2022-09-30

வைராவி குளம்

 வைராவி குளம்

_____________________________________



"வைராவி குளமா?"

முகநூலில் யாரோ தொட்டுக்

காட்டினார்கள்.

அம்பதுகளின்

அந்த வைர நினைவு 

பளிச்சு களில்

இப்போதும் 

சலவை செய்யப்பட்டு விடுகிறேன்.

எனது தந்தை வழி 

அத்தை அவர்கள்

எங்கள் கல்லிடைக்குறிச்சி

குமாரர் கோவில் தெரு வீட்டுக்கு

வருவார்கள்.

எல அய்யா எசக்கி என்று

வாய் நிறைய 

எங்கள் அப்பாவை

அழைத்துக்கொண்டே தான்

வருவார்கள்.

அந்த உற்சாகத்தை

அன்றைய‌

சிறு பயலாய் ஒரு தீபாவளி

மத்தாப்பூவை 

"பொருத்தி"க்காட்டினால் தான்

புரியும்.

குடமுருட்டி சங்கரன் கோயில் 

ஆடித்தவசு விழாவுக்கு போகும் போது

பெண்களின் கண்களை

கருவிழிகளாய் 

பாதையெல்லாம் விழும் 

கருநாவல் பழங்களோடு

அன்று உவமிக்கத்தெரியாத‌

பொடிப்பயலாய்

அந்த கன்னடியன் 

கால்வாய்க்கரையோரம்

அம்மா இடுப்பில் 

சுமந்துகொண்டு போகும்

கூட்டாஞ்சோற்றின் சூட்டை

மோப்பம் பிடித்துக்கொண்டே

சென்ற நாட்கள் இனி

சென்ற நாட்கள் தான்.

கோவிலுக்கு செல்லும் போது

கால்கள் அந்த‌

நீர் என்னும் பளிங்குப்பாயில்

அளைய அளைய‌

கால்களில் சரசரக்கும் 

அத்தனை கூழாங்கற்களும்

என் வைரகற்கள் அல்லவா?

பற்பசையை 

குழாயிலிருந்து

பிதுக்கிய பின் மீண்டும்

குழாய்க்குள் நுழைக்க முடியுமா?

ஏதோ படத்தில்

நாகேஷ் சொன்ன காமெடி இது.

அப்படி மீண்டும் அந்த‌

பாற்கடலை

நசுங்கிப்போன இந்த வாழ்க்கை 

டியூபுக்குள் 

அடைக்க முடியுமா?

வேண்டும்போதெல்லாம்

அந்த நினைவுகளின்

அமுதக்குழம்பை 

சுவைக்கத்தான் முடியுமா?

நோஸ்டால்ஜிக்

எனும் பழம் நினைவோட்டம்

செறிந்த செர்ரி மரக்கூட்டங்களுக்குள்

நுழைந்து வருவது தான்

என் எழுத்துக்களில் அந்த‌

வைராவிக்குளம் தளும்பி நிற்பதாகக்

காட்டிக்கொண்டே இருக்கும்.

வைராவிகுளமே!

உனக்கு தலபுராணம் பாட‌

தெய்வங்கள் தேவையில்லை.

அந்த பச்சை வயல் விரிப்பும்

மணிமுத்தாறும் தாமிரபரணியும்

இழை ஊடி நெசவு செய்யும்

அந்த அற்புதமுமே போதும்.

அங்கு ஒரு நாள் வருவேன்.

எவனோ வானத்திலிருந்து இறங்கி

குதித்து வருவான்

என் ஓட்டை உடைசல்களோடு 

வியாபாரம் செய்து கொள்ள.

ஈயம்பித்தாளை பேரிச்சம் பழத்துக்கு

போட்டு விடப்போகும் 

இந்த உடம்புக்கூட்டுக்குள்

பாயும் பழம் நினைவுப்பாய்ச்சல்களை

புதுப்பித்துக்கொள்ள‌

நானும் ஒரு நாள்

வைராவி குளம் வருவேன்.


________________________________________________

ருத்ரா இ பரமசிவன்.







 

2022-09-29

பெரியார் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

 

See the source image











பெரியார்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________



தாடி விழுதுகளுடன்

வெண்கதிர் வீச்சு

அறிவொளி தெறிக்க‌

இதோ

கண்டுபிடித்து விட்டோம்

ஒரு காலக்ஸி 

பெயர் பெரியார்

என்றது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி.

தூரம் 

வெகு வெகு அருகில் தான்

தமிழ் நெஞ்ச ஒளி மண்டலங்களே

அவை.

காலம்

உளுத்துப்போன இருள் ஆண்டுகளை

அடித்து துவைக்கவந்த‌

மனிதத்தின் "சுய மரியாதை"யின்

ஒளியாண்டு!


________________________________________

கவிஞர் ருத்ரா


இன்று இதயங்களின் தினம்

 இன்று இதயங்களின் தினம் அல்லவா?

உலகத்தின் எல்லா இதயங்களின்

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்

அறைகளுக்குள் எல்லாம் சென்று

தேடிப்பார்த்து விட்டேன்.

என் இதயத்தை அன்று

அந்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸில்

அவளிடம் தொலைத்தேன்.

அவள் தோழிகள் 

ஒரு பெயரை வைத்துக்கூப்பிட்டதில்

அவள் பெயரை 

உச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பெயரை அழைத்துக்கொண்டே தான்

என் இதயத்துள் அவள் பெயரை

பதியம் இட்டு க்கொடுத்தேன்.

அன்று இழந்த இதயத்தை தான்

இன்று தேடுகிறேன்.

ஒரு கனவில் சொன்னாள்

இந்த தினத்தில்

எல்லா இதயங்களிலும்

மின்னல்களைக்கொண்ட நெய்த‌

பட்டாம்பூச்சியாய்

சிறகடிப்பதாய் சொன்னாள்.

அதைத்தான் இன்னும் தேடிக்கொண்டே

இருக்கிறேன்.

அந்தப் பெயரின் எழுத்துக்கள் 

எந்த இதயத்திலாவது இன்னும்

ஒலிக்கிறதா

என்று தேடிப்பார்க்கிறேன்.

ஓ!  இதயங்களே சொல்லுங்கள்..

அட..அதற்குள் இருட்டிவிட்டதா?

இந்த உலக தினம் முடிந்து விட்டது.

இனி

அடுத்த உலக தினம் வரட்டும்.

என் தேடல் தொடர்கிறது.


_______________________________________

ருத்ரா




2022-09-28

வௌவால் பிரபஞ்சம்

 (4) Flying Bat Nebula was seen by James Webb Space Telescope with exclusive images new - YouTube

"கவுண்ட் டவுண்"

 "கவுண்ட் டவுண்"

________________________________



மனிதா!

உன்னையே நீ

சுருட்டிக்கொண்டு

காணாமல் போய்விடுவதற்கு

கண்டு பிடித்த உனது சொல்

"டெக்னாலஜி"

எல்லா துறைகளிலும்

சந்து பொந்துகளிலும்

மூலை முடுக்குகளிலும்

புழு பூச்சி

மரம் மட்டைகளிலும்

ஏன்

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த நுண்ணுயிரிகளிலும்

இன்னும்

மில்லியன் ஒளியாண்டுகளை 

கடந்து

பல வண்ண முகங்கள் காட்டும்

ஒளி இருள் பிழம்புகளிலும்

அந்த சொல்

ஊடுருவியிருக்கிறது.

மூளைப்பெட்டியை திறக்கும் 

சாவி உன்னிடம்

வந்து விட்டது.

கருமுட்டைகளும் விந்தணுக்களும்

உன் டிஜிடல் கர்ப்பத்துள்

நுழைந்து விட்டன.

என்ன செய்யலாம் இதை வைத்துக்கொண்டு?

பணம் பண்ண வேண்டியது தான்.

பிஞ்சுகள் கூட‌

அரக்கத்தனமான "கேம்ஸ்"களில்

கருகிப்போகின்றன.

கவலையில்லை.

பணம் குவிகிறது.

உலகத்தின் கனிம வளங்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

அழைக்கின்றாய்.

வாருங்கள் இதோ

செவ்வாய்க்கோளில் போய்

நட்சத்திர ஓட்டல்கள் கட்டி

பிரபஞ்ச காக்டெய்லை

கண்ணாடிக்கிண்ணங்களில் ஏந்தி

அருந்தி அருந்தி அனுபவிக்கலாம்.

பில்லியன் பில்லியன் டாலர்களில்

அந்த பயணத்துக்கு டிக்கெட்டுகள்

ரெடி ஆகி அச்சடிக்கப்பட்டு விட்டன.

பில்லியன் கணக்கில் இருக்கும்

மக்களின் 

கனவுகளில் ஆசைகளில்

தீ பற்றி எரிகிறது.

ஆனால்....

எதியோப்பிய சோமாலிய‌

எலும்புக்கூட்டு மனிதர்களின்

குழிவிழுந்த 

பசித்த 

வெறித்த கண்கள்

மண்ணுக்குள் மக்கத்தொடங்கி விட்டன.

ஓ!

டெக்னாலஜியே!

ராட்சச டினோசார்கள்

எலும்பு ஃபாசில்களாய்

மிஞ்சி விட்டது போல்

இந்த மொத்த பூமி உருண்டையின்

எலும்புக்கூட்டு ஃபாசில்கள்

பற்றி

இன்று ஒரு ஏ ஐ சைபோர்க்

குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

மனிதா!மனிதா!

இந்தக்கணினிகள்

உன் ரத்தசிவப்பு அணுக்களில்

நுட்பமான "பைத்தான்"களை

கூடு கட்டிக்கொள்ளுவதற்கு முன்

உன்னையே

உலுக்கிக்கொண்டு

விழித்துக்கொள்.

ரகசியமான ஒரு "கவுண்ட் டவுண்'

உன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு

டிக் டிக் டிக்..

என்கிறதே?

உன் இதய "லப் டப்"களில்

அது சின்க்ரோனைஸ் ஆகும் முன்

விழித்துக்கொள்.

ஆம்

விழித்துக்கொள்.


_________________________________________________________

ருத்ரா

2022-09-27

நாகேஷ்

 நாகேஷ்

_________________________________‍_____

ருத்ரா



சினிமாத் திரை எனும்

வெங்கலக்கடையில் 

ஒரு பூனைபோல் .நுழைந்த யானை

சிரிக்க வைத்து சிரிக்க வைத்து

தன் நகைச்சுவை அங்குசத்தால்

பார்ப்பவர்களை ஆட்சி செய்தது.

படங்கள் ஒவ்வொன்றையும் 

நாம் சொல்லிக்கொண்டே போனால்

நூறு இமயங்களின் சிகரங்களை

ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வர் சுந்தரம்.

அருமையான நடிப்பு 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிப்பு

கொடி கட்டி பறக்கிறது.

நிறைவேறாத காதலை

தேவதாஸ் பிழிந்து பிழிந்து தந்திருக்கிறது

உணர்ச்சியின் எரிமலையிலிருந்து.

சிரிப்பு மூட்டிக்கொண்டே

அதே சோகத்தை வெளிக்கொணர்ந்த‌

நாகேஷ் எங்கோ ஒரு உச்சிக்கு போய் நிற்கிறார்.

அதிலும் ஒரு காட்சி.

காதலிக்கு பூங்கொத்து தருவார்

உற்சாகம் பொங்க.

அவள் காதலிக்க வில்லை என்று 

தெரிந்ததும்

அந்த பூங்கொத்து குப்பைக்கூடைக்குத் தான்

போகும் என்று தெரிந்தும்

இப்போதே குப்பையில் போட்டு விடாதே

என்பதை 

நகைச்சுவை கலந்த சோகத்தோடு சொல்வார்.

ஒரு சிரிப்புக்குள் எங்கோ சொருகிவைத்திருந்த‌

ஒரு சம்மட்டியை எடுத்து

நம் நெஞ்சத்தை நொறுக்கிவிடுவது போல்

காட்டிவிடுவார்.

இதைப்போல எத்தனையோ காட்சிகள்.

அடுத்து திருவிளையாடல்.

சிவாஜியுடன் அந்த கேள்வி பதில்..

நீ கேட்கிறாயா?

நான் கேட்கட்டுமா?

என்று அவர் கேட்டவுடன்

அவர் காட்டும் அந்த பதற்றத்தில் கூட‌

ஒரு பயத்தையும் காட்டுவார்.

அதிலும் அவர் நம்மை குலுங்க குலுங்க‌

சிரிக்க வைத்து விடுவார்.

நடிப்பு என்றால் சோகத்தை தத்துவத்தில்

தோய்த்து தருவது தான்.

அந்த கனமான உணர்ச்சிகளில்

ஒரு சிரிப்பின் இழையையும் 

மெல்லிய மயிலிறகாய் வருடி நம்

இதயத்தின் ஆழத்தையே 

துளைத்துக்கொண்டு விடுவார்

நீர்க்குமிழி என்ற படத்தில்.

மரணம் தன் தோளில் அமர்ந்த போதும்

அந்த சுமையை சிரித்து சிந்திக்க வைக்கும்

நகைச்சுவையால்

அந்த கனபரிமாணத்தை இலேசாக்கி விடுவார்.

இந்த மூன்று படங்களையும் தாண்டி

எப்போதும்

சட்டம் போட்டு சுவரில் மாட்டியிருப்பது போல்

ஒரு படம் உண்டு.

அது

காதலிக்க நேரமில்லை.

என் நினைவுகளில் சிரிப்பு அலைகளாய்

உலா வந்து கொண்டே இருக்கும் படம் அது.

எதைச்சொல்வது?

எதை விடுவது?

அந்தப்படம் வந்த வருடத்திலிருந்து

நேற்று பார்த்த விண்குழல் காட்சிகள் 

வரையும் 

என்னிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 

படம் அதுவே தான்.

டி எஸ் பாலையாவுடன் அவர் அடிக்கும்

லூட்டி ஒன்றே போதும்.

அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்

என்று கணக்கு எடுத்தால்

செஞ்சுரியை தாண்டியிருக்கும் என‌

நினைக்கிறேன்.

அவர் சேட்டைகள்

ஹாலிவுட் நடிகர் "ஜெர்ரி லூயிஸை"

நினைவு படுத்துவதாக இருக்கலாம்.

அவர் ஒரு ஃப்ரேமுக்குள் நிற்பார்.

ஆனால் இவர் நின்று கொண்டிருப்பதே தான்

இங்கு ஃப்ரேம்.

பாலச்சந்தர் அவர்கள் தன் "டைரக் ஷனை"

இவரிடம் கூர் தீட்டிக்கொண்டார்

என்பதே நிஜம்.


_____________________________________________________________


முற்றுப்புள்ளி இல்லாமல்...



ஆதலினால் காதல் செய்வீர்

பாரதி

நறுக்கென்று தலையில் குட்டி

சொல்லி முடித்தான்.

அது என்ன

இப்படி ஜிவ்வென்று ஏறுகிறது?

என்ன கணேசா?

நலம் தானே என்று

ரெண்டு தட்டு தட்டியிருப்பான் அவன்.

அதற்கும்

இப்படித்தான் ஜிவ்வென்று ஏறியிருக்கும்.

திருவல்லிக்கேணி கோவிலில்

அவனுக்கு 

முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

பாரதியின் குயில் பாட்டு

எங்கிருந்தோ கேட்கிறது.

"காதல் காதல் காதல்"

முற்றுப்புள்ளி இல்லாமல்...

_____________________________________________

ருத்ரா

2022-09-26

"இந்த லிங்குக்கு மிக்க நன்றி"



https://www.msn.com/en-in/news/techandscience/watch-live-nasa-crashes-dart-spacecraft-on-asteroid-armageddon-style/ar-AA12gBsn?ocid=msedgntp&cvid=e0d5df53c9d94a44895440de45d5b39a


"இந்த லிங்குக்கு மிக்க நன்றி"

___________________________________________________________________________________



தலையும் தெரியவில்லை.

தலைப்பாகையும் தெரியவில்லை.

தலைக்கு வந்ததை

தலைப்பாகையோடு போயிற்று

என்று 

நமக்கு விளக்கிக்கொண்டிருக்கும் 

இந்த விஞ்ஞானிகளுக்கு

வாருங்கள் போய் 

நாம் ஒரு கும்பமேளா நடத்தலாம்.

அதில் குளித்து முழுகி

அந்த தீட்டைக்கழுவிக்கொள்ளலாம்.


"தீண்டுதல் தீண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல."

______________________________________

ருத்ரா














2022-09-23

மணிமுத்தாறே!

 மணிமுத்தாறே!

_______________________________________________
ருத்ரா


அம்பதுகளின் என் நினைவுப்பரல்களில்
உன் மணிகளும் முத்துக்களும் தான்
என் சிறு வரலாற்றுப்புத்தகத்தில்
கிலுகிலுப்பையை ஆட்டி ஆட்டி
மகிழ்வு ஊட்டுகின்றன.
அந்த பாறைகள்
அந்த சிறு பாலங்கள்
பசுமையான மரக்கூட்டங்கள்
இவற்றின் பின்னணியில்
நீர்ச்சேலையை நெளியவிட்டுக்கொண்டு
ஓடுகின்ற
மணிமுத்தாறே!
அந்தக்காட்சிகள் இன்று
ஏதோ ஒரு வறட்சியின்
எலும்புக்கூடுகளாய்
சிதறிக்கிடக்கின்றனவே.
"கல்பொருது இற‌ங்கும்" உன் அருவி
உயிர்களை தின்னும்
கண்ணுக்குத்தெரியாத ஒரு அரக்கியாய்
காட்சியளிக்கும் நிகழ்வுகளும் உண்டு.
நீரில் வலை கட்டிய போதும்
சில மக்களின் உற்சாகம்
அதையும் மீறி அந்த நீருக்குள்
பலியாகிப்போன சோகங்களையும்
மறக்க இயலாது.
ஓ!
எங்கள் அழகிய மணிமுத்தாறே
உனக்கு வயது இல்லை.
மூப்பு இல்லை.
குன்றா எழில் கசியும் குன்றுகளுடம்
பச்சை உயிர் போர்த்த
உன் சீரிளமை எப்போதும்
புன்னகை சிந்தும்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலயமே
உன் ஒளிர்சிரிப்பை ஏந்திக்கொண்டு
நிற்பதாய்
நான் உணர்ந்திருக்கிறேன்.
எனது பள்ளி திலகர் வித்யாலம்
எனது "பைக்கூட்டையும் புத்தகங்களையும்"
அந்த வழியாய் நான் கடந்து செல்லும்போது
என் மீது செல்லமாய் வீசி எறிந்து
விளையாடுவதாயும் உணர்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்து
நான் பார்த்த முதல் கோவில்
அந்த மணிமுத்தாறு அணைதானே.
ஓ மணிமுத்தாறே!
வயதுகளின் சுமையின் அடியில்
நசுங்கிக்கிடக்கும்
அந்த பட்டாம்பூச்சிச்சிறுவனை
மீண்டும் படபட‌த்துச் சிறகடிக்கச்செய்!
இதோ
உன்னைத்தேடித்தான்
வருகிறேன்.
__________________________________________________________


2022-09-21

அவனே தான் அவன்.

 அவனே தான் அவன்.

________________________________________

ருத்ரா


விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து

கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நம் உலகில் எத்தனை எறும்புகள் உள்ளன?

என்று.

இரண்டு போட்டு அதன் பின்னே

பதினாறு முட்டைகள் போட்டுக்கொள்ளுங்கள்.

அத்தனை எறும்புகளா?

சுறுசுறுப்பு. 

வாழ்கையில் வரிசை முறைகள்

வகுத்துக்கொள்ளும் அறிவு.

நினைத்தால் இந்த உலகத்தையே

வாயில் கவ்விக்கொண்டுக்

கிளம்பிவிடும் உறுதி..

இதெல்லாம் நம்மை 

மலைக்க வைக்கிறது.

இயற்கை இந்த மண்ணையே

ஒரு பரிசோதனைக்கூடம் ஆக்கி

பல உயிர்களை ஆக்கி

அப்புறம் அழித்து

ஏதோ ஒரு உண்மையை

கிண்டி கிழங்கு எடுக்க விரும்புகிறது.

டைனோஸார் எனும் 

உயிர் வடிவங்களை

ஆக்கிப்பார்த்த அதன் வரலாறும்

அவை அழிக்கப்பட்ட விதமும்

ஒரு உண்மையை வீசி எறிந்திருக்கிறது.

இன்று "ஹல்க்" எனும் ஹாலிவுட் படைப்பை

நாம் பார்த்திருக்கிறோம்.

ஆம்.இயற்கை தன்னையே

அப்படி ஒரு கதாநாயகனாக‌

படைத்துக்கொண்டு வாழ வேண்டும்

என்ற கனவைத்தான்

டைனோசார் மூலம் காட்டியிருக்கிறது.

போதும் இந்த விளையாட்டு என்று

பெரும் விண்கல் மற்றும்

பெருமழை பனியுகம் மூலம்

அதை கலைத்துவிட்டது.

உடலை பெரிதாக்கி பூதமாக்கி

வாழ்வதை விட‌

அறிவின் திரட்சியான‌

மூளையை பல்மடங்கு நுட்பமாக்கி

அதைக்கொண்டு 

மனிதர்களைப்படைத்துப்பார்ப்போமே

என்ற பரிசோதனையில்

இறங்கி இருக்கிறது இயற்கை.

அந்த மூளை அதற்குள்

பல பில்லியன் மடங்கு நுட்பங்களை

உருவாக்கிக்கொண்டு விட்டது.

மூளையே ஒரு செயற்கை மூளையை

உருவாக்கி

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

தனக்குள் விழுங்கிக்கொண்டுவிடும்

போலிருக்கிறது.

இயற்கையின் இயற்கை இது.

அதன் உள்குத்து அதற்கே தெரியும்.

விஞ்ஞானத்தின் விஞ்ஞானமே 

அஞ்ஞானம் தான்.

என்ன?

ஆம்!

அறிந்துகொள்ளப்படவேண்டியது

பெரும்பிழம்பாய்

அறிவின் முன்

வழி மறித்து அல்லது வழி கொடுத்து

விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது.

மனிதனின் காலடிச்சுவடுகளில்

தன் காலடிச்சுவடுகளையும் 

பதித்துக்கொண்டு

ஒருவன் பின் தொடர்கிறான்.

பின் தொடர்வது யார்?

கடவுள் தான்.

தான் படைத்த பிரபஞ்சத்தை

அறிந்து பார்க்க ஒரு மூளை வேண்டுமே.

அது மனிதனிடம் தானே இருக்கிறது.

அட! நான் தான் அந்த‌

டி என் ஏ ,ஆர் என் ஏ எனும் 

புதிர்களின் முறுக்குச்சங்கிலியை 

வீசியெறிந்தேன்.

அந்த புதிர்களின் புதிர்களுக்குள்ளும்

கணித சமன்பாடுகள் கண்டவன்

மனிதன் அல்லவா?

விட்டால் "கடவுளையே"

வைரஸ் ஆக்கி வலம் வர 

வைத்து விடுவானே அவன்!

மனிதனின் பயணமும்

அவன் முன்னே இருக்கும்

எல்லையில்லாமல் நீண்டுகிடக்கும்

கால் சுவடுகளை ஒட்டியே தான்

தொடர்கிறது.

அவை அவனுக்கு அறிவு.

அவன் பின்னே கடந்து சென்ற‌

கால் சுவடுகளும் அறிவே தான்.

அறிவு என்பதற்கும்

ஒரு ஓர்மை உண்டு.

அறிவும் அறியாமையும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளி ஒன்று உண்டு.

அந்த சிங்குலாரிடி

பெருவெடிப்பா? கருந்துளையா?

அகற்சியா? ஈர்ப்பா?

இதை இறைவன் அறிந்து கொள்ள‌

மனிதனை பின் தொடர்கிறான்.

மனிதனும் இன்னொரு

பெரு மனிதனைப் பின்தொடர்கிறான்.

மனிதன் கடவுளை கற்பனை செய்தபின்

மீண்டும் தான் பின் தொடர்வது ஒரு இறைவன்

என்று கற்பனை செய்து

அந்த அறிவை 

அவனே கொச்சைப்படுத்திக்கொள்வதை

அவன் விரும்பவில்லை.

ஏனேனில் 

மனிதனும் அறிவும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளியும் அவனே தான்.

அவனே தான் அவன்.


________________________________________________




2022-09-16

பறப்பான்

 

'It's awesome': world's first flying bike makes U.S. debut | Watch (msn.com)

(Thanks for this LINK)


பறப்பான்

__________________________________

ருத்ரா



மனிதன் வெறும்

"காற்றடைத்த பையடா"..இல்லை

காற்றைக்கட்டி ஆளும்

இயற்பியலை

அவன் "சாதனை இறகு" ஆக்கி

தன் தொப்பியில் சூட்டிக்கொண்டான்.

அமெரிக்காவில் பறக்கும் "பைக்"

வலம் வருவதாக செய்தி இதழ்கள்

புகழ் கூறுகின்றன.

மானிடம் வாழ்க.

மானிடம் வெல்க.

இன்னும் 

வெள்ளைக்கழுத்துடைய‌

பருந்தை

கிருஷ்ணர் என்று நாம்

கன்னத்தில் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

புஷ்பக விமானத்தை இன்னும்

நாம் பக்தி மூட்டையில் தான்

கட்டிக்கொண்டு

பஜனை செய்து கொண்டிருக்கிறோம்.

விஸ்வரூபம் ஸ்லோகங்களில் இல்லை.

விஞ்ஞான நூல்களில்

அடர்த்தி கொண்டு அமுங்கி இருக்கிறது.

நூல் அணிவு நூல் அறிவு ஆகாது.

மானிடம் எனும் நம்பிக்கையை

உறுதி ஆக்குவது ஒன்றே வழி.

அப்போது நம்

கல்லுக்கும் சிறகு முளைக்கும்.


______________________________________________



பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

 பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

___________________________________________



மனிதனே

ஐம்பொறிகளின் 

ஆராய்ச்சிக்கூடம் தான்.

தினமும் நடக்கும் 

பரிசோதனைகள் தான்

வாழ்க்கை எனப்படுகிறது.

ஒரு கணித சமன்பாட்டின் தீர்வு

இப்படி ஆரம்பிக்கிறது.

எக்ஸை ஒய் என்போம்.

இறுதியில் இது முரண்பட்டு நிற்கிறது.

எக்ஸ் என்பது ஒய் இல்லை

என்று நிறுவப்படுகிறது.

மறுபடியும்

ஒய்யை எக்ஸ் என்போம்

என்று ஆரம்பிக்கிறோம்.

இதுவும் முரண் பட்டு நிற்கிறது.

முரண்பாட்டின் முரண்பாடு இது.

இது சாத்தியம் இல்லை

எனவே எக்ஸ் இஸ் ஈகுவல் டு ஓய்

என்று 

எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தியரி ஆஃப் நெகேஷன் ஆஃப் நெகேஷன்.

என்று

மார்க்ஸும் ஏங்கல்சும்

பொருள் முதல் வாதம் எனும்

அந்த அரிய "ஜேம்ஸ்வெப்" டெலஸ்கோப்பை

சொற்களின் பொருளுக்கு மிக் மிக 

அருகே 

கொண்டு சென்று விடுகிறார்கள்.

மீண்டும் அந்த‌

ஐம்பொறிக்கூடத்துக்கு வருவோம்.

கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

வாழ்க்கை எனும் துளியினுள்

அந்த வடிவக்கூறுகள் 

நேனோ வாக அங்கே 

இருவரால் ஆராயப்படுகிறது.

கடவுள் மனிதனைத்தேடுகிறது.

மனிதம் கடவுளைத்தேடுகிறது.

இவனுக்கு அவன் கடவுள்.

அவனுக்கு இவன் கடவுள்.

தீசிஸ்..ஆன்டி தீசிஸ்...சிந்தெசிஸ்.

டையலக்டிகல் மெடீரியலிசம்

டார்ச் லைட் அடிக்கிறது.

இப்போது எல்லாம் புரிகிறது.

வர்ணங்கள் இல்லை.

வேதனைகள் இல்லை.

அன்று  "ப்ரவ்தான்" என்பவர்

"வறுமையின் தத்துவம்" என்று

நூல் எழுதினார்.

அதற்கு எதிர் மிரட்டலாக 

அறிவின் கூர்மையான 

வாதங்களைக்கொண்டு

"தத்துவத்தின் வறுமை" என்று

மார்க்ஸ் எழுதினார்.

மனிதனின் மூளைப்பொறிக்குள் தான்

கடவுள் கரு தரித்தான்.


____________________________________________

ருத்ரா

குற்றாலக்குளியல்

 குற்றாலக்குளியல்

_____________________________

ருத்ரா



பிரபஞ்சத்தைக்கரைத்து

நுரையாக்கி

பூக்களாக்கி...

கிச்சு கிச்சு மூட்டுகிறது

இதயத்துள்

மென் காந்தள் வருடல்கள்.

குற்றாலத்தையே 

நெய்து கொடுத்த துண்டு 

இடுப்பில்.

தறிச்சத்தம் மென்மையாய்

தண்ணீர் நூல் வழியலில்.


எங்கிருந்தோ

மரம் செடி கொடி இலை

தளிர் 

பளிங்குப்பாறைகள்

எல்லாம் தடவி விட்டு

என்னையும் தடவுகின்ற‌

மின்னல் துளிகளே.

சில்லிட்டு நுள்ளிவிட்டுப்போகிற‌

அந்த 

திவலைகளில் தெறிக்கிறது

பொங்குமாங்கடலின் ஏக்கம்.

நீலமும் சிவப்புமாய்

கொஞ்ச தூரத்து நீர்ப்படலத்தில்

அந்த மீன் கொத்தி

அந்தக்கெண்டையைக்கவ்விய பின்

மீண்டும் போட்டுவிட்டுப்

போகிறது.

"விழியே!விழியே!

உன்னை உண்ண மனமில்லை" என்று.

இந்த குத்துப்பாறைகளிடையே தான்

முளைக்கிறார்கள்

திரிகூட ராசப்பர்களும்

வைரமுத்துக்களும்.


________________________________________________________


2022-09-14

திரண்டு நில்லுங்கள்

 திரண்டு நில்லுங்கள்

__________________________________________ருத்ரா


இளைஞர்களே!

உங்கள் காதுகளுக்குள்

எத்தனை கிலுகிலுப்பைகள்?

உங்கள் இமையோரங்களில்

ஜிகினாக் கனவுகளின் கூடாரங்கள்

எத்தனை? எத்தனை?

இன்னும் 

அடி குத்து வெட்டு

ஆகாசங்களையே சுருட்டு சுருட்டு

என்று பிசைந்து எடுத்து 

எம்பிக்குதித்து

எத்தனை சொமர்சால்ட்டுகள்?

சூப்பர்ஸ்டார் அரிதாரங்களின்

நயாகரா நீர்வீழ்ச்சிகளில்

சுகமாக தொலைந்து போகிறீர்கள்?

கால ஓட்டங்கள்

உங்களையும் சுமந்து கொண்டுதான்

ஓடுகின்றன.

நெட்ஃப்லிக்ஸ் உங்கள் நுண்பொறிகளில்

மயில் இறகுகள் கொண்டு

கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சத்யஜித்ரே பாணி படங்களின்

கலவையில்

பாகுபலி கிராஃபிக்ஸ்களும்

சேர்ந்து உங்கள்

சினிமாத்தனத்தை தோலுரிக்கத்

துவங்கி விட்டன.

சிட்டிசன்களின் முதுகுக்குப்பின்

நிழல்களாக‌

நெட்டிசன்களாகவும்

நீங்கள் மார்ஃபாசிஸ் பிம்பத்துள்

நன்றாகவே அச்சம் காட்டுகிறீர்கள்.

இந்த சமுதாய மருத்துவத்தில்

போலிகளும் 

பணமூட்டைகளைக்கொண்டு

வக்கிரம் அடைந்த அரசியலை

பிலிம் காட்டும் அபாயங்களையும்

ஓ! இளைஞர்களே!

உங்கள் அறிவின் திட்பத்தின்

நுட்பம் கொண்டு எதிர்க்கத்

திரண்டு நில்லுங்கள்.

நம்பிக்கையின் கொழுந்து நெருப்பில்

நீங்கள் காட்டும் வெளிச்சமே

இங்கு 

எல்லா கனத்த  இருட்டுக் கத‌வுகளையும்

தவிடு பொடியாக்கி விடும்.


_____________________________________________________

 


2022-09-13

கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

 கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

_________________________________‍‍




"காலை வேம்பின் கசப்பு நிழல்"

இந்த ஒரு வரியே கவிதை ஓவியம் தான்.

இல்லாத நாயோடு

இருக்கும் நாய்கள் கட்டிப்புரண்டு

விளையாடுவதாக...

என்ன கூரிய..ஆழ்ந்த சிந்தனை!

ஆனித்தேரோட்டத்தில்

ஆயிரம் ஆயிரம் மக்கள்

பக்தியில் கட்டிப்புரண்டு 

களிப்பது நமக்கு காதலாகி கசிந்து

கண்ணீர் மல்குவது தெரிகிறது.

அந்த இல்லாத இன்னொருவனுக்கு

ஆயிரம் டன் எடையை வைத்து

இழுத்து வேர்த்து

மயிலிறகுச்சாமரத்தில் காற்று வாங்கி....

முற்றுப்புள்ளி அவசியமில்லாத ஒன்று.


________________________________________

ருத்ரா



















வண்ணதாசனின் தரிசனம்.

 வண்ணதாசனின் தரிசனம்.



ஒரு சாவை 

அவர் தரிசனம் செய்ததில்

ஆயிரம் கோயில்கள்

குடி கொண்டிருந்தன.

அந்த உடலை மற்றவர்களோடு

சேர்ந்து தூக்கி கிடத்தியது.

அந்த கால்விரல்களை 

கயிற்றில் முடிச்சு போட்டது.

உயிரற்ற உடலைப்பற்றிய‌

அவரது கவிதை

அத்தனை உயிர்ப்புடன் இருந்தது

சிறு வயதுகளில்

நெய்ப்பந்தம் பிடிக்கும்போது மட்டும்

கூப்பிடுவார்கள்

தாத்தாவுக்கு 

சொர்க்கம் செல்லும் பாதையின்

இருட்டை துடைத்து அழிக்க.

மற்றபடி 

பசங்களா..பக்கத்துலெ வராதீங்கலெ

பயந்திருவீங்க..

வெளயாடப்போங்கலேன்னு

வெரட்டீருவாங்க.

சாவு செய்தியே தீட்டாகி

பக்கத்திலே

குழல்வாய்மொழி சமேத ஒரு

சிவன் கோயிலையே

இழுத்துப்பூட்டி விடுவார்களே.

இந்த நிலையில் 

நீக்கள் சாவும் கூட‌

மனிதன் அழகிய பக்கங்களில்

ஒன்று என்றும்

அவனால் முற்றும் என்று

எழுதிய நாவலின் முற்றுப்புள்ளியை

பார்க்கவே முடியாத 

எழுத்தாண்ட பக்கம் என்றும்

நினைத்திருப்பீர்களோ.

சாவைப்பற்றி 

சுகமாக ஒரு கவிதை எழுத‌

எமனின் மடியையே 

சௌகரியமான ரெக்ளைனிங்க் சேர் ஆக‌

வைத்து எழுதும் வல்லமை பெற்றவர்

நீங்கள்.

முயன்று முயன்று பார்த்து

வலிக்க வைக்க எண்ணியது மரணம்

கவிஞனை!

வாடா! காலால் உன்னை எட்டி 

உதைக்கிறேன்

என்ற அந்த எரிமலைக்கவிஞனின்

எட்டயபுரத்து சுவாசம் 

இன்னும் அடங்கவே இல்லை.

நாம் தான்

நினைவு தின தோரணங்களில்

அவனை 

தொங்க விட்டுக்கொண்டிருக்கிறோம்.

சாவு என்ற புள்ளி

பின்னுக்கே போய்

அந்த மாணிக்க கருப்பையில்

சுடர் பூத்ததையும்

தரிசனம் செய்பவன் 

கவிஞன் எனப்படுகிறான்.


______________________________________________

ருத்ரா



2022-09-12

கழச்சி

 தாசாலில் இருந்து கொண்டு

கால்களை நீட்டி

ஒரு சௌகரியத்தில் அமர்ந்து

அடுத்த வீட்டு

மீனாட்சி அக்காவுடன்

என் அக்காவும்

கழச்சி ஆடுவாள்.

தங்க அதலி செடியின் 

மஞ்சள் பூவும் 

அதன் பச்சைக்காய்களும் கூட‌

அவர்களோடு

பாட்டுப்பாடி ஆடும்.

அந்த பச்சைக்காய்களின்

பச்சநாவிக்கொட்டைகளா

இந்த உல்லாச விளையாட்டுக்குள்

பாத்திரம் வகிக்கின்றன?

அமுதமும் நஞ்சும் உடன்பிறப்புகள் தானே

பாற்கடல் பாசுரத்தானுக்கு.

பாட்டில் புராணம் கூட வரும்.

ஏன்

அந்த இந்திரனுக்கு

ஆயிரம் கண் முளைத்த 

பிலாக்கணங்கள் கூட வரும்.

அந்த தாஸாலில் 

கழச்சிகளாய் கலீர் கலீர்

என்று ஒலிப்பது

இப்போது வெறும் வயதுகளாய்

கரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.


____________________________________________

ருத்ரா

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

  வாழ்க்கையை

வாழ்வதற்குப்பதில்

அதை 

கவிதை சிறுகதை

நாவல் என்று

நறுக் என்று கடித்தோ

நாவல் என்று

பல்லில் கடித்து

சவ்வு போல் இழுத்து 

பீட்ஸா தின்பது போல்

தின்றோ

ரசிக்கலாம்.

இசை ஆல்பங்கள் என்று

லட்சக்கணக்கில்  கோடிக்கணக்கில்

ஸரிகமபதிநிஸவை

பதினியில் நொங்குவெட்டிப்போட்டு

அந்த பனையோலைப்பட்டையில்

உறிஞ்சுவது போல்

ருசிக்கலாம்.

இன்னும் கண்ணாடிப்புட்டி

சொர்க்கங்கள் இருக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் கிளிக்குகளில்

வாழ்க்கையின் காமிரா பிம்பங்களை

உருட்டிப்பிசைந்து உண்ணலாம்.

இதற்கு மேல்..

வாழ்க்கை என்றால்

வெறும் மன அடுக்குகள்.

அதன் ஹாலுசினேஷ சிமிட்டல்கள்

ஃப்ராய்டிஸ உட்பிறாண்டல்கள்..

இல்லாவிட்டால்

மாண்டூக்ய உபநிஷத காரிகைக்கு

உள் நுழைந்து 

முடக்கென்று பிடித்துக்கொண்ட‌ 

சிந்தனைச்சுளுக்குகளை

நீவி விடும் கௌடபாதன் வரிகள்..

தொடாமலேயே

சிந்தனை செயல் அறிவு உணர்வு

ஆகியவற்றால் தொடாமல் தொடுவது எனும்

"அஸ்பரிச யோகம்"...

ஆம்..

வாழாமலேயே வாழ்வது...

சரி தான்

அந்த முட்டை அப்படியே இருக்கட்டும்.

அதிலிருந்து

இந்த பிரபஞ்சங்கள் சிறகு முட்டிக்கொண்டு

வெளி வரட்டும்...

சரியா..

வாழ்க்கை எனும் அது

எப்படியேனும் வாழட்டும்..

அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே

நமது வேலை..

அல்லது இலக்கியம் 

அல்லது தத்துவம்

அல்லது

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

சமுதாயம்..

இதன் ரம்ப நாக்குகள்

அறுத்து தள்ளும்

அவலங்களின் சிதிலங்களின்

சித்திரங்கள் 

ரத்த வண்ணத்தில் மட்டுமே

வலியை வடித்துக்கொண்டிருக்கட்டும்.


_________________________________________________

ருத்ரா

2022-09-11

திரைச்சீலை

 


சன்னலுக்கு 

பூப்போட்ட துணியில்

திரைச்சீலை மாட்டியிருந்தது

புதிதாய்.

வானம் வெட்கப்பட்டது 

கண்டாங்கிச்சீலை 

உடுத்திக்கொண்டது போல்.

பறவைகளும் அந்த வண்ணக்கிளையில்

கூடு கட்டிக்கொள்ளத் தவித்தன.

உள்ளே வந்துவிட்ட‌

பட்டாம்பூச்சிகளும் மலர்களைத்தேடின.

சிறகுகளில் ஒட்டியிருந்த‌

மகரந்தங்களை

சன்னல் கம்பிகளில்

உதிர்த்துவிட்டுப்போயின.

பூக்கள் மீது

மண்ணாங்கட்டிகளுக்கும்

இங்கு மோகம் தான்.

சன்னலை ஒட்டியிருந்த அந்த‌

மேஜையில்

என் பேனாவும் காகிதமும் மட்டுமே

மலடு தட்டிக்கிடந்தன.


_______________________________________________

ருத்ரா

2022-09-05

தீர்வு

 தீர்வு

____________________________________________‍

ருத்ரா



அந்த பாழடைந்த மூலையில்

நூலாம்படைகளின் சித்திரம்.

தூரிகை

கண்ணுக்குத்தெரியாமல்

வண்ணங்கள் ஏதும் குழைக்காமல்

அந்த கோட்டோவியமே

நம் நிலை காட்டும் ஓவியம்.

எத்தனைப் பூச்சிகளை

சுருட்டி சுருட்டிப்போட்டு

அந்த சிலந்தி விழுங்கியிருக்கிறது.

சாதியாக‌

மதமாக‌

சடங்குகளாக‌

சாஸ்திரங்களாக‌

மந்திரக்கூப்பாடுகளாக‌

இந்த மக்கள் எல்லாம்

இந்த மாயவலையில் 

சுருட்டப்படுகிறார்கள்.

இத்தனை நூற்றாண்டுகளாக‌

இந்த பின்னலும் நெசவும்

மூடத்தனத்தில் முடங்கிய நம்

சரித்திரங்களையே 

சின்னாபின்ங்களின்

சித்திரங்கள் ஆக்கியிருக்கின்றன.

அந்த பாழடைந்த மூலைகளில்

இதோ நம்

பகுத்தறிவு தீப் பந்தங்களைப்

பிடியுங்கள்.

விட்டால் இந்த சாணக்கிய சிலந்திகள்

விடிவின் வாசல் திறக்கும்

சூரியன்கள் மீதே

ஒட்டடை படர்ந்து

நம்மை 

அறியாமை இருட்டில் தள்ளிவிடும்.

விழித்தெழு தமிழா!

இனி உன் குரலே 

யாவற்றுக்கும் தீர்வு.


______________________________________________‍‍









2022-09-04

எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்

__________________________________________________



கடவுள் என்பதை 

மனிதனே  உருவாக்கினான்.

மனிதன் முதன் முதலில் 

அறிவு கொண்டு சிந்திக்க தொடங்கிய போது

இது என்ன? 

அது ஏன்? 

இது எப்படி? 

என்ற கேள்விகளால் துளைக்கப்பட்டான்.

எல்லாம் எப்படி தொடங்கியது 

என்பதில் தான் 

அவன் தேங்கிபோனான்.

அது செயற்கையான கொள்ளுதல் (கொள்கை)

ஆக இருக்கும் போது 

இதை வைத்துக்கொள்ளுவோம் என்று

தன் கைப்பிடிக்குள் (பிண்டம்) ளிருந்து 

ஒன்றை உருவாக்கினான். 

அப்படித்தேங்கியவர்களே 

கோவில் என்றும் சிலை என்றும் 

கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முழு மனிதர்களாக 

மேற்பட்ட கேள்விகளை 

இன்னும் கேட்டுக்கொண்டிருப்பவர்களே

இந்த உலக வாழ்க்கையின் வளர்ச்சியை 

உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களுடைய செயற்கை செட்டிங்குகளே

இந்த மதங்கள்.

இந்த பொ(ய்)ம்மைகளை வைத்து 

முதிர்ச்சி அடையாத 

இவர்கள் விளையாடலாம்.

ஆனால் பொம்மை ஆயுதங்களை 

உண்மை ஆயுதங்கள் ஆக்கி 

மனிதர்களை பலிகொள்ளும் அளவுக்கு 

"கெட்ட போரிடும்"நிகழ்வுகளில் வீழ்வது 

மனிதப்பரிமாணத்தின் 

தலைகீழ் வீழ்ச்சி.

இது சாதாரண வீழ்ச்சி அல்ல‌

ஒரு நயாகரா வீழ்ச்சி.

பாருங்கள் அதன் குதியாட்டங்களை.

இரைச்சல்காடுகளில்

அமுங்கிப்போனவை 

மெல்லிய உண்மைகளே.

மனிதனே கடவுள்.

மனிதனுக்கு மனிதனாய்

வாழும் அந்த அன்பு மின்சாரத்தின்

பாய்மமே பிரம்மம்.

அப்படி என்றால் கடவுள் என்று

ஒன்றுமே இல்லையா?

ஆம்.

நான் சொன்னால் நீ கோபம் கொள்ளுவாய்.

நீயே

சொல்லிக்கொள்ளேன்.

ஆம்...

இல்லை.



__________________________________________

ருத்ரா

சப்பரம்

சப்பரம்

___________________________________________

ருத்ரா



ஒவ்வொரு மணித்துளியும்

சொட்டு சொட்டாய்

முற்றுப்புள்ளி வைக்கிறது.

இடைவெளியைக்கூட‌

லட்சக்கணக்காய் கூறு போடுகிறது

இயற்கை எனும் இயற்பியல்.

அந்த நுண்துளிக்காலத்தில்

நுண்ணுயிரிகளின்

பிரபஞ்சங்கள் பல கோடி.

எதை அடையாளம் காண்பது.

ஆம்.

திரும்பிப்போக‌

வீடு மறந்து விட்டது

கடவுளுக்கு.

மனிதன் வழி காட்டுகிறான்

தன் கணித நுட்பத்தால்.

"எண்கள் என்பவை எல்லை கடந்தது.

அதில் பகா எண் எனும் 

ப்ரைம் நம்பர்களின்

இறுதி எண்ணில் தான் 

உங்கள் வீடு" என்றான்.

கடவுளும் மலைத்தது போல் நின்றார்.

அப்புறம் 

சிரித்துக்க்கொண்டே சொன்னார்.

அந்த வீடு நீ தான்.

அதில் எப்போது நுழைவாயோ

அதில் தான் நானும் நுழைவேன்."

அவனது "வாயேஜர்"

இப்போது தான்

சூரியன் வீட்டு புழக்கடையைத்

தாண்டியிருக்கிறது.

"ம்ம்ம் சப்பரம் புறப்படட்டும்."

குரல்கள் குதூகலித்தன.

கோவிலிலிருந்து 

சாமி ஊர்வலம் துவங்கியது.


___________________________________________________ 

2022-09-03

உனக்கு புரிந்து போயிருக்கும்

 எப்படி வேண்டுமானலும் 

எதற்கு வேண்டுமானாலும்

கவலைப்படு.

கவலைப்படவேண்டுமே 

என்ற 

கவலையே இல்லாமல்

கவலைப்படு.

கவலைகள் அடர் மழை தான்.

இந்தக் கவலையையே

குடையாக்கிக்கொள்.

கொஞ்ச நாளில் 

உன் அகராதியே மாறிப்போகும்.

எந்தச்சொல்லுக்கு

நீ அர்த்தம் தேடினாலும்

அது கவலை என்றே

அர்த்தம் சொல்லும்.

இப்போது தான்

ஒரு சொல்லின் அர்த்தம்

அகராதியே இல்லாமல்

உனக்கு புரிந்து போயிருக்கும்.

அது

"வாழ்க்கை"


___________________________________________________

ருத்ரா

2022-09-02

புழுக்கூடு உடைந்தது.

 புழுக்கூடு உடைந்தது.

______________________



கடவுள் 

ஒரு சுகமான தலையணை.

சூரியக்கதிர்கள்

மயில்பீலிகளாய் வந்து

சன்னல் கம்பிகளை

முத்தமிட்டு

என் முகத்திலும் 

அது நிழலாடும்போது

புரிகிறது

இரவெல்லாம் அந்த தலையணையில்

பள்ளம் விழுந்து

என்னோடு புரண்டு கொண்டிருந்தது

கடவுள் தான் என்று.

இவ்வளவு காலம் இப்படியிருந்த‌

தலையணையின் பள்ளத்தாக்கில்

ஒரு நாள் திடீரென்று

ரோஜாக்களின் மழை?

அதில் கிளு கிளுப்பாய்

சிரிப்பொலிகள்.

ஓ!

இது அவள்.

அந்த பேருந்து நிறுத்தத்தில்

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை.

கடவுள் கட கடவென்று சிரித்தார்.

நண்பா!

இது நான் செய்த புதிய ஏற்பாடு.

அந்த பழைய ஏற்பாடு போதும்.

தலையணயில் ஒரு ஈடன் தோட்டம்

உனக்கு 

ஒரு புதிய பூவை வீசியிருக்கிறது.

மகரந்தங்கள் பரிமாறிக்கொள்ளட்டும்.

இந்த மூளியான வெளியிலிருந்து

நான் எறிந்த மலர்களின் ஏணி இது.

உயிர்ப்பூவின் நாளம் 

அறுபடுவதற்கு நீ அனுப்பப்படவில்லை.

மகிழ்ச்சியாய் இரு.

மனிதம் எனும் முதல் குமிழிப்பூ

அதிலிருந்து தான்

இதழ் விடுகிறது.

புழுக்கூடு உடைந்தது.

வண்ணச்சிறகுகள் வானம் நிரவட்டும்.

போய் வருகிறேன்.

இப்போது தலையணை மறைந்து போனது.

கனவு மேகங்களின் 

பஞ்சடைத்த தலையண தான்

எப்போதும்.

அவள் சிரிப்பில் புல்லரித்துப்போய்...

புரண்டு கொண்டிருக்கிறேன்.

சூரியன் சுள்ளென்று கடித்தான்

கட்டெறும்பு போல்


____________________________________________________

ருத்ரா



தேங்காய்களின் உலகதினம்

 தேங்காய்களின் உலகதினம்

___________________________________

ருத்ரா



உலகத்தேங்காய்களே!

அதற்கு முன் நீங்கள்

இளநீர்க்காய்கள்.

அதற்கு முன் 

நீங்கள் தென்னை மரங்கள்.

உள்ளே குலுங்குவது

இனிக்கின்ற வெறும்

தண்ணீர் அல்ல.

ஈழத்தமிழர்களின் 

லட்சம் படுகொலைகளுக்கு

இன்னும் 

வடிக்கின்ற கண்ணீர் தான் அது

என்று

ஓ உலகத்தேங்காய்களே

உங்களுக்கு ஓர்மை இல்லையோ?


_____________________________________________


அரிதாரம் பூசுகின்றது

 


சொட்டு சொட்டாய் 

என் மீது உதிர்ந்து கொண்டிருக்கிறது.

அதை

பேனாவுக்குள் அடைத்து

அல்லது 

விசைப்பலகையில் 

தட்டச்சுக்குள் கோர்த்து

மாலை தொடுக்கிறேன்.

எழுத்துக்குள் ரசம் பாய்ச்சி

ஒரு கண்ணாடி பிம்பமாய்

என்னைக் காட்டிக்கொண்டேயிருக்கிறது.

அங்கங்கே திட்டு திட்டாய்

ரசம் இல்லாத இடத்தில்

இன்னொரு முகம்

தெரிகிறது.

அது யார்?

அது ஏன் தெரியவேண்டும்?

சிரிப்பு தெரிகிறது.

அதன் அழைப்பின் சுழிப்பில்

நீலக்கடலும் நீலவானமும்

கலந்து கொடுத்த காக்டெய்லில்

கலர் கலர் கனவுகள்

இமை விளிம்பில் 

அரிதாரம் பூசுகின்றது


______________________________________________

ருத்ரா

2022-09-01

"இன்பச்சாறு"


ஏன் புலம்புகின்றீர்கள்?

எதற்காக இந்த‌

ஒப்பாரியும் அழுகையும்?

அழுகை என்பது எதிர்மறை.

இதனை நேர் மறையாக்க‌

அந்த ஏழுகடல் கண்ணீர்

அத்தனையயும் அல்லவா

இறைத்தாக வேண்டும்.

நேர் என்ன?எதிர் என்ன?

எல்லாம் நலமாக இருந்தால்

வண்ண மயில்  முருகன் 

அழகோ அழகு தான்.

உள்ளம் கொஞ்சம் குப்புறக்கவிழ்ந்தாலும்

எரிச்சலில்

இந்த ரெண்டு பொண்டாட்டிக்காரனை 

கும்பிட்டு என்ன லாபம் என்போம்.

கடவுளுக்கு தாடி மீசை

கொம்பு பல் மழு ஆயுதம்

கூடவே இரண்டு மூன்று

பொண்டாட்டிகள்...

இதெல்லாம்

நம் மனத்து அரக்கத்தனங்கள்.

நம் மனதுகளையெல்லாம் கழற்றி

அடித்துத்துவைத்து காயப்போட்டு

மடித்து எடுத்து வைக்க வேண்டும்.

புத்தகங்களும் கூகிள்களும் போதும்.

சிறு பிள்ளை விளையாட்டுக்கு

மாத்திரமே

கோவில்களும் கும்பாபிஷேகங்களும்.

இப்போது இது கோரைப்பல் காட்டி

பலி கேட்கிறது.

மத முக்த் பாரதம் தான் வேண்டும்.

இல்லாவிட்டால்

காணி நிலம் வேன்டும்..

பத்து பதினைந்து தென்னை மரங்கள் 

வேண்டும்.

அதனூடு முத்துச்சுடர் போல்

முழு நிலா வரவேண்டும்...

என்றெல்லாம் 

எழுத்தைப்பிழிந்து "இன்பச்சாறு"

குடிக்கலாம்.


__________________________________________________

ருத்ரா


மாய அம்பு.

 


ராவணன்களால் தானே

இங்கே ராமனுக்கு மதிப்பு.

"ராம்லீலாவில் 

ராவணன்களை கொளுத்திய பிறகு

ராமர் கோயிலுக்குள் இனி

ராவணன் சாம்பல் தானே மிச்சம்.

இப்போது

இவர்களின் ராமருடைய அம்புக்கு 

வதம் ஆவது 

இந்த மக்களே மக்களே மக்களே தான்.

பெட்ரோல் விலையே 

ராமனின் 

அந்த மாய அம்பு.


_________________________________ருத்ரா

20.10.2021

கருத்து தெரிவி

 கருத்து தெரிவி

_______________________________

Facebook

எதை தெரிவிப்பது?

போதும்.

எழுபத்திஐந்து ஆண்டுகள் 

ஆகிவிட்டன.

அந்தக்கொடியை சுருட்டி மடக்கி

வைத்து விட்டு

இன்னும் நூறாண்டுகளுக்கு

முதலிலிருந்தே

தொடங்க வேண்டும்.

நம்மை எதிர்த்து

நமது போராட்டத்தை.

மூக்கிலிருந்து வழியும்

சளியோடும்

முழு நிர்வாணத்துக்கு

நழுவும் 

அரை டவுசரோடும்

அந்த 

தலைச்சுமை ஏந்தி நிற்கும்

செல்வங்களுக்கும்

நம் பொருளாதாரத்துக்கும்

எந்த சம்பந்தமும் இல்லை

என்று

நம் பொட்டில் அறைகிறது

இந்த காட்சி.

அந்த அன்பரின் அரவணைப்பு

சட்டென்று விழும் 

நம் கண்ணீர்த்துளிகளை

துடைத்து விடுகிறது.

___________________________ருத்ரா



தவளைச் சத்தங்கள்

 தவளைச் சத்தங்கள்

_____________________________________

ருத்ரா




ஹை வேயா?

அனக்கொண்டாவா?

ஏழைகளின் துண்டு துண்டு

நிலங்கள் கூட 

விழுங்கப்பட்டு விட்டனவே.


________________________________________1



பெட்ரோல் விலையிலா>

சிலிண்டர் விலையிலா?

ஓட்டல் இட்லி விலையிலா?

மூச்சு இழுத்துக்கொண்டிருக்கிறதே

என்று

மருத்துவ மனைக்குள் போனால்

அந்த "படுக்கை"க் கட்டணத்திலா?

எதில் இருக்கிறான்

நரகாசுரன்?

இந்த தீபாவளிக்குள்ளாவது

சொல்லிவிடுங்களேன்.


____________________________________________2



2024 என்று

பீதி கிளம்பிக்கொண்டிருக்கிறதே.

அந்த‌

"ஃபேண்டம் கேலக்சி"

நம் தலையில் வந்து

விழுந்திடுமோ?


____________________________________________3

சன்னல் வழியே

  சன்னல் வழியே 

-------------------------------------------------------------------------------

ருத்ரா 



சன்னல் வழியே

ஒரு நீல சதுரமாய் வெட்டியெடுத்த‌

வானம் என் காதுகளில்

கிசு கிசுத்தது.

எங்கோ எதிலோ ஒரு 

மாங்கிளையிலிருந்து

ஒரு மைனா 

இந்த பிரபஞ்சத்தின் 

ஜியாமெட்ரியின் கணித சூத்திரத்தை 

சொல்லி சொல்லிகாட்டியது.

மனிதம் எனும் 

அந்த மத்தாப்பு வெளிச்சத்தின் 

வண்ணம் காட்டியது.

சாய்வு நாற்காலியின் 

அரைப்படுக்கை நிலையிலும் 

என் கனவுக்கு முதுகுத்தண்டு 

இன்னும் முறியவில்லை.

அது ஏன் 

தனி மனிதன் கூட்டமாகும்போது 

வெறும் மந்தையாகின்றான்.?

ஈசல்கள் உதிர்த்த 

இறக்கை குப்பைகளாகின்றான்?

"டப்" என்று ஒரு சத்தம்.

என்னவென்று சன்னல் வழியே நோக்கினேன்.

ஒரு காக்கை மின்சாரக்கம்பத்திலிருந்து 

செத்து விழுந்தது.

மறுகணம் 

ஒன்று ,இரண்டு ,மூன்று...என்று 

காக்கைகளின் எண்ணிக்கை 

வானத்தையே விழுங்கும் சமுத்திரம் ஆனது.

அது வெறும் 

இந்து மகா சமுத்திரம்  அல்ல.

இந்த மண்ணின் அடிவயிற்று 

சீற்றங்களின் லாவாக்களின் 

கருப்பு இறக்கைகளின் அலைவிரிப்புகள்.

போதும் 

எங்களுக்கு கிளிகளும் மயில்களும் வேண்டாம்.

இந்தக்காக்கைசிறகுகளே வேண்டும்.

காக்கைச்சிறகின் அந்த சிவப்பு நந்தலாலாக்கள் 

அணிவகுத்தால் 

இந்த கடப்பாரைகளும் புல்டோசர்களும் 

தவிடு பொடியாகும்.


-------------------------------------------------------------------------------------