தாலாட்டு
___________________________________
என்னைத்தாலாட்ட
ஆரம்பித்துவிட்டாய்
உன் நினைவுகளால்.
மாமன் அடித்தானோ?
மாமி அடித்தாளோ?
பாசத்தைப்பிழிந்து காட்ட
இந்த மாமூல் கேள்விகளில்
தேங்கிக்கிடக்கும்
இசையமைப்புகளுக்கு
அமைவான
அம்மாவின் மியூசிக் நோட் ஷீட்டுகளை
அந்த ஆண்டவனாலும்
திருடிக்கொண்டு விடமுடியாது.
உன்னைப்பற்றிய பகல் நேரத்து
சொப்பனங்களில்
அப்ப்டித்தான் சொக்கி சொக்கி
விழுகிறேன் போலிருக்கிறது.
கொலவெறி கொலவெறி என்று
யாரோ ஒரு சினிமாக்காரர்
பாடிய அந்த சாங்க் புக் வரிகள்
அப்போதைய
ஜனாதிபதி மாளிகை வரைக்கும்
அலையடித்ததாக
சொல்லுகிறார்களே.
அது போல் தான் உன் தாலாட்டு
இந்த மொட்டைவெயிலுக்கும்
குஞ்சம் கட்டி அழகு பார்க்கிறது.
இந்த சவலைப்பிள்ளை
இப்படியே கத்திக்கொண்டு
கிடக்கவேண்டியது தான்
உன்னுடனான
என் அடுத்த சந்திப்பு வரை.
___________________________________
சேயோன்.
No comments:
Post a Comment