அச்சமில்லை அச்சமில்லை.
_______________________________
சேயோன்.
அரைக்கால்
டிகிரி கோணத்தில்
அந்த ஓரவிழி
என்னைச்சுருட்டிக்கொண்டு
விட்டது.
முகம் தெரியாது.
அகம் தெரியாது.
எந்த
குறுந்தொகையும்
கலித்தைகையும்
கொண்டு
அவள் முகத்தை ஒற்றிகொள்வது.
எதையோ தவறவிட்டு
அவள் ஓடிவிட்டாள்.
அருகில் பார்த்தேன்.
கசங்கிய கைக்குட்டை
கலை வேலைப்பாட்டுடன் தான்.
தொடவே பயம்.
என்ன செய்வது?
திரும்பி விட்டேன்.
விடிய விடிய
ஜேம்ஸ்வெப் தொலை நோக்கிப்
புகைப்படங்கள் போல்
அத்தனை கேலக்சிகளும்
பிசைந்து கொண்டு
என் இதயம் நுழைந்தது
அவள் முகத்தோடு.
__________________________________________
No comments:
Post a Comment