல்லாதபோது

எங்களுக்கு எதற்கு

குண்டலினிகளும்

கபாலம் பிளந்து

அந்த "பிரம்மரந்தரங்களும்?"

பாஷ்யங்களின்

வெறும் ஓசை தெறித்த 

மகரந்தங்கள்

மனிதம் அற்ற

மலட்டு வர்ணங்களிலா

"சுப்ரபாத" வெளிச்சங்களை

காட்ட இயலும்?

------------------------------------------







 


2024-04-19

தேர்தல்



இங்கே

பொய்க்கால்

குதிரையாட்டங்கள்

தூள் கிளப்புகின்றன

நிஜக்குதிரைகள்

அங்கே

குதிரைபேரத்திற்கு

அந்த "நாற்காலி"கள்

அருகே காத்திருக்கும்போது.

------------------------------------------------ருத்ரா.


2024-04-12

பட்டாம்பூச்சிகள்


வர்ணாஸ்ரமம்

இல்லாத

வர்ணங்களின் ஆசிரமம்.


பட்டாம்பூச்சிகள்

--------------------------------------

சேயோன்