2024-07-11

தேசிய மொழி.

 யார் அங்கே?

என் குரல் கேட்கிறதா?

ஏன் கத்துகிறாய்?

மவுனத்தின் அதிர்வெண் 

மவுனம் தானே.

அப்புறம் எப்படிக்கேட்கும்?

தன் குரலே

தனக்கு கேட்க‌

காதுகள் இல்லையா?

மவுனம் அங்கே இருந்து

கழன்று கொண்டது.

இப்போது

அது

காதல் தேசத்தின்

தேசிய மொழி.

_______________________________________‍‍

அஞ்சிறைத்தும்பி

No comments: