ஒரு நாவல்
___________________________
கல்லாலன்.
புத்தகத்தை எடுத்தால்
நாவல் நம்மை
கரைத்து விடுகிறது.
வரிகளுக்குள்
பிறகு அதன்
சொற்களுக்குள்
நாம்
பதியம் போடப்பட்டு
காகித வானத்தில்
மகரந்த சேர்க்கையின்
மத்தாப்பூக்களாய்
மூளிக்கனவுகளில்
முளை விடுகின்றோம்.
கதையின் பாத்திரங்கள்
கட புட என்ற
சத்தம் எழுப்பிய போதும்
காதலும் பெண்ணும் கலந்த
ரசாயனத்தில்
அந்த எழுத்தாளனின்
சொல் வெட்டுகளே
நம் வாழ்க்கைக்குள் விழுந்த
கல் வெட்டுக்கள்.
உதாரணம் சொல்லுங்கள்
என்கிறீர்களா?
அந்த "மோகமுள்"
இன்னும் தைத்துக்கொண்டே
இருக்கிறது.
வானத்தை அண்ணாந்து
பார்த்தாலும்
அந்த வானவில்லின் ரத்தம்
ஏழு வர்ணங்களில்
சொட்டிக்கொண்டே இருக்கிறது.
_________________________________________________
No comments:
Post a Comment