2024-07-11

மராமரங்கள்

 


எப்போதாவது

எதையாவது கவிதை என்று

நான் எழுதும்போது

மட்டையாகிக்கிடக்கும்

அந்த தருணங்களின்

மராமரங்கள் வழியே

என் மீது பெய்தது

அம்பு மழை.

அந்த ரத்த வெள்ளத்திற்குப் பிறகு

நான் கவிதையின்

அந்த சிவப்பு அணுக்களை

தேடிச்செல்ல முடிவதில்லை.


_________________________________________

கல்லாலன்

No comments: