2022-09-01

கருத்து தெரிவி

 கருத்து தெரிவி

_______________________________

Facebook

எதை தெரிவிப்பது?

போதும்.

எழுபத்திஐந்து ஆண்டுகள் 

ஆகிவிட்டன.

அந்தக்கொடியை சுருட்டி மடக்கி

வைத்து விட்டு

இன்னும் நூறாண்டுகளுக்கு

முதலிலிருந்தே

தொடங்க வேண்டும்.

நம்மை எதிர்த்து

நமது போராட்டத்தை.

மூக்கிலிருந்து வழியும்

சளியோடும்

முழு நிர்வாணத்துக்கு

நழுவும் 

அரை டவுசரோடும்

அந்த 

தலைச்சுமை ஏந்தி நிற்கும்

செல்வங்களுக்கும்

நம் பொருளாதாரத்துக்கும்

எந்த சம்பந்தமும் இல்லை

என்று

நம் பொட்டில் அறைகிறது

இந்த காட்சி.

அந்த அன்பரின் அரவணைப்பு

சட்டென்று விழும் 

நம் கண்ணீர்த்துளிகளை

துடைத்து விடுகிறது.

___________________________ருத்ரா



No comments: