எப்போதாவது
எதையாவது கவிதை என்று
நான் எழுதும்போது
மட்டையாகிக்கிடக்கும்
அந்த தருணங்களின்
மராமரங்கள் வழியே
என் மீது பெய்தது
அம்பு மழை.
அந்த ரத்த வெள்ளத்திற்குப் பிறகு
நான் கவிதையின்
அந்த சிவப்பு அணுக்களை
தேடிச்செல்ல முடிவதில்லை.
_________________________________________
கல்லாலன்
No comments:
Post a Comment