2022-09-16

பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

 பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

___________________________________________



மனிதனே

ஐம்பொறிகளின் 

ஆராய்ச்சிக்கூடம் தான்.

தினமும் நடக்கும் 

பரிசோதனைகள் தான்

வாழ்க்கை எனப்படுகிறது.

ஒரு கணித சமன்பாட்டின் தீர்வு

இப்படி ஆரம்பிக்கிறது.

எக்ஸை ஒய் என்போம்.

இறுதியில் இது முரண்பட்டு நிற்கிறது.

எக்ஸ் என்பது ஒய் இல்லை

என்று நிறுவப்படுகிறது.

மறுபடியும்

ஒய்யை எக்ஸ் என்போம்

என்று ஆரம்பிக்கிறோம்.

இதுவும் முரண் பட்டு நிற்கிறது.

முரண்பாட்டின் முரண்பாடு இது.

இது சாத்தியம் இல்லை

எனவே எக்ஸ் இஸ் ஈகுவல் டு ஓய்

என்று 

எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தியரி ஆஃப் நெகேஷன் ஆஃப் நெகேஷன்.

என்று

மார்க்ஸும் ஏங்கல்சும்

பொருள் முதல் வாதம் எனும்

அந்த அரிய "ஜேம்ஸ்வெப்" டெலஸ்கோப்பை

சொற்களின் பொருளுக்கு மிக் மிக 

அருகே 

கொண்டு சென்று விடுகிறார்கள்.

மீண்டும் அந்த‌

ஐம்பொறிக்கூடத்துக்கு வருவோம்.

கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

வாழ்க்கை எனும் துளியினுள்

அந்த வடிவக்கூறுகள் 

நேனோ வாக அங்கே 

இருவரால் ஆராயப்படுகிறது.

கடவுள் மனிதனைத்தேடுகிறது.

மனிதம் கடவுளைத்தேடுகிறது.

இவனுக்கு அவன் கடவுள்.

அவனுக்கு இவன் கடவுள்.

தீசிஸ்..ஆன்டி தீசிஸ்...சிந்தெசிஸ்.

டையலக்டிகல் மெடீரியலிசம்

டார்ச் லைட் அடிக்கிறது.

இப்போது எல்லாம் புரிகிறது.

வர்ணங்கள் இல்லை.

வேதனைகள் இல்லை.

அன்று  "ப்ரவ்தான்" என்பவர்

"வறுமையின் தத்துவம்" என்று

நூல் எழுதினார்.

அதற்கு எதிர் மிரட்டலாக 

அறிவின் கூர்மையான 

வாதங்களைக்கொண்டு

"தத்துவத்தின் வறுமை" என்று

மார்க்ஸ் எழுதினார்.

மனிதனின் மூளைப்பொறிக்குள் தான்

கடவுள் கரு தரித்தான்.


____________________________________________

ருத்ரா

2 comments:

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே

ruthraavinkavithaikal.blogspot.com said...

மிக்க நன்றி