ஐனநாயகம்
என்ற சிந்தனை
பெரும்பான்மையாக
இல்லாத நாடுகளில்
சிறுபான்மையான
சதுரங்க கட்டங்களே
பகடைகள் மூலம்
ஆள்வதற்கு
பவனி வருகின்றன.
இவர்களின்
பரமபதக்கட்டங்களில்
சாதி மத பாம்புகளே
ஏணிகளை விழுங்கிவிடும்
அனக்கொண்டாக்களாய்
ஆட்சி செலுத்துகின்றன.
இந்த எந்திரங்களின்
தந்திரமான
இருட்டு மூலைகளில் தான்
வாக்கு ஈசல்களின்
உதிர்ந்த சிறகுகள்
குவிந்து கிடக்கின்றன.
-------------------------------------------
செங்கீரன்.