ருத்ராவின் கவிதைகள்

வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட‌ என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

2022-12-06

நிழலாடு முன்றில்

 நிழலாடு முன்றில்

_______________________________________________

சொற்கீரன்




வீட்டு முற்றத்து கிரில் 


வீட்டுக்குள்


சூரியனைக்கொண்டு


நிழலைக்கலந்து


பிக்காசோவை பிசைந்து


ஊற்றியிருந்தது.


கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி


மெடுஸா 


கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்


பாம்புகளாய் நெளிந்து


சிரித்துக்கொண்டிருந்தாள்.


காற்றெல்லாம் நஞ்சு.


எப்படி நஞ்சு கூடவா அழகு?


ஆமாம் 


இரண்டும் ஒன்று தான்.


அது அரக்கர்களிடம் இருந்தால்


நஞ்சு.


தேவர்களிடம் இருந்தால் அது


அமுதம்.


என்ன ஒரு மோசமான கணிதம்?


சமன்பாட்டை மாற்றிவிடத்தான்


சிவன் எண்ணினான்.


அதை அவனே குடித்துக்கொண்டான்.


அப்படியும் 


பிதுங்கி வெளியே வழிந்தது


நான்கு வர்ணமாய்!


அது அவனுக்கு மட்டுமே தெரியும்.


தேவர்களே அரக்கர்கள் என்றும்.


அரக்கர்களே தேவர்கள் என்றும்.


அதை தெரிவிக்க‌


அதோ


அவன் உடுக்கை ஒலிகள்


துடிக்க துடிக்க‌


கேட்டுக்க்கொண்டே இருகின்றன.


மாலை வந்தது.


நிழல்கள் கரைந்தன.


சமநீதியற்ற அந்த‌


நிஜங்களின் முள் மண்டிய‌


தேசத்தில் 


கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌


அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்


அந்த‌


"ஊர்த்துவ தாண்டத்தை"


_______________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 1:23 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

"அயலான்"

 "அயலான்"

_________________________________________

சொற்கீரன்



ஏலியன் என்ற சொல் 

ஹாலிவுட் துணிவிரிப்பில் வந்து

விழுந்த 

விண்வெளி ஆளின் குழுந்தை.

பூமிக்கற்பனையில்

வடித்த புதிய சாராய நொதிப்பு.

வேர் ஓடி விட்டது.

கிளை பிரித்து பூ விரித்து

எலான் மஸ்கிய கார்பொரேட்

விஞ்ஞானத்திலும்

இன்னும் தொப்புள்கொடி அறுக்கப்படாமல்

பச்சையும் நீலமும் கலந்த‌

ஒரு பச்சை வாடைப் பிசினில் 

எழுதிய பூலியன் கணிதப் "பூரான்" பூச்சி.

மனிதனுக்கு

தன்னைச்சுற்றிய புசு புசு வென்ற‌

அந்த பூ மயிர்க்கண்களில்

பில்லியன் ஒளியாண்டுகள் தாண்டிய‌

ஹார்மோன் காய்ச்சலை 

பதியமிட்டுக்கொண்டே இருக்க ஆசை.

ஆனால் 

இது சின்ன சின்ன ஆசை இல்லை.

ஆசைப்பிரளயங்களின் 

பிரம்மாண்ட சுநாமி.

அறிவின் வீக்கமே இங்கு இந்த‌

பிரபஞ்ச வீக்கம்.

நமக்குத் தெரிவது எல்லாம்

ஏலியன் பலூன்.


__________________________________________

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 1:16 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-12-03

தமிழ்ப்பூவே.

 தமிழ்ப்பூவே.

உனக்குள் புயல் உண்டு.

தழல் உண்டு.

தாகமும் உண்டு

வேகமும் உண்டு

எப்படி இந்த‌

பிணத்தூக்கம் வந்தது?

உன் மண்ணும் மொழியும்

நீ மறந்து விட்டால்

உன் கால் படும் 

புழுதி கூட‌

ஹை ஹை என்று

"இந்தி" யால்

உனை குதிரை ஓட்டும்.

கவனம் கொள்.

இந்தி மொழியும் உன்

சிந்துவின் மொழிதான்.

ஆனால்

அது தேவபாடையாய் அல்லவா

உனக்கு ஒரு

பாடை கட்ட வருகிறது.

கவனம் கொள் தமிழா!

கவனம் கொள்!


_________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:20 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தரிசனம்.

கண்டவர் விண்டதில்லை.

விண்டவர் கண்டதில்லை.

கடவுள் என்கின்ற ஒரு

மனப்பொருள் இங்கு கண்டார்.

மற்றவர்க்கு சொல்லிவிட‌

மடை திறந்தார் வெள்ளமென‌

தொண்டை எல்லாம் இங்கு

வற்றியது வார்த்தை இல்லை.

மொழிகளோ போதவில்லை

விழிகளோ இருளாகின.

யார் அவர் சொல்லு

அடையாளம் என்ன என்ன?

எது தான் என்று சொல்லு.

இது என காட்டு போதும்.

மக்களோ மொய்த்துவிட்டார்

எங்கணும் மக்கள் கூட்டம்

அலையென கடலென‌

ஆர்ப்பரித்திட்டார்.


பொறுங்கள் பொறுங்கள்.

கடவுளுக்கு அருகில் சென்று

பார்த்ததை பிம்பம் காட்டி

சொல்கிறேன் இங்கே

காண்மின் காண்மின்.

ஜேமஸ்வெப் என்றொரு

தொலைநோக்கி சொன்னது.


மனம் எனும் பலூன்கள் 

வேண்டாம்.

கற்பனை எனும்

கலக்கலும் வேண்டாம்.

விரிவாய் நன்கு இங்கே

உற்று நோக்கிடும் ஒரு

கருவி உண்டு.

கருவிலும் துருவிப்பார்க்கும்

கணிதங்கள் இங்கு உண்டு.

அகம் புறக்கண்கள் உண்டு

அலசலாம் அறிவால் நன்கு

அறியலாம் தெளிமின் தெளிமின்.


விடைத்த‌தோர் ஆற்றல் இங்கு

வெடித்ததன் பெருவெடிப்பே

விரிந்து மேல் விரிந்து வீங்கி

விண்வெளிக்கடலாய் ஆச்சு.

கடலென்றால் கரைகள் இல்லை.

சொல்லவோ உரைகள் இல்லை.

இருப்பினும் பெரிய உண்மை

கண்டதைச் சொல்லுகின்றேன்.

துடிப்பும் வெடிப்பும் எல்லாம்

ஒன்று தான் உணர்ந்து கொள்வீர்.

துடிப்பதற்கும் முன்னே இருந்த‌

தடம் ஒன்று கண்டுகொண்டேன்.

காலமும் வெளியும் இங்கு

உருண்டு திரண்டு ஒரு

உருவம் பிடிக்கும் முன்

எல்லாம் ஒரு கூழ் தான்.

அந்தக்கூழியம் எனும் 

ஃப்ளூடிடிஏ

பல் உருவம் காட்டும்

பூதங்களாச்சு.

வண்ணத்துப்பூச்சி 

வடிடிவமும் உண்டு

வவ்வால் என்றொரு 

வடிவமும் உண்டு.

சிறகு முளைத்த‌

தேவதை உண்டு

இன்னும் இன்னும்

உருவங்கள் உண்டு.

அந்த "ஒளிப்புலமே"

நெபுலம் என்று உண்டு.

அதனுள் ஒரு கணம்

ஆற்றலும் நிறையும்

அடர்வு கொண்டதில்

பெருவெடிப்பே ஒளியின்

பெருந்துடிப்பே ஆனது.

அந்த கன்னிக்குடம்

உடைந்து போனதில்

வெளியும் வழியும்

விரிவு கொண்டது.

சிலம்பு உடைத்த‌

அந்த கண்ணகி யார்

என உருவகமாய்

உற்றுப்பார்த்தேன்.

ஹைட்ரஜன் பரல்களும்

ஹிக்ஸின் துகள்களும்

தெறித்த கணமே

பிரபஞ்ச‌த்தின் ஒரு

குவா குவா 

கேட்ட கணமாம்.

அந்த சீற்றம் எதுவென‌

கணிதம் கண்டேன்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்

சொன்னது அதுவே!

ஒற்றையாய் வந்த‌

கற்றையின் கனப்புள்ளி

சிங்குலாடியாய் ஒரு

சித்திரம் விரித்தது.

என்ட்ரோபி எனும்

கணித சமன்பாடு

எல்லாம் சொன்னது.

எல்லாம் புரிந்தது.

புரியும் வரை

கேட்டோம் கேட்டோம்

அம்புலிமாமாக்கதைகள்

ஆயிரம் ஆயிரம்.

அறிவெனும் பேழை

திறந்தது கண்டோம்.

மற்றவை யாவும் 

பிழை எனக்கண்டோம்.

ஜேம்ஸ்வெப் இனி

காட்டும் தரிசனம்

அறிவின் ஆலயம்

காட்டும் தரிசனம்.


_______________________________________

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:45 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-12-02

ஓடி விளையாடு

 ஓடி விளையாடு

_____________________________________

ருத்ரா




ஓடிப்பிடிச்சு விளையாடலாம்

வாருங்கள்.

கடவுள் போய் ஒளிந்து கொள்ளட்டும்

அல்லது 

அப்படி ஒருவர் இல்லாமலேயே

நாம்

அப்படி ஒருவர் இருப்பதாகவும்

அவர் ஒளிந்து கொண்டிருப்பதாகவும்

நாம் அவரை

தேடிக்கண்டு

பிடித்துக்கொள்வதாகவும்

விளையாடலாம்.

இந்த விளையாட்டு தான் இங்கு

விறு விறுப்பாக இருக்கிறது.

சுறு சுறுப்பாகவும் இருக்கிறது.

இதில் கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.

"கடவுள்"என்றால் என்ன‌

என்று

கண்ணை மூடி 

சிந்தனையை கூர் தீட்டி

புலித்தோலோ மான்தோலோ

எதன் மீதாவது 

அமர்ந்து தேடுவோம்

அதாவது ஆழ்நிலையில் ஆழ்ந்து

தேடுவோம்.

இதிலும் தொய்வு அடைகின்றோம்.

இருட்டே திரையாகி

இருட்டே படமாகி

ஒரு திரைப்படம் காட்டுகிறது.

நனவும் கனவும் கலந்த‌

படலம் விரிகிறது.

அப்புறம் 

விலுக்கென்று விழித்துக்கொள்கிறோம்.

என்ன கடவுளை பார்த்துவிட்டீர்களா?

அருகில் அமர்ந்தவர் கேட்கிறார்.

என்னது?

கடவுளா?

யார் அது?

கேள்வி பிறக்கிறது விடையாக.

கண்டுவிட்டேன்.

கண்டுவிட்டேன்.

விடை பிறக்கிறது கேள்விக்கு.

இந்த விளையாட்டு எப்படி?

விளையாட்டு போல் இப்படி

விளையாடுவதே வாழ்க்கை.

விளையாட்டை 

துவக்கவும் முடிக்கவும்

அதோ விசில் ஊதுகிறாரே

அவர் யார்?

அவரும் நம்மோடு 

விளையாட வந்தவரே.

அது அவர் விளையாட்டு.


______________________________________________________

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:39 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-28

கோடு

 கோடு

_________________________________

ருத்ரா




மூச்.

இதற்கு மேல் பேசாதே

எதையும் கேட்காதே

எதையும் பார்க்காதே

ஒரு குரல்

நம் பிடறிக்குப்பின்னே

நம்மை இழுத்து நிறுத்தியிருக்கிறது.

அறிவு என்பது

கோடுகளை உடைப்பது.

விளிம்புகளை கடப்பது.

வாசல்களை திறப்பது.

அச்சம் எனும்

துருப்பிடித்த பூட்டுகளை

அடித்து நொறுக்குவது.

முன்னே ஒரு குரல்

நம்மை ஈர்க்கிறது.

இருட்டுக்குள் 

மேலும் ஒரு இருட்டான‌

கோட்டை தாண்ட அஞ்சிய கால்கள்

முடமாகின.

விளிம்பு எனும் ஊசி முனையில்

நின்றுகொண்டு

விழாமல் நிற்கிறோம்

கையில் சிந்தனைச்சுடர் ஏந்தி.

ஒரு சிறுவன் வரைந்த‌

கோட்டுச்சித்திரமாய்

பிரபஞ்சங்கள்

மேல் அடுக்கிய‌

கோடி கோடி பிரபஞ்சங்கள்.

கோடு ஆவியாகி அகன்றது.

விளிம்பு எல்லாம் நம்

சொகுசு மாளிகை ஆனது.

நமக்கு விளக்கு ஏந்த

குட்டிச்சூரியன்கள்.

நியூகிளியர் ஃப்யூஷன் 

எனும் அறிவின் திறவுகோல்

இந்த இருட்டுப்பிழம்பையே

பழரசம் ஆக்கி நீட்டுகிறது.

மனிதனின்

துளியிலும் துளியாய்

இருக்கும் 

உந்து விசை

குவாண்டமாய்

கிரீடம் சூட்டிக்கொண்டிருக்கிறது.

மனித ஆற்றலின்

வர்ணமற்ற வர்ணத்துக்கா

பொய்மைப்புருசுகொண்டு

வர்ணம் தீட்ட வருகிறீர்கள்?

சோமச்செடி என்றாலும் 

கஞ்சாச்செடி என்றாலும்

போதை போதை தானே.

அது கடவுளின் குரல் என்று

உங்கள் மூலம் 

பாஷ்யங்களாய்

எங்களை ஏமாற்றியது எல்லாம்

புரிந்து கொண்டோம்.

அறிவே அகண்ட மானிடம்.

மற்றக்

குப்பைகள் எல்லாம் அகலட்டும்.


______________________________________________





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:05 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

நிழலாடு முன்றில்

 நிழலாடு முன்றில்

______________________________________________

சொற்கீரன்



வீட்டு முற்றத்து கிரில் 

வீட்டுக்குள்

சூரியனைக்கொண்டு

நிழலைக்கலந்து

பிக்காசோவை பிசைந்து

ஊற்றியிருந்தது.

கிரேக்கத்து அந்த அழகிய அரக்கி

கூந்தலின் ஒவ்வொரு இழையிலும்

பாம்புகளாய் நெளிந்து

சிரித்துக்கொண்டிருந்தாள்.

காற்றெல்லாம் நஞ்சு.

எப்படி நஞ்சு கூடவா அழகு?

ஆமாம் 

இரண்டும் ஒன்று தான்.

அது அரக்கர்களிடம் இருந்தால்

நஞ்சு.

தேவர்களிடம் இருந்தால் அது

அமுதம்.

என்ன ஒரு மோசமான கணிதம்?

சமன்பாட்டை மாற்றிவிடத்தான்

சிவன் எண்ணினான்.

அதை அவனே குடித்துக்கொண்டான்.

அப்படியும் 

பிதுங்கி வெளியே வழிந்தது

நான்கு வர்ணமாய்!

அது அவனுக்கு மட்டுமே தெரியும்.

தேவர்களே அரக்கர்கள் என்றும்.

அரக்கர்களே தேவர்கள் என்றும்.

அதை தெரிவிக்க‌

அதோ

அவன் உடுக்கை ஒலிகள்

துடிக்க துடிக்க‌

கேட்டுக்க்கொண்டே இருகின்றன.

மாலை வந்தது.

நிழல்கள் கரைந்தன.

சமநீதியற்ற அந்த‌

நிஜங்களின் முள் மண்டிய‌

தேசத்தில் 

கால்களின் ரத்தம் பீறிட பீறிட‌

அவன் ஆடிக்கொண்டே இருக்கிறான்

அந்த‌

"ஊர்த்துவ தாண்டத்தை"


_____________________________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:23 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-19

பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

 பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்

__________________________________________________

ருத்ரா


காதறுந்த ஊசியும் வாராது காண்

கடைவழிக்கே

வாழ்க்கையே ஒரு தத்துவம்.

இது வாழ்க்கையை 

கரடு முரடாய் பார்க்காத‌

தெருவில் பம்பரம் விளையாடும்

சிறுவர்களின் மகிழ்ச்சிக்குமிழி ஒன்று

மூச்சு விடும் தருணங்களின்

அடிவயிற்றுக்கடல்.

ஊசிமுனைக்காதில் ஒட்டகங்கள்

நுழையலாம்

பணக்காரர்களுக்கு சொர்க்கம் இல்லை.

ஏழைகளாக இருப்பதே

இறைவனுக்கு மிக அருகில் 

இருக்கும் இடம்.

இறைவன் என்றால் கொம்பு முளைத்தவனா என்ன?

இந்த இறுமாப்பு தான்

விடுதலை பெற்ற எண்ண ஒழுக்கு.

இறைவன் அருகே இருப்பவன் தான்

இப்படி பட்டவர்த்தமான மொழியில்

இறைவனை உற்றுப்பார்க்க முடியும்.

பணம் என்றால் இறைவன் தான்

என்ற‌

ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறதே.

அதுவும் பெண் உருவில் அழகாகவே

இருக்கிறது.

பண மறுப்பு வாதம்

கடவுள் மறுப்பு வாதம் அல்ல.

எல்லோரும் 

மகிழ்ச்சியாய் இருப்பது.

எல்லோருக்குள்ளும்

கடவுள் இருப்பது

அல்லது

அப்படி எதுவுமே இல்லாமல்

ஒரே வெள்ளையாய் கருப்பாய்

இருப்பது.

இப்படி பம்பரம் விடுவது எல்லாம்

உருமா கட்டப்படும் அடையாளம் தான்.

கூடவே நடந்துவரும்

இன்னொரு மனிதனுக்கு

கோரைப்பல் கொம்பு இருப்பதாய்

பகைப்புகை எப்படி கிளம்புகிறது.

ஒரு குருட்டுத்தனம்

வெறித்தனம் ஆகி

கொழுந்து விடுகிறது.

ஏதோ ஒரு பயம் இருட்டாய்

அதுவே பயமுறுத்தும் நிழலாய்

விரிகிறது.

சரி போகட்டும் வெறும் நிழல் தானே!

அதை கொஞ்சம் உற்றுப்பார்ப்பதற்குள்

எத்தனை

ரத்த ஆறுகள்?

எத்தனை எத்தனை

கபாலக்குவியல்கள்?

மனிதப்பரிமாணம்

மனிதனை விட்டு கழன்று விடுகிறது.

அப்புறம்

வரலாறுகள் கூர்மை மழுங்கி

மூளியாகி விடுகின்றன.

மீண்டும் எப்போது

கண்ணைத்திறக்கும் 

வெளிச்சம் வரும்.

மண்டையில் வெறும் கொண்டை வைத்த‌

பம்பரங்கள்

இங்கே சுழன்றுகொண்டிருக்கின்றன.

நிற்கும் போது 

திசைகள் அழிந்து

சுழன்று கொண்டேயிருக்கின்றன.

_______________________________________________________



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:03 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-15

பாடுங்கள் ஒரு பாட்டு.

 


பாடுங்கள் ஒரு பாட்டு.





உங்களுக்கு நான் 

எத்தனை தடவை தான் சொல்வது?

என்னைத்தேடி

கூட்டம் கூட்டமாய் வந்து

ஈசல் சிறகுகள் உதிர்த்து

மீண்டும் சிறகுகள் முளைத்து

மீண்டும் மீண்டும்

சிறகுகள் உதிர்த்து

என்னத்தைக்கண்டீர்கள்?

கல்லில் இறுகிக்கிடக்கும்

அந்த மூடத்தனத்தை தான்

எத்தனை 

தடவைகள் தான் குளிப்பாட்டுவீர்கள்?

அதிலும் நீங்கள் குடமுழுக்கு என்று

சொல்லிவிட்டால்..

அதெல்லாம் இல்லை..

அந்த நீச பாஷையெல்லாம் வேண்டாம்.

கும்பாபிஷேகம் என்றால் தான்

கர்மம் தொலையும்.

தீட்டு கழியும் 

என்பார்கள்.

நீங்களே

உங்கள் உழைப்பின் நரம்புகள்

தெறிக்க கட்டிய கோவில்கள்

நீங்கள் நுழைந்து விட்டதால்

எப்படிப்பாவப்படும்?

எப்படித்தீட்டுப்படும்?

அதை தூய்மைப்படுத்துவதாய்

சொல்லும் மந்திரங்கள்..

உங்களின் அடிமைச்சேறு

என்பதை 

எப்போது புரிந்து கொள்ளப்போகிறீர்கள்?

போதும் ஈசல் சிறகுகளே.

இந்த வானம் முழுதும் 

உங்கள் அறிவின் சிறகுகளால்

தூய்மைப்படுவது உங்களுக்கு

தெரியவில்லையா?

ஓ மனிதர்களே!

இறைவா என்று என்னை நோக்கி

நீங்கள் கைகள் குவித்தாலும்

உங்களிடம் தான் இருக்கிறது

என் அறிவின் பல்கலைக்கழகம் எல்லாம்.

இவர்களின் எச்சில் தெறிப்புகளை

என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

என்னைக்காப்பாற்றுங்கள்.

உங்கள் நெஞ்சில் 

மனித அன்பின் கூடு ஒன்றை

கட்டிக்கொள்ளுங்கள்.

அதில் அந்த‌ சிறகொலிகள்

உங்களை சிலிர்க்கச்செய்யட்டும்.

போதும்.

உங்கள் போலித்தனங்களுக்கு

போடுங்கள் ஒரு பூட்டு.

பாடுங்கள் ஒரு பாட்டு

மனித நேயத்துக்கு

பாடுங்கள் ஒரு பாட்டு.


____________________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:25 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-07

கொலுசுகள்

 கொலுசுகள்

_________________________________

ருத்ரா



அங்கே இங்கே போனாலும்

என்னோடு பேசுகிறாய்.

என்ன சொல்கிறாய் என்று

என்னைக் கேட்க விடாமல் 

அந்த ஒலிப்பிஞ்சுகளின்

இனிமையைக்கொண்டு

மூடிக்கொள்கிறாய்.

அதை கண்களாக்கிக்கொண்டு

என்னை நீ

துளைக்கின்றாய்.

ஏழெட்டு வானங்களையும் 

ஊடுருவிக்கொண்டு.

உன் வெண்ணைச்சிற்பக்

கால்கள் கொண்டு நடந்து நடந்து

என்னை செதுக்கிக்கொண்டே இருக்கிறாய்

அந்த ஒலி உளிகளைக்கொண்டு.


_______________________________________



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 1:29 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-06

அழலேர் வாளின் ஒப்ப

 அழலேர் வாளின் ஒப்ப

_______________________________________

சொற்கீரன்.



அழலேர் வாளின் ஒப்ப செயலை நீளிலை

அம்தழை அசைஇயும் மின்னிடை பேர்த்தும்

வெண்குருகு வெரூஉய் அடைகரை நீங்க

பைம்புனாலாடி பயிர்முகம் ஆங்கு

உள் உள் நகைப்ப ஒசியிடைத் தளிர்மகள்

விழிகள் உண்ட நெடுங்குன்றம் அனையான்

மெய்விதிர்த்தனன் ஆங்கு துறை புக்கோர் வீ அலர்

இறைபு மட நெடு நாரை ஒலி ஆர்த்தன்ன

முல்லை இவர் மன்றும் எதிர்தந்து ஒலிக்கும்.


________________________________________________________________


அகநானூற்றுப்பாடல் 188 ன் அழகிய சொற்கள் சில கோர்த்து நான் எழுதியது இது.

அவள் தழையுடையும் மின்னல் இடையும் கருவிழியும் அவனை மயக்கின.அவர்களுக்கிடையே நடந்த சந்திப்பு ஊரார் காணும்படி அலர் தூற்றும் ஒலிகளால் மொய்த்துக்கொண்டது.இதைப்பற்றி நான் எழுதிய சங்க‌நடைச்செய்யுட் கவிதை இது.



பொழிப்புரை

_____________________________________________________‍‍_________________


தீக்கொழுந்து போன்ற வேலை ஒத்த  நீண்ட இலைகளை உடைய அசோக மரத்து அழகிய தழையினை ஆடையாக உடுத்தியும் அந்த அழகில் மின்னல் போன்ற இடை அசைந்து வரவும் அதில் அச்சம் கொண்ட வெண் குருகுகள் அந்த பசுமை செறிந்த ஆற்றின் கரையை விட்டு நீங்கவும் பசுமையும் குளுமையும் நிறைந்த நீராடலில் திளத்த அவள் அவனைக்கண்டதும் முகம் மலர்ச்சியுற்று அதனால் வெட்கமும் கொண்டு தனக்குள் மென் நகை புரிகின்றாள். மெல்லிய தளிர்களை ஆடையாய்  உடுத்தி குழைவு கொண்ட இடையுடன் நின்று அவனை நோக்கியதில் அவள் விழிகளால் அவன் உண்ணப்பட்டு விட்டான்.அவனும் உணர்ச்சியுள் ஆட்பட்டு நின்று விட்டான்.நெடுங்குன்றம் போல் நின்ற அவன் அவள் விழிகளில் வீழ்ந்து விட்ட இந்நிலையை அந்த ஆற்றங்கறைக்கு வந்தவர்கள் கண்டு விட்டனர்.இதனால் பற்றிக்கொண்ட அந்த ஊர்ப்பழி எனும் அலர் மெல்லிய சிறு சிறு பூக்கள் காற்றில் இறைவது போல் பரவிவிட்டது. மெல்லிய மடமை பொருந்திய நாரைகள் ஒலி கிளப்புவது போல் அங்கு ஒலிப்புகள் எழுந்தன.அவை முல்லை கொடி படர்ந்து நிற்கும் மன்றுகளிலும் பட்டு எதிரொலித்தன.


_________________________________________________________________சொற்கீரன்.

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 3:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-11-02

குகை

 குகை 

______________________________________



தென்காசியிலிருது கொல்லத்துக்கு

ரயிலில் பயணம்.

ரயில் ஆரியன் காவு குகை வழிக்குள்

புகுந்து 

கொஞ்சம் இருட்டு சதையை

பிய்த்துக்கொண்டு

நம் மீது கொஞ்சம் சுவாரஸ்யமான‌

திகில் பூச்சு பூசி விட்டு

வெளிச்சத்துக்கு வந்தது.

"ஆர்யன்"என்பதில் அந்த "ஆர்"

தமிழின் ஆழம் நிறைந்த வேர்ச்சொல்.

சங்கத்தமிழின் எல்லா சொற்களிலும் 

ஒரு உயிர்ப்பொருள் பூசி நிற்கும்

தனிச்சொல் உரிச்சொல் அசைச்சொல்.

அது உலக மொழிகளிலும் வேர்பிடித்து

அப்புறம் 

கைபர் போலன் கணவாய் வழியே 

எப்படி இந்த "வெறி" பிடித்து

தமிழையே அரிக்கும் கரையான் ஆனது?

எப்படி இருப்பினும் 

வாழ்க அந்த தமிழ்க்கரையான்.

தமிழால் தமிழும் வீழும் என்பது

இது தானோ?

சேர நாடு கேரளநாடு ஆகி 

தமிழை நோக்கி அது ஒரு

ஏளனப்பார்வையை வீசுவதும்

ஒரு வேதனையான வேடிக்கை தான்.

அவர்களின் வரலாற்றுத்தடங்கள் 

நம் பதிற்றுப்பத்தில் பதிந்து கிடப்பது

ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமே தெரியும்.

மலையை ஆளும் நம் மலையாளச்சேரன்

சமஸ்கிருத புகை மண்டிப்போனதால்

அவனுக்கு நாமே கூட மிலேச்சன் 

ஆகிப்போனோம்.

சரி.போதும்.

அந்த தலைவலிக்கு ஏதோ ஒரு 

ஆயின்ட்மென்ட் தடவி விட்டு

மடியில் கிடக்கும் நிகழ்கால‌

நேனோ செகண்டுகளுக்குள் 

படிவோமாக!

ரயிலின் ஊர்வில் என்

கனவுப்பொதிகளும் ஊர்கின்றன.

வெளியே பச்சைத்திட்டுகள் 

மரங்களின் பசுமைக்கொத்துகள்

குவியல் குவியலாய் தென்னைகள்

கூந்தலை சிலுப்பிக்கொண்டு

எங்களுக்கும் தலை வாரி 

பூ முடித்துவைத்துப்போங்களேன்

என்ற ஏக்கத்தை 

அசையும் சித்திரங்களாக்கின.

சின்ன சின்ன ஆறுகள்

பாம்புகளாய் நெளிந்து ஓடின.

அப்புறம்

அந்த தடக் தடக் ஒலி

தாலாட்ட 

ஒரு இனிமையான மௌனத்துள் 

மூழ்கினேன்.

வளைந்து வளைந்து

வளையல் பூச்சி மாதிரி

ரயில் பெட்டிகள் இழுத்துக்கொண்டு

நகர்ந்தன.

அந்த தண்டவாளங்களில்

சக்கரங்கள் மெல்லிதாய் 

சிணுங்கிய குரலில்

கண்ணுக்குத்தெரியாமல் 

அந்த கொலுசுகளை

ஒலித்துக்கொண்டிருக்கிறாளே

யார் அவள்?

_______________________________

ருத்ரா




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:27 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-31

STANDARD MODEL by L

 (13) The Equation That Explains (Nearly) Everything! - YouTube

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:26 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-30

ஓவியன்

 ஓவியன்

________________________________

ருத்ரா



உன் மீதே ஒரு ஓவியம் வரை.

உன் உள்ளக்கீறல்களை

தூரிகையாக்கு.

உன் இதயக்குப்பியிலிருந்து

உணர்ச்சிப்பெருக்குகளை

குபீர் குபீர் என்று

பிதுக்கித்தள்ளும் குழம்பினை

வண்ணங்களாக்கு.

இயற்கையோ

மனித முகங்களோ

பெண்மைப்பேரழகின் 

பெருந்தக்க முருகியல் சுழிப்புகளோ

இன்னும்

பட்டாம்பூச்சியின் துடிக்கும் 

சிறகுகளிலேயே

நெளிவுகள் காட்டும் 

திரைகளையோ

வரை..வரை வரை.

உன் தீட்டல்களுக்கு

எந்த சாஸ்திரங்களும்

தீட்டுகள் கற்பிக்க முடியாது.

அவர்கள் கூப்பாடு போடும்

பிரம்மத்தின் பிழம்பு அல்லவா

அந்த தூரிகை மயிர் விளிம்பில்

துளிர்த்து துளிர்த்து வருடுகிறது.

உன் சோகமே 

உன் ஓவியத்தை

சொர்க்கமாக்கும்.

வலிக்கும் நரம்பின் ஆற்றோட்டங்களை

அங்குலம் அங்குலமாய்

அந்த படுதாவில்

கொஞ்சம் படுக்க வை.

அந்த கண்கள் அற்ற கண்களான‌

கனவுப்பிழியல்களின்

கண்ணீர்ப்பளிங்கில் உன்

கதைகள் எழுது.

ஓவியனுக்குள்

கோடி கோடி ஓவியங்கள்

அச்சிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அவன் எண்ணத்தின் அகன்றகூடம்

இதோ ஒரு

மியூசியமாய்

விரிந்து கொண்டே இருக்கிறது.

நுழைவோம் வாருங்கள்.

அனுமதிச்சீட்டு ஏதுமில்லை.

அவன் இன்ப துன்பங்கள்

ஒரு மௌனத்தில் அங்கே 

பகிர்ந்து கொள்ளப்படுவதே

அவனுக்கு

ஒரு பாக்ஸ் ஆபீஸ் வசூல்.


___________________________________

 





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:34 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-24

தீபாவளி வாழ்த்துக்கள்

 தீபாவளி வாழ்த்துக்கள்

___________________________________________

ருத்ரா


ஒரு வழியாய் இறந்துவிட்டான்

எண்ணெய் தேய்த்து குளித்து

கொண்டாடுவோம்.

புத்தாடையுடன் பட்டாசுகளுடன்.

இறந்தது யார்?

நரகாசுரனா?

தீர்த்தங்கரரா?

நெடுஞ்சாலைகளும்

கடைத்தெருக்களும்

பிதுங்கி நசுங்கி வழிய‌

பயணம் தான்.

அதில் நசுங்கிப்போவது

யார் அல்லது எது?

தமிழா! தமிழா!

அது நீயே தான்.

உன் வரலாறு தான்.

உன் தமிழ் இனம் தான்.

வராக அவதாரத்து திருமாலும் பூமாதேவியும் 

திருமணம் புரிந்ததில்

ஒரு மண்ணின் மனிதன் தானே

பிறந்திருக்க முடியும்.

வராகமாய் பூமியைக்காத்து உழுத‌

ஒரு உழவன் தான் பிறந்திருக்க முடியும்.

கடவுளே

அப்படி மண்ணின் மைந்தனாயும்

உழவச்செல்வனாயும் 

பிறந்தவன் எப்படி அசுரன் ஆனான்?

கடவுள் அசுரன் ஆகித்தான்

ஆரியன் அல்லாத திராவிடனை 

வதம் செய்ய வேண்டும்.

ஓநாய்கள்

ஓடையில் மேல் திசையில் இருந்து

தண்ணீரைக்கலக்கியதாய்

ஆட்டுக்குட்டிகள் மேல் பாய்ந்தது போல்

ஒரு புளுகுக்கதை புராணமே

இங்கு வதம் செய்ய வந்திருக்கிறது.

தமிழர்கள் தங்களையே வதம் செய்யும் 

அவலங்களின் திரியைப்பற்றவைக்கும்

இந்த உற்சாகங்களில் 

தீபாவளி களை கட்டுகிறது.

தீபாவளிக்களையை

என்றைக்கு பறித்து எறியப்போகிறோம்?

பிதாவே!

இவர்களை மன்னியும்.

இவர்கள் உற்சாகமாயிருக்கிறார்கள்.

எப்படியேனும் உற்சாகமாக‌ இருக்கிறார்களே.

அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்!


_________________________________________________________





இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:52 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-13

திருநீறாற்றுப்படை

 திருநீறாற்றுப்படை

_______________________________________

ருத்ரா




மந்திரமாவது நீறு என்று பாடி

சுந்தரத்தமிழ் அன்று ஒளிகாட்ட‌

இமை உயர்த்தி நாமும் வியந்தனமே.

இமையவன் புகழும் `பரவியதே.


சைவம் உலகில் தழைத்திடவே

தத்துவம் உயர்ந்து பரவியது.

என்ன தத்துவம் அது என்று

உள்ளே சித்தம் குதித்தது காண்.


பாட்டம் அப் ..டாப் பாட்டம் என‌

ஆங்கிலம் சொல்வதே அதுவாகும்.

அடி முடி கண்டால் போதும்

அண்டம் யாவும் விளங்கிடுமே.


உன்னை அறிய உன்னுள் நுழைய‌

உன் மிச்சம் என்ன அறிந்திடுவாய்.

வாழ்வு முடிந்து சுடலைப் பொடியாய்

மிஞ்சியதை நீ உள்ளறிவாய்.


சாம்பல் அல்ல அதுவென்றுணர்.

சாவி கிடைத்ததா?பூட்டுள் செல்.

பாஸ்வர்ட் தன்னைப்பற்றிக்கொள்

அதுவே அறிவியல் அது தெளிவியல்.


தெளிவு தான் "பிரசாதம்" என்றே உணர்.

குவாண்டம் இயற்பியல் உன் கோவில்

நாத்திகம் அறிய ஆத்திகம் செல்.

ஆத்திகம் அறிய நாத்திகம் செல்.


எது?என்ன? அது இது என்ன?

இருப்பும் இன்மையும் இரண்டறக்கலந்து

இன்மையும் ஆகி இருப்பும் ஆகி

நுண்மை அடர்த்தி புகுந்திடுவாய்.


ப்ராபபலிடி டென்சிடி அறிந்தாலே

ஆயிரம் சிவன்கள் உன் சிந்தையிலே

அடக்கம் ஆகும் அடங்காமையும் ஆகும்.

பெருவெடிப்பே உன் பிள்ளையார் சுழியாம்.


சுழிகள் ஸ்பைரல்களே காலக்சிகள் ஆகும்.

குவாண்டம் ஸ்பேஸ்ல் கோடி கோடியாய்

அண்டங்கள் யாவும் கரு தரிக்கும்!

அறிந்தால் போதும் சிவன்கள் எதற்கு?


இரண்டு குவாண்டம் எங்கோ இருந்து

சடை பின்னிக்கொள்ளும் இடையே

பில்லியன் பில்லியன் மைல்கள் என‌

ஒரு நொடியின் கோடித்துளியில்.


குவாண்டம் என்டாங்கிள்மெண்ட் எனும்

அந்த சிதம்பர ரகசியம் தெரிந்துவிடு.

இந்த வர்ண சாத்திரம் எல்லாம் இனி

தவிடு பொடிகள் ஆகிடட்டும்.


அந்த பொடியே  உன் திருநீறு.

பூசிக்கொள் உன் சிந்தையிலே அந்த‌

புரட்சியே உனக்கு தரிசனமாம் 

வறண்ட சாத்திரம் தொலையட்டும்.


திரு நீறாற்றுப் படை இதுவே.

இப்படை போதும் எப்படையும் வெல்ல.

உன்னை நீயே அழித்திடவா இங்கு

ஆகமம் ஆயிரம் நான் தந்தேன்.


அல்லவை அல்லவை அவை எல்லாம்

நல்லவை நல்லவை எது என்று

பகுத்தறிந்த கண் சொல்லும் இனி

அறிவியலே உன் திருநீறு.


நெற்றிக்கண் வேறு எங்கும் இல்லை

அந்த ஜேம்ஸ்வெப்பின் டெலஸ்கோப் தான்.

துருவு!துருவு!உற்றுப்பார்

எல்லாம் தெரிவாய்.எல்லாம் தெளிவாய்!


மன் திறம் இதுவே அறிவாய் நீ மற்ற‌

மந்திரக்கூச்சல்கள் தூர எறி.

எக்ஸொ பிளானட்டுகள் உனக்கு உண்டு.

சொர்க்கம் நரகம் இனி எதற்கு?



____________________________________________________________









இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:40 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-11

பரிமாணங்கள்

 


பரிமாணங்கள்

_________________________________

ருத்ரா




எனக்கு ஏதோ பயம்.

ஸ்ட்ரோக் வரலாம்.

சிறுநீரகம் நின்று விடலாம்.

இல்லாவிட்டால்

எந்த விதமாகவாவது

சின்னாபின்னம் நிகழலாம்.

இது ஒரு டைமன்ஷன்.

எல்லாம் ஐன்ஸ்டீனின் ஸ்பேஸ்டைம்ல்

சுருட்டி வைக்கப்பட்டது தான்.

இன்றைய இழைக்கோட்பாடு

இருப்பத்தாறு என்கிறது போசானிக்கில்.

பத்து என்கிறது

சூப்பர் சிம்மெட்ரியில்.

இது பிரபஞ்சமே கழன்று கொண்ட நிலை.

எம் தியரி எனும்

எல்லாவற்றுக்கும் ஆன தாய்க்கோட்பாட்டில்

பதினொன்று.

நம் ராமானுஜன் என்றைக்கோ

சொல்லிவிட்டுப்போன‌

மாடுலர் ஃபங்ஷன்ஸ்

எட்டுகளின் மடங்காய் 

இருபத்து நாலு என்று குறிப்பிட்டு

காட்டிவிட்டது.

ப்ரேன் காஸ்மாலஜி 

கணித சமன்பாடுகளை

சங்கிலி சங்கிலியாய் 

எழுதிக்கொண்டிருக்கிறேன்.

இந்த "பயம்"பற்றிய டைமன்ன்ஷனை

யாரிடம் கேட்பது?

புதிது புதிதாய் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்

திடுக்கிட வைத்து புல்லரிக்கச்

செய்து கொண்டே இருக்கிறது.

பாருங்கள் 

அந்த "செவ்வாய்க் கோளில்" கூட‌

ஒரு பெரிய சிவலிங்கச்சிலை 

அந்த பாழ்வெளியில்

சாய்ந்து சரிந்து கிடப்பதாய்

நாஸா காட்டுகிறதாம்.

இன்னும் விட்டால்

அந்த ப்ராக்ஸிமா பி எனும்

வெளி பூமியிலிருந்து

"போகர்"கூட சிக்னல் அனுப்பிவிடுவார்

போலிருக்கிறது.

இப்போது பயம் எனும் டைமன்ஷன்

பூதாகரமாய்

என்னை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

அட சீ என்ன இது?

அந்த சக்கரநாற்காலியின்

சக்கரவர்த்தி திருமகன்...

மனிதம் கோடி மடங்காய்

எழுச்சி பெற்ற அறிவியல் உருவகம்..

"ஸ்டீஃபன் ஹாக்கிங்" என 

உச்சரித்தேன்.

நானும் இப்போது "போகருடன்"

ஹாயாய்..அந்த‌

எக்ஸொப்ளேனட்டில்...



______________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:29 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-09

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

__________________________________

ருத்ரா




பொன்னியின் செல்வன்

பாதி எழுதியது கல்கி.

மீதி வரைந்தது மணியம்.

வரலாற்றுப்புதினம் 

படிக்க படிக்க‌

பரபரப்பாய் இருந்தது.

வரலாற்றின் படிப்பாக இல்லை.

ஏனெனில் 

புதினம் என்ற புனைவில் 

சுருட்டப்பட்டு இருந்தது.

அடிப்படையில்

சமணமும் சைவமும் வைணவமும்

தங்களுக்குள் 

கழுவேற்றிக்கொண்டு

இருந்தது தான் நிகழ்வுகளின் பின்னணி.

ராஜ ராஜனும் ராஜேந்திர சோழனும்

கடல் கடந்து வெற்றிக்கொடி

நாட்டியது 

இந்திய அரசர்களிலேயே எந்த அரசர்களும்

செய்யாதது.

அசோகர் கூட புத்தமதம் பரப்பவே

இலங்கைக்கு தன் மக்களை அனுப்பினார்.

சோழச்சக்கரவர்த்திகளின்

இந்த சிறப்பு வரலாறு

நம் இந்திய வரலாற்றுப்பாடத்தில்

இருட்டடிக்கப்பட்டு விட்டது.

பொன்னியின் செல்வனின் இந்த 

புகழ் வெளிச்சத்தை

மறக்கடிக்கவும் 

மறைக்கவுமே

நந்தினியும் வந்தியத்தேவனும் 

ஆதித்த கரிகாலனின்

கொலைச்சூழ்ச்சியை வைத்துக்கொண்டு

"கொல கொலயா முந்திரிக்கா 

நரியே நரியே சுத்திவா"

என்று விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அதோடு விடவில்லை

நாற்காலியைப்பிடிக்க 

பொன்னியின் செல்வனே இதை

ஏற்பாடு செய்திருப்பானோ

என்ற சந்தேகப்பழியையும்

வலையாக பின்னப்பட்டதே

சுவையையும் விறுவிறுப்பையும் 

புதினத்தில் முறுக்கேற்றுவதற்குத்தான்.

கதை என்றால் அப்படித்தான்

இருக்கும் என்கிற பாமர ரசிகர்களாய்த்

தமிழர்கள் தடம் புரள வீழ்ந்து கிடந்தார்கள்.

அந்த படுகொலையைச்செய்தவர்களுக்கு

தண்டனையோ 

வெறும் நாடு கடத்தலும் 

சொத்துகள் பறிமுதலும் தான்.

மற்றவர்கள் செய்திருந்தால் தலைகள்

உருண்டிருக்கும்.

மனு நீதியின் ஆயிரம் ஆண்டுகளுக்கு

முந்திய கோர முகமே அந்த தீர்ப்பு.

இதை வைத்துக்கொண்டு தான்

"இந்து என்று சொல்லடா"

என்று சில கூட்டங்கள் உறுமுகின்றன.

இந்த கூச்சல்களையும் தாண்டி

ராஜ ராஜ சோழன்

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

என்று

இடிக்குரல்கள் 

சிலிர்த்து எழுந்து முழங்குகின்றன.

தமிழா!

ஆயிரம்

இரண்டாயிரம் ஆண்டுகளாய்

நீ தொலைந்து கிடந்தாய்

என்பதை 

தோரணம் கட்டிக்கொண்டாடுவதற்குத்

தான்

பொன்னியின் செல்வனுக்கு

தலையணை தலையணகளாய்

நாலு ஐந்து பாகங்களில்

காத்துக்கொண்டிருக்கிறாய்.

இவற்றில் நீ

தூங்கிவிடாதே தமிழா!

தூங்கிவிடாதே.


___________________________________________

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:53 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-04

மானுடமே ஓங்கட்டும்.


யாரை நம்பி நான் பொறந்தேன்

போங்கடா! போங்க!

என் காலம் இங்கே வென்றதுவே

வாங்கடா! வாங்க!

நாலாயிரத்துக்கும் மேலே

நம்ம கையில் இருக்குடா

"எக்சோ பிளானட்டுகள்".

இந்த பூமி மட்டுமில்லே

அந்த பூமிகளும் சொந்தமடா!

மானிடமே வென்றதடா!

மனித அறிவே இங்கு

வெளிச்சம் காட்டி நிற்குதடா.

வர்ணம் எனும் இருட்டை காட்டி நம்

வாழ்வை அழிக்கும் தந்திரம் இனி

பலிக்காமல் தொலையட்டும்.

மானுடமே ஓங்கட்டும்.


__________________________________________

ருத்ரா


Swiss astronomer who won Nobel for discovering exoplanet to deliver lecture in this Indian city (msn.com)
THANKS for the LINK

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:50 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பிரம்ம சிரிப்பு

 


எல்லாவற்றையும் பூஜை செய்யும் 

வழக்கம் ஒட்டிக்கொண்டதால்

கடவுள் இல்லை என்பதையும்

தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி

பூஜை செய்தார்கள்.

கடவுளே உள்ளம் குளிர்ந்து

"வெளித்தோன்றி சொல்லிவிட்டார்.

நான் கடவுள் இல்லை.

கடவுள் நான் இல்லை.

கடவுள் கடவுளே இல்லை.

கடவுள் என்பது இல்லவே இல்லை.

சந்தோஷம் தானே"


சந்தோஷமா?

அயோக்கியப்பயலே

மொள்ள மாரி

கசமாலம் 

முடிச்சவிக்கி

முட்டாப்பயலே..

.................

"அப்படியா..

அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கு

இது வரையும் 

இது தான் அர்த்தமா?"

கடவுள் ஓடியே போய்விட்டார்.

கடவுளைக்காணோம்.


"கடவுள்...

இதோ தூணிலும் இருப்பார்

துரும்பிலும் இருப்பார்.

..........

..............."


பக பகவென்று

சிரிப்பொலி மட்டும் கேட்டது.

பிரம்ம சிரிப்பு அது.


_____________________________________________________‍

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:24 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-10-01

வீரசிவாஜி வாழ்க!

 வீரசிவாஜி வாழ்க!

_______________________________________‍

ருத்ரா



வீரசிவாஜியே வாழ்க.

அந்த மராட்டிய மன்னனை அல்ல‌

உன்னைத்தான் சுட்டுகிறோம்.

வழக்கமான 

ஒரு மூக்குப்பொடி சிட்டிகையில்

எழுதிக்குவித்த அந்த நாடகப்பக்கங்கள்

எல்லாம்

நம் பேரறிஞர் வெடித்த பீரங்கிகள் 

அல்லவா?

சிம்மக்குரலோனே அன்று நீ

கர்ஜித்த வீரம்

இன்றும் தன் சூடு அடங்க வில்லை.

தமிழா!தமிழா!

சூத்திரன் சூத்திரன் என‌

இழிவு படுத்திய‌

ஆதிக்க கும்பலின் 

கும்பாபிஷேகங்களில்

கரைந்து விடாதே.

சிவாஜி வெடித்த தமிழ்

உன்னிடம் உண்டு.

அதைக்கொண்டு 

தமிழா

நீ ஆயிரம் எரிமலைகளை

பற்ற வைத்துக்கொள்.

உன் மீது கிடக்கும் 

அடிமை சாசனங்கள்

எரிந்தொழியட்டும்.


இமயங்கள் கூட‌

வணங்கிக்குனிந்ததே

வீர சிவாஜியாய் நீ

வீறிட்ட‌  குரலில்.

நடிகர் திலகம் அவர்களே!

"சிந்து நதியின் மிசை நிலவினிலே.."

என்ற பாடல் காட்சியில்

பாரதியின் அந்த‌

முறுக்கிய மீசையிலும்

கங்கு விழிகளாய் தெறித்த‌

பார்வையிலும்

எங்கள் உடம்பெல்லாம் இன்றும்

சிலிர்த்து நிற்கிறது.

நடிப்பின் மேதையே!

உன் நடிப்புக்கடலில் 

நீரை எங்கு அள்ளினாலும்

எங்கள் இதயங்களே அங்கு

மீன்களாய் துள்ளித்தும்பும்.

உன் நடிப்பின் மொழியும்

நம் தமிழ் போல் 

ஒரு செம்மொழி தான்.

நடிப்பின் எம்மொழியும் 

அதில் தான் உயிர் தரிக்கும்.

ஓங்குக‌

நடிகர் திலகம் சிவாஜியின் புகழ்!


___________________________________________________







இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 5:30 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-30

வைராவி குளம்

 வைராவி குளம்

_____________________________________



"வைராவி குளமா?"

முகநூலில் யாரோ தொட்டுக்

காட்டினார்கள்.

அம்பதுகளின்

அந்த வைர நினைவு 

பளிச்சு களில்

இப்போதும் 

சலவை செய்யப்பட்டு விடுகிறேன்.

எனது தந்தை வழி 

அத்தை அவர்கள்

எங்கள் கல்லிடைக்குறிச்சி

குமாரர் கோவில் தெரு வீட்டுக்கு

வருவார்கள்.

எல அய்யா எசக்கி என்று

வாய் நிறைய 

எங்கள் அப்பாவை

அழைத்துக்கொண்டே தான்

வருவார்கள்.

அந்த உற்சாகத்தை

அன்றைய‌

சிறு பயலாய் ஒரு தீபாவளி

மத்தாப்பூவை 

"பொருத்தி"க்காட்டினால் தான்

புரியும்.

குடமுருட்டி சங்கரன் கோயில் 

ஆடித்தவசு விழாவுக்கு போகும் போது

பெண்களின் கண்களை

கருவிழிகளாய் 

பாதையெல்லாம் விழும் 

கருநாவல் பழங்களோடு

அன்று உவமிக்கத்தெரியாத‌

பொடிப்பயலாய்

அந்த கன்னடியன் 

கால்வாய்க்கரையோரம்

அம்மா இடுப்பில் 

சுமந்துகொண்டு போகும்

கூட்டாஞ்சோற்றின் சூட்டை

மோப்பம் பிடித்துக்கொண்டே

சென்ற நாட்கள் இனி

சென்ற நாட்கள் தான்.

கோவிலுக்கு செல்லும் போது

கால்கள் அந்த‌

நீர் என்னும் பளிங்குப்பாயில்

அளைய அளைய‌

கால்களில் சரசரக்கும் 

அத்தனை கூழாங்கற்களும்

என் வைரகற்கள் அல்லவா?

பற்பசையை 

குழாயிலிருந்து

பிதுக்கிய பின் மீண்டும்

குழாய்க்குள் நுழைக்க முடியுமா?

ஏதோ படத்தில்

நாகேஷ் சொன்ன காமெடி இது.

அப்படி மீண்டும் அந்த‌

பாற்கடலை

நசுங்கிப்போன இந்த வாழ்க்கை 

டியூபுக்குள் 

அடைக்க முடியுமா?

வேண்டும்போதெல்லாம்

அந்த நினைவுகளின்

அமுதக்குழம்பை 

சுவைக்கத்தான் முடியுமா?

நோஸ்டால்ஜிக்

எனும் பழம் நினைவோட்டம்

செறிந்த செர்ரி மரக்கூட்டங்களுக்குள்

நுழைந்து வருவது தான்

என் எழுத்துக்களில் அந்த‌

வைராவிக்குளம் தளும்பி நிற்பதாகக்

காட்டிக்கொண்டே இருக்கும்.

வைராவிகுளமே!

உனக்கு தலபுராணம் பாட‌

தெய்வங்கள் தேவையில்லை.

அந்த பச்சை வயல் விரிப்பும்

மணிமுத்தாறும் தாமிரபரணியும்

இழை ஊடி நெசவு செய்யும்

அந்த அற்புதமுமே போதும்.

அங்கு ஒரு நாள் வருவேன்.

எவனோ வானத்திலிருந்து இறங்கி

குதித்து வருவான்

என் ஓட்டை உடைசல்களோடு 

வியாபாரம் செய்து கொள்ள.

ஈயம்பித்தாளை பேரிச்சம் பழத்துக்கு

போட்டு விடப்போகும் 

இந்த உடம்புக்கூட்டுக்குள்

பாயும் பழம் நினைவுப்பாய்ச்சல்களை

புதுப்பித்துக்கொள்ள‌

நானும் ஒரு நாள்

வைராவி குளம் வருவேன்.


________________________________________________

ருத்ரா இ பரமசிவன்.







 

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:22 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-29

பெரியார் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

 

See the source image











பெரியார்

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________



தாடி விழுதுகளுடன்

வெண்கதிர் வீச்சு

அறிவொளி தெறிக்க‌

இதோ

கண்டுபிடித்து விட்டோம்

ஒரு காலக்ஸி 

பெயர் பெரியார்

என்றது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கி.

தூரம் 

வெகு வெகு அருகில் தான்

தமிழ் நெஞ்ச ஒளி மண்டலங்களே

அவை.

காலம்

உளுத்துப்போன இருள் ஆண்டுகளை

அடித்து துவைக்கவந்த‌

மனிதத்தின் "சுய மரியாதை"யின்

ஒளியாண்டு!


________________________________________

கவிஞர் ருத்ரா


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:59 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

இன்று இதயங்களின் தினம்

 இன்று இதயங்களின் தினம் அல்லவா?

உலகத்தின் எல்லா இதயங்களின்

ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள்

அறைகளுக்குள் எல்லாம் சென்று

தேடிப்பார்த்து விட்டேன்.

என் இதயத்தை அன்று

அந்த ஷாப்பிங் காம்ப்லெக்ஸில்

அவளிடம் தொலைத்தேன்.

அவள் தோழிகள் 

ஒரு பெயரை வைத்துக்கூப்பிட்டதில்

அவள் பெயரை 

உச்சரித்துக்கொண்டே இருந்தேன்.

அந்தப்பெயரை அழைத்துக்கொண்டே தான்

என் இதயத்துள் அவள் பெயரை

பதியம் இட்டு க்கொடுத்தேன்.

அன்று இழந்த இதயத்தை தான்

இன்று தேடுகிறேன்.

ஒரு கனவில் சொன்னாள்

இந்த தினத்தில்

எல்லா இதயங்களிலும்

மின்னல்களைக்கொண்ட நெய்த‌

பட்டாம்பூச்சியாய்

சிறகடிப்பதாய் சொன்னாள்.

அதைத்தான் இன்னும் தேடிக்கொண்டே

இருக்கிறேன்.

அந்தப் பெயரின் எழுத்துக்கள் 

எந்த இதயத்திலாவது இன்னும்

ஒலிக்கிறதா

என்று தேடிப்பார்க்கிறேன்.

ஓ!  இதயங்களே சொல்லுங்கள்..

அட..அதற்குள் இருட்டிவிட்டதா?

இந்த உலக தினம் முடிந்து விட்டது.

இனி

அடுத்த உலக தினம் வரட்டும்.

என் தேடல் தொடர்கிறது.


_______________________________________

ருத்ரா




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:55 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-28

வௌவால் பிரபஞ்சம்

 (4) Flying Bat Nebula was seen by James Webb Space Telescope with exclusive images new - YouTube

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:08 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

"கவுண்ட் டவுண்"

 "கவுண்ட் டவுண்"

________________________________



மனிதா!

உன்னையே நீ

சுருட்டிக்கொண்டு

காணாமல் போய்விடுவதற்கு

கண்டு பிடித்த உனது சொல்

"டெக்னாலஜி"

எல்லா துறைகளிலும்

சந்து பொந்துகளிலும்

மூலை முடுக்குகளிலும்

புழு பூச்சி

மரம் மட்டைகளிலும்

ஏன்

கண்ணுக்குத்தெரியாத‌

அந்த நுண்ணுயிரிகளிலும்

இன்னும்

மில்லியன் ஒளியாண்டுகளை 

கடந்து

பல வண்ண முகங்கள் காட்டும்

ஒளி இருள் பிழம்புகளிலும்

அந்த சொல்

ஊடுருவியிருக்கிறது.

மூளைப்பெட்டியை திறக்கும் 

சாவி உன்னிடம்

வந்து விட்டது.

கருமுட்டைகளும் விந்தணுக்களும்

உன் டிஜிடல் கர்ப்பத்துள்

நுழைந்து விட்டன.

என்ன செய்யலாம் இதை வைத்துக்கொண்டு?

பணம் பண்ண வேண்டியது தான்.

பிஞ்சுகள் கூட‌

அரக்கத்தனமான "கேம்ஸ்"களில்

கருகிப்போகின்றன.

கவலையில்லை.

பணம் குவிகிறது.

உலகத்தின் கனிம வளங்களையெல்லாம்

சுருட்டி வைத்துக்கொண்டு

அழைக்கின்றாய்.

வாருங்கள் இதோ

செவ்வாய்க்கோளில் போய்

நட்சத்திர ஓட்டல்கள் கட்டி

பிரபஞ்ச காக்டெய்லை

கண்ணாடிக்கிண்ணங்களில் ஏந்தி

அருந்தி அருந்தி அனுபவிக்கலாம்.

பில்லியன் பில்லியன் டாலர்களில்

அந்த பயணத்துக்கு டிக்கெட்டுகள்

ரெடி ஆகி அச்சடிக்கப்பட்டு விட்டன.

பில்லியன் கணக்கில் இருக்கும்

மக்களின் 

கனவுகளில் ஆசைகளில்

தீ பற்றி எரிகிறது.

ஆனால்....

எதியோப்பிய சோமாலிய‌

எலும்புக்கூட்டு மனிதர்களின்

குழிவிழுந்த 

பசித்த 

வெறித்த கண்கள்

மண்ணுக்குள் மக்கத்தொடங்கி விட்டன.

ஓ!

டெக்னாலஜியே!

ராட்சச டினோசார்கள்

எலும்பு ஃபாசில்களாய்

மிஞ்சி விட்டது போல்

இந்த மொத்த பூமி உருண்டையின்

எலும்புக்கூட்டு ஃபாசில்கள்

பற்றி

இன்று ஒரு ஏ ஐ சைபோர்க்

குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கிறது.

மனிதா!மனிதா!

இந்தக்கணினிகள்

உன் ரத்தசிவப்பு அணுக்களில்

நுட்பமான "பைத்தான்"களை

கூடு கட்டிக்கொள்ளுவதற்கு முன்

உன்னையே

உலுக்கிக்கொண்டு

விழித்துக்கொள்.

ரகசியமான ஒரு "கவுண்ட் டவுண்'

உன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டு

டிக் டிக் டிக்..

என்கிறதே?

உன் இதய "லப் டப்"களில்

அது சின்க்ரோனைஸ் ஆகும் முன்

விழித்துக்கொள்.

ஆம்

விழித்துக்கொள்.


_________________________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:40 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-27

நாகேஷ்

 நாகேஷ்

_________________________________‍_____

ருத்ரா



சினிமாத் திரை எனும்

வெங்கலக்கடையில் 

ஒரு பூனைபோல் .நுழைந்த யானை

சிரிக்க வைத்து சிரிக்க வைத்து

தன் நகைச்சுவை அங்குசத்தால்

பார்ப்பவர்களை ஆட்சி செய்தது.

படங்கள் ஒவ்வொன்றையும் 

நாம் சொல்லிக்கொண்டே போனால்

நூறு இமயங்களின் சிகரங்களை

ஏறிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூன்று படங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

சர்வர் சுந்தரம்.

அருமையான நடிப்பு 

ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிரிப்பு

கொடி கட்டி பறக்கிறது.

நிறைவேறாத காதலை

தேவதாஸ் பிழிந்து பிழிந்து தந்திருக்கிறது

உணர்ச்சியின் எரிமலையிலிருந்து.

சிரிப்பு மூட்டிக்கொண்டே

அதே சோகத்தை வெளிக்கொணர்ந்த‌

நாகேஷ் எங்கோ ஒரு உச்சிக்கு போய் நிற்கிறார்.

அதிலும் ஒரு காட்சி.

காதலிக்கு பூங்கொத்து தருவார்

உற்சாகம் பொங்க.

அவள் காதலிக்க வில்லை என்று 

தெரிந்ததும்

அந்த பூங்கொத்து குப்பைக்கூடைக்குத் தான்

போகும் என்று தெரிந்தும்

இப்போதே குப்பையில் போட்டு விடாதே

என்பதை 

நகைச்சுவை கலந்த சோகத்தோடு சொல்வார்.

ஒரு சிரிப்புக்குள் எங்கோ சொருகிவைத்திருந்த‌

ஒரு சம்மட்டியை எடுத்து

நம் நெஞ்சத்தை நொறுக்கிவிடுவது போல்

காட்டிவிடுவார்.

இதைப்போல எத்தனையோ காட்சிகள்.

அடுத்து திருவிளையாடல்.

சிவாஜியுடன் அந்த கேள்வி பதில்..

நீ கேட்கிறாயா?

நான் கேட்கட்டுமா?

என்று அவர் கேட்டவுடன்

அவர் காட்டும் அந்த பதற்றத்தில் கூட‌

ஒரு பயத்தையும் காட்டுவார்.

அதிலும் அவர் நம்மை குலுங்க குலுங்க‌

சிரிக்க வைத்து விடுவார்.

நடிப்பு என்றால் சோகத்தை தத்துவத்தில்

தோய்த்து தருவது தான்.

அந்த கனமான உணர்ச்சிகளில்

ஒரு சிரிப்பின் இழையையும் 

மெல்லிய மயிலிறகாய் வருடி நம்

இதயத்தின் ஆழத்தையே 

துளைத்துக்கொண்டு விடுவார்

நீர்க்குமிழி என்ற படத்தில்.

மரணம் தன் தோளில் அமர்ந்த போதும்

அந்த சுமையை சிரித்து சிந்திக்க வைக்கும்

நகைச்சுவையால்

அந்த கனபரிமாணத்தை இலேசாக்கி விடுவார்.

இந்த மூன்று படங்களையும் தாண்டி

எப்போதும்

சட்டம் போட்டு சுவரில் மாட்டியிருப்பது போல்

ஒரு படம் உண்டு.

அது

காதலிக்க நேரமில்லை.

என் நினைவுகளில் சிரிப்பு அலைகளாய்

உலா வந்து கொண்டே இருக்கும் படம் அது.

எதைச்சொல்வது?

எதை விடுவது?

அந்தப்படம் வந்த வருடத்திலிருந்து

நேற்று பார்த்த விண்குழல் காட்சிகள் 

வரையும் 

என்னிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் 

படம் அதுவே தான்.

டி எஸ் பாலையாவுடன் அவர் அடிக்கும்

லூட்டி ஒன்றே போதும்.

அந்த படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன்

என்று கணக்கு எடுத்தால்

செஞ்சுரியை தாண்டியிருக்கும் என‌

நினைக்கிறேன்.

அவர் சேட்டைகள்

ஹாலிவுட் நடிகர் "ஜெர்ரி லூயிஸை"

நினைவு படுத்துவதாக இருக்கலாம்.

அவர் ஒரு ஃப்ரேமுக்குள் நிற்பார்.

ஆனால் இவர் நின்று கொண்டிருப்பதே தான்

இங்கு ஃப்ரேம்.

பாலச்சந்தர் அவர்கள் தன் "டைரக் ஷனை"

இவரிடம் கூர் தீட்டிக்கொண்டார்

என்பதே நிஜம்.


_____________________________________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:04 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

முற்றுப்புள்ளி இல்லாமல்...



ஆதலினால் காதல் செய்வீர்

பாரதி

நறுக்கென்று தலையில் குட்டி

சொல்லி முடித்தான்.

அது என்ன

இப்படி ஜிவ்வென்று ஏறுகிறது?

என்ன கணேசா?

நலம் தானே என்று

ரெண்டு தட்டு தட்டியிருப்பான் அவன்.

அதற்கும்

இப்படித்தான் ஜிவ்வென்று ஏறியிருக்கும்.

திருவல்லிக்கேணி கோவிலில்

அவனுக்கு 

முற்றுப்புள்ளி விழுந்து விட்டது.

பாரதியின் குயில் பாட்டு

எங்கிருந்தோ கேட்கிறது.

"காதல் காதல் காதல்"

முற்றுப்புள்ளி இல்லாமல்...

_____________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:11 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-26

"இந்த லிங்குக்கு மிக்க நன்றி"



https://www.msn.com/en-in/news/techandscience/watch-live-nasa-crashes-dart-spacecraft-on-asteroid-armageddon-style/ar-AA12gBsn?ocid=msedgntp&cvid=e0d5df53c9d94a44895440de45d5b39a


"இந்த லிங்குக்கு மிக்க நன்றி"

___________________________________________________________________________________



தலையும் தெரியவில்லை.

தலைப்பாகையும் தெரியவில்லை.

தலைக்கு வந்ததை

தலைப்பாகையோடு போயிற்று

என்று 

நமக்கு விளக்கிக்கொண்டிருக்கும் 

இந்த விஞ்ஞானிகளுக்கு

வாருங்கள் போய் 

நாம் ஒரு கும்பமேளா நடத்தலாம்.

அதில் குளித்து முழுகி

அந்த தீட்டைக்கழுவிக்கொள்ளலாம்.


"தீண்டுதல் தீண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல."

______________________________________

ருத்ரா














இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:24 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-23

மணிமுத்தாறே!

 மணிமுத்தாறே!

_______________________________________________
ருத்ரா


அம்பதுகளின் என் நினைவுப்பரல்களில்
உன் மணிகளும் முத்துக்களும் தான்
என் சிறு வரலாற்றுப்புத்தகத்தில்
கிலுகிலுப்பையை ஆட்டி ஆட்டி
மகிழ்வு ஊட்டுகின்றன.
அந்த பாறைகள்
அந்த சிறு பாலங்கள்
பசுமையான மரக்கூட்டங்கள்
இவற்றின் பின்னணியில்
நீர்ச்சேலையை நெளியவிட்டுக்கொண்டு
ஓடுகின்ற
மணிமுத்தாறே!
அந்தக்காட்சிகள் இன்று
ஏதோ ஒரு வறட்சியின்
எலும்புக்கூடுகளாய்
சிதறிக்கிடக்கின்றனவே.
"கல்பொருது இற‌ங்கும்" உன் அருவி
உயிர்களை தின்னும்
கண்ணுக்குத்தெரியாத ஒரு அரக்கியாய்
காட்சியளிக்கும் நிகழ்வுகளும் உண்டு.
நீரில் வலை கட்டிய போதும்
சில மக்களின் உற்சாகம்
அதையும் மீறி அந்த நீருக்குள்
பலியாகிப்போன சோகங்களையும்
மறக்க இயலாது.
ஓ!
எங்கள் அழகிய மணிமுத்தாறே
உனக்கு வயது இல்லை.
மூப்பு இல்லை.
குன்றா எழில் கசியும் குன்றுகளுடம்
பச்சை உயிர் போர்த்த
உன் சீரிளமை எப்போதும்
புன்னகை சிந்தும்.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலயமே
உன் ஒளிர்சிரிப்பை ஏந்திக்கொண்டு
நிற்பதாய்
நான் உணர்ந்திருக்கிறேன்.
எனது பள்ளி திலகர் வித்யாலம்
எனது "பைக்கூட்டையும் புத்தகங்களையும்"
அந்த வழியாய் நான் கடந்து செல்லும்போது
என் மீது செல்லமாய் வீசி எறிந்து
விளையாடுவதாயும் உணர்கிறேன்.
எனக்கு விவரம் தெரிந்து
நான் பார்த்த முதல் கோவில்
அந்த மணிமுத்தாறு அணைதானே.
ஓ மணிமுத்தாறே!
வயதுகளின் சுமையின் அடியில்
நசுங்கிக்கிடக்கும்
அந்த பட்டாம்பூச்சிச்சிறுவனை
மீண்டும் படபட‌த்துச் சிறகடிக்கச்செய்!
இதோ
உன்னைத்தேடித்தான்
வருகிறேன்.
__________________________________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:27 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-21

அவனே தான் அவன்.

 அவனே தான் அவன்.

________________________________________

ருத்ரா


விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து

கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நம் உலகில் எத்தனை எறும்புகள் உள்ளன?

என்று.

இரண்டு போட்டு அதன் பின்னே

பதினாறு முட்டைகள் போட்டுக்கொள்ளுங்கள்.

அத்தனை எறும்புகளா?

சுறுசுறுப்பு. 

வாழ்கையில் வரிசை முறைகள்

வகுத்துக்கொள்ளும் அறிவு.

நினைத்தால் இந்த உலகத்தையே

வாயில் கவ்விக்கொண்டுக்

கிளம்பிவிடும் உறுதி..

இதெல்லாம் நம்மை 

மலைக்க வைக்கிறது.

இயற்கை இந்த மண்ணையே

ஒரு பரிசோதனைக்கூடம் ஆக்கி

பல உயிர்களை ஆக்கி

அப்புறம் அழித்து

ஏதோ ஒரு உண்மையை

கிண்டி கிழங்கு எடுக்க விரும்புகிறது.

டைனோஸார் எனும் 

உயிர் வடிவங்களை

ஆக்கிப்பார்த்த அதன் வரலாறும்

அவை அழிக்கப்பட்ட விதமும்

ஒரு உண்மையை வீசி எறிந்திருக்கிறது.

இன்று "ஹல்க்" எனும் ஹாலிவுட் படைப்பை

நாம் பார்த்திருக்கிறோம்.

ஆம்.இயற்கை தன்னையே

அப்படி ஒரு கதாநாயகனாக‌

படைத்துக்கொண்டு வாழ வேண்டும்

என்ற கனவைத்தான்

டைனோசார் மூலம் காட்டியிருக்கிறது.

போதும் இந்த விளையாட்டு என்று

பெரும் விண்கல் மற்றும்

பெருமழை பனியுகம் மூலம்

அதை கலைத்துவிட்டது.

உடலை பெரிதாக்கி பூதமாக்கி

வாழ்வதை விட‌

அறிவின் திரட்சியான‌

மூளையை பல்மடங்கு நுட்பமாக்கி

அதைக்கொண்டு 

மனிதர்களைப்படைத்துப்பார்ப்போமே

என்ற பரிசோதனையில்

இறங்கி இருக்கிறது இயற்கை.

அந்த மூளை அதற்குள்

பல பில்லியன் மடங்கு நுட்பங்களை

உருவாக்கிக்கொண்டு விட்டது.

மூளையே ஒரு செயற்கை மூளையை

உருவாக்கி

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

தனக்குள் விழுங்கிக்கொண்டுவிடும்

போலிருக்கிறது.

இயற்கையின் இயற்கை இது.

அதன் உள்குத்து அதற்கே தெரியும்.

விஞ்ஞானத்தின் விஞ்ஞானமே 

அஞ்ஞானம் தான்.

என்ன?

ஆம்!

அறிந்துகொள்ளப்படவேண்டியது

பெரும்பிழம்பாய்

அறிவின் முன்

வழி மறித்து அல்லது வழி கொடுத்து

விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது.

மனிதனின் காலடிச்சுவடுகளில்

தன் காலடிச்சுவடுகளையும் 

பதித்துக்கொண்டு

ஒருவன் பின் தொடர்கிறான்.

பின் தொடர்வது யார்?

கடவுள் தான்.

தான் படைத்த பிரபஞ்சத்தை

அறிந்து பார்க்க ஒரு மூளை வேண்டுமே.

அது மனிதனிடம் தானே இருக்கிறது.

அட! நான் தான் அந்த‌

டி என் ஏ ,ஆர் என் ஏ எனும் 

புதிர்களின் முறுக்குச்சங்கிலியை 

வீசியெறிந்தேன்.

அந்த புதிர்களின் புதிர்களுக்குள்ளும்

கணித சமன்பாடுகள் கண்டவன்

மனிதன் அல்லவா?

விட்டால் "கடவுளையே"

வைரஸ் ஆக்கி வலம் வர 

வைத்து விடுவானே அவன்!

மனிதனின் பயணமும்

அவன் முன்னே இருக்கும்

எல்லையில்லாமல் நீண்டுகிடக்கும்

கால் சுவடுகளை ஒட்டியே தான்

தொடர்கிறது.

அவை அவனுக்கு அறிவு.

அவன் பின்னே கடந்து சென்ற‌

கால் சுவடுகளும் அறிவே தான்.

அறிவு என்பதற்கும்

ஒரு ஓர்மை உண்டு.

அறிவும் அறியாமையும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளி ஒன்று உண்டு.

அந்த சிங்குலாரிடி

பெருவெடிப்பா? கருந்துளையா?

அகற்சியா? ஈர்ப்பா?

இதை இறைவன் அறிந்து கொள்ள‌

மனிதனை பின் தொடர்கிறான்.

மனிதனும் இன்னொரு

பெரு மனிதனைப் பின்தொடர்கிறான்.

மனிதன் கடவுளை கற்பனை செய்தபின்

மீண்டும் தான் பின் தொடர்வது ஒரு இறைவன்

என்று கற்பனை செய்து

அந்த அறிவை 

அவனே கொச்சைப்படுத்திக்கொள்வதை

அவன் விரும்பவில்லை.

ஏனேனில் 

மனிதனும் அறிவும் சமம் ஆகும்

ஒற்றைப்புள்ளியும் அவனே தான்.

அவனே தான் அவன்.


________________________________________________




இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:34 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-16

பறப்பான்

 

'It's awesome': world's first flying bike makes U.S. debut | Watch (msn.com)

(Thanks for this LINK)


பறப்பான்

__________________________________

ருத்ரா



மனிதன் வெறும்

"காற்றடைத்த பையடா"..இல்லை

காற்றைக்கட்டி ஆளும்

இயற்பியலை

அவன் "சாதனை இறகு" ஆக்கி

தன் தொப்பியில் சூட்டிக்கொண்டான்.

அமெரிக்காவில் பறக்கும் "பைக்"

வலம் வருவதாக செய்தி இதழ்கள்

புகழ் கூறுகின்றன.

மானிடம் வாழ்க.

மானிடம் வெல்க.

இன்னும் 

வெள்ளைக்கழுத்துடைய‌

பருந்தை

கிருஷ்ணர் என்று நாம்

கன்னத்தில் போட்டுக்கொண்டிருக்கிறோம்.

புஷ்பக விமானத்தை இன்னும்

நாம் பக்தி மூட்டையில் தான்

கட்டிக்கொண்டு

பஜனை செய்து கொண்டிருக்கிறோம்.

விஸ்வரூபம் ஸ்லோகங்களில் இல்லை.

விஞ்ஞான நூல்களில்

அடர்த்தி கொண்டு அமுங்கி இருக்கிறது.

நூல் அணிவு நூல் அறிவு ஆகாது.

மானிடம் எனும் நம்பிக்கையை

உறுதி ஆக்குவது ஒன்றே வழி.

அப்போது நம்

கல்லுக்கும் சிறகு முளைக்கும்.


______________________________________________



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:37 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

 பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்

___________________________________________



மனிதனே

ஐம்பொறிகளின் 

ஆராய்ச்சிக்கூடம் தான்.

தினமும் நடக்கும் 

பரிசோதனைகள் தான்

வாழ்க்கை எனப்படுகிறது.

ஒரு கணித சமன்பாட்டின் தீர்வு

இப்படி ஆரம்பிக்கிறது.

எக்ஸை ஒய் என்போம்.

இறுதியில் இது முரண்பட்டு நிற்கிறது.

எக்ஸ் என்பது ஒய் இல்லை

என்று நிறுவப்படுகிறது.

மறுபடியும்

ஒய்யை எக்ஸ் என்போம்

என்று ஆரம்பிக்கிறோம்.

இதுவும் முரண் பட்டு நிற்கிறது.

முரண்பாட்டின் முரண்பாடு இது.

இது சாத்தியம் இல்லை

எனவே எக்ஸ் இஸ் ஈகுவல் டு ஓய்

என்று 

எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தியரி ஆஃப் நெகேஷன் ஆஃப் நெகேஷன்.

என்று

மார்க்ஸும் ஏங்கல்சும்

பொருள் முதல் வாதம் எனும்

அந்த அரிய "ஜேம்ஸ்வெப்" டெலஸ்கோப்பை

சொற்களின் பொருளுக்கு மிக் மிக 

அருகே 

கொண்டு சென்று விடுகிறார்கள்.

மீண்டும் அந்த‌

ஐம்பொறிக்கூடத்துக்கு வருவோம்.

கொஞ்சம் எட்டிப்பார்ப்போம்.

வாழ்க்கை எனும் துளியினுள்

அந்த வடிவக்கூறுகள் 

நேனோ வாக அங்கே 

இருவரால் ஆராயப்படுகிறது.

கடவுள் மனிதனைத்தேடுகிறது.

மனிதம் கடவுளைத்தேடுகிறது.

இவனுக்கு அவன் கடவுள்.

அவனுக்கு இவன் கடவுள்.

தீசிஸ்..ஆன்டி தீசிஸ்...சிந்தெசிஸ்.

டையலக்டிகல் மெடீரியலிசம்

டார்ச் லைட் அடிக்கிறது.

இப்போது எல்லாம் புரிகிறது.

வர்ணங்கள் இல்லை.

வேதனைகள் இல்லை.

அன்று  "ப்ரவ்தான்" என்பவர்

"வறுமையின் தத்துவம்" என்று

நூல் எழுதினார்.

அதற்கு எதிர் மிரட்டலாக 

அறிவின் கூர்மையான 

வாதங்களைக்கொண்டு

"தத்துவத்தின் வறுமை" என்று

மார்க்ஸ் எழுதினார்.

மனிதனின் மூளைப்பொறிக்குள் தான்

கடவுள் கரு தரித்தான்.


____________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:16 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

குற்றாலக்குளியல்

 குற்றாலக்குளியல்

_____________________________

ருத்ரா



பிரபஞ்சத்தைக்கரைத்து

நுரையாக்கி

பூக்களாக்கி...

கிச்சு கிச்சு மூட்டுகிறது

இதயத்துள்

மென் காந்தள் வருடல்கள்.

குற்றாலத்தையே 

நெய்து கொடுத்த துண்டு 

இடுப்பில்.

தறிச்சத்தம் மென்மையாய்

தண்ணீர் நூல் வழியலில்.


எங்கிருந்தோ

மரம் செடி கொடி இலை

தளிர் 

பளிங்குப்பாறைகள்

எல்லாம் தடவி விட்டு

என்னையும் தடவுகின்ற‌

மின்னல் துளிகளே.

சில்லிட்டு நுள்ளிவிட்டுப்போகிற‌

அந்த 

திவலைகளில் தெறிக்கிறது

பொங்குமாங்கடலின் ஏக்கம்.

நீலமும் சிவப்புமாய்

கொஞ்ச தூரத்து நீர்ப்படலத்தில்

அந்த மீன் கொத்தி

அந்தக்கெண்டையைக்கவ்விய பின்

மீண்டும் போட்டுவிட்டுப்

போகிறது.

"விழியே!விழியே!

உன்னை உண்ண மனமில்லை" என்று.

இந்த குத்துப்பாறைகளிடையே தான்

முளைக்கிறார்கள்

திரிகூட ராசப்பர்களும்

வைரமுத்துக்களும்.


________________________________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:47 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-14

திரண்டு நில்லுங்கள்

 திரண்டு நில்லுங்கள்

__________________________________________ருத்ரா


இளைஞர்களே!

உங்கள் காதுகளுக்குள்

எத்தனை கிலுகிலுப்பைகள்?

உங்கள் இமையோரங்களில்

ஜிகினாக் கனவுகளின் கூடாரங்கள்

எத்தனை? எத்தனை?

இன்னும் 

அடி குத்து வெட்டு

ஆகாசங்களையே சுருட்டு சுருட்டு

என்று பிசைந்து எடுத்து 

எம்பிக்குதித்து

எத்தனை சொமர்சால்ட்டுகள்?

சூப்பர்ஸ்டார் அரிதாரங்களின்

நயாகரா நீர்வீழ்ச்சிகளில்

சுகமாக தொலைந்து போகிறீர்கள்?

கால ஓட்டங்கள்

உங்களையும் சுமந்து கொண்டுதான்

ஓடுகின்றன.

நெட்ஃப்லிக்ஸ் உங்கள் நுண்பொறிகளில்

மயில் இறகுகள் கொண்டு

கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சத்யஜித்ரே பாணி படங்களின்

கலவையில்

பாகுபலி கிராஃபிக்ஸ்களும்

சேர்ந்து உங்கள்

சினிமாத்தனத்தை தோலுரிக்கத்

துவங்கி விட்டன.

சிட்டிசன்களின் முதுகுக்குப்பின்

நிழல்களாக‌

நெட்டிசன்களாகவும்

நீங்கள் மார்ஃபாசிஸ் பிம்பத்துள்

நன்றாகவே அச்சம் காட்டுகிறீர்கள்.

இந்த சமுதாய மருத்துவத்தில்

போலிகளும் 

பணமூட்டைகளைக்கொண்டு

வக்கிரம் அடைந்த அரசியலை

பிலிம் காட்டும் அபாயங்களையும்

ஓ! இளைஞர்களே!

உங்கள் அறிவின் திட்பத்தின்

நுட்பம் கொண்டு எதிர்க்கத்

திரண்டு நில்லுங்கள்.

நம்பிக்கையின் கொழுந்து நெருப்பில்

நீங்கள் காட்டும் வெளிச்சமே

இங்கு 

எல்லா கனத்த  இருட்டுக் கத‌வுகளையும்

தவிடு பொடியாக்கி விடும்.


_____________________________________________________

 


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:32 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-13

கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

 கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்

_________________________________‍‍




"காலை வேம்பின் கசப்பு நிழல்"

இந்த ஒரு வரியே கவிதை ஓவியம் தான்.

இல்லாத நாயோடு

இருக்கும் நாய்கள் கட்டிப்புரண்டு

விளையாடுவதாக...

என்ன கூரிய..ஆழ்ந்த சிந்தனை!

ஆனித்தேரோட்டத்தில்

ஆயிரம் ஆயிரம் மக்கள்

பக்தியில் கட்டிப்புரண்டு 

களிப்பது நமக்கு காதலாகி கசிந்து

கண்ணீர் மல்குவது தெரிகிறது.

அந்த இல்லாத இன்னொருவனுக்கு

ஆயிரம் டன் எடையை வைத்து

இழுத்து வேர்த்து

மயிலிறகுச்சாமரத்தில் காற்று வாங்கி....

முற்றுப்புள்ளி அவசியமில்லாத ஒன்று.


________________________________________

ருத்ரா



















இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:10 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

வண்ணதாசனின் தரிசனம்.

 வண்ணதாசனின் தரிசனம்.



ஒரு சாவை 

அவர் தரிசனம் செய்ததில்

ஆயிரம் கோயில்கள்

குடி கொண்டிருந்தன.

அந்த உடலை மற்றவர்களோடு

சேர்ந்து தூக்கி கிடத்தியது.

அந்த கால்விரல்களை 

கயிற்றில் முடிச்சு போட்டது.

உயிரற்ற உடலைப்பற்றிய‌

அவரது கவிதை

அத்தனை உயிர்ப்புடன் இருந்தது

சிறு வயதுகளில்

நெய்ப்பந்தம் பிடிக்கும்போது மட்டும்

கூப்பிடுவார்கள்

தாத்தாவுக்கு 

சொர்க்கம் செல்லும் பாதையின்

இருட்டை துடைத்து அழிக்க.

மற்றபடி 

பசங்களா..பக்கத்துலெ வராதீங்கலெ

பயந்திருவீங்க..

வெளயாடப்போங்கலேன்னு

வெரட்டீருவாங்க.

சாவு செய்தியே தீட்டாகி

பக்கத்திலே

குழல்வாய்மொழி சமேத ஒரு

சிவன் கோயிலையே

இழுத்துப்பூட்டி விடுவார்களே.

இந்த நிலையில் 

நீக்கள் சாவும் கூட‌

மனிதன் அழகிய பக்கங்களில்

ஒன்று என்றும்

அவனால் முற்றும் என்று

எழுதிய நாவலின் முற்றுப்புள்ளியை

பார்க்கவே முடியாத 

எழுத்தாண்ட பக்கம் என்றும்

நினைத்திருப்பீர்களோ.

சாவைப்பற்றி 

சுகமாக ஒரு கவிதை எழுத‌

எமனின் மடியையே 

சௌகரியமான ரெக்ளைனிங்க் சேர் ஆக‌

வைத்து எழுதும் வல்லமை பெற்றவர்

நீங்கள்.

முயன்று முயன்று பார்த்து

வலிக்க வைக்க எண்ணியது மரணம்

கவிஞனை!

வாடா! காலால் உன்னை எட்டி 

உதைக்கிறேன்

என்ற அந்த எரிமலைக்கவிஞனின்

எட்டயபுரத்து சுவாசம் 

இன்னும் அடங்கவே இல்லை.

நாம் தான்

நினைவு தின தோரணங்களில்

அவனை 

தொங்க விட்டுக்கொண்டிருக்கிறோம்.

சாவு என்ற புள்ளி

பின்னுக்கே போய்

அந்த மாணிக்க கருப்பையில்

சுடர் பூத்ததையும்

தரிசனம் செய்பவன் 

கவிஞன் எனப்படுகிறான்.


______________________________________________

ருத்ரா



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 12:19 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-12

கழச்சி

 தாசாலில் இருந்து கொண்டு

கால்களை நீட்டி

ஒரு சௌகரியத்தில் அமர்ந்து

அடுத்த வீட்டு

மீனாட்சி அக்காவுடன்

என் அக்காவும்

கழச்சி ஆடுவாள்.

தங்க அதலி செடியின் 

மஞ்சள் பூவும் 

அதன் பச்சைக்காய்களும் கூட‌

அவர்களோடு

பாட்டுப்பாடி ஆடும்.

அந்த பச்சைக்காய்களின்

பச்சநாவிக்கொட்டைகளா

இந்த உல்லாச விளையாட்டுக்குள்

பாத்திரம் வகிக்கின்றன?

அமுதமும் நஞ்சும் உடன்பிறப்புகள் தானே

பாற்கடல் பாசுரத்தானுக்கு.

பாட்டில் புராணம் கூட வரும்.

ஏன்

அந்த இந்திரனுக்கு

ஆயிரம் கண் முளைத்த 

பிலாக்கணங்கள் கூட வரும்.

அந்த தாஸாலில் 

கழச்சிகளாய் கலீர் கலீர்

என்று ஒலிப்பது

இப்போது வெறும் வயதுகளாய்

கரைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.


____________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:51 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

  வாழ்க்கையை

வாழ்வதற்குப்பதில்

அதை 

கவிதை சிறுகதை

நாவல் என்று

நறுக் என்று கடித்தோ

நாவல் என்று

பல்லில் கடித்து

சவ்வு போல் இழுத்து 

பீட்ஸா தின்பது போல்

தின்றோ

ரசிக்கலாம்.

இசை ஆல்பங்கள் என்று

லட்சக்கணக்கில்  கோடிக்கணக்கில்

ஸரிகமபதிநிஸவை

பதினியில் நொங்குவெட்டிப்போட்டு

அந்த பனையோலைப்பட்டையில்

உறிஞ்சுவது போல்

ருசிக்கலாம்.

இன்னும் கண்ணாடிப்புட்டி

சொர்க்கங்கள் இருக்கின்றன.

நெட்ஃப்ளிக்ஸ் கிளிக்குகளில்

வாழ்க்கையின் காமிரா பிம்பங்களை

உருட்டிப்பிசைந்து உண்ணலாம்.

இதற்கு மேல்..

வாழ்க்கை என்றால்

வெறும் மன அடுக்குகள்.

அதன் ஹாலுசினேஷ சிமிட்டல்கள்

ஃப்ராய்டிஸ உட்பிறாண்டல்கள்..

இல்லாவிட்டால்

மாண்டூக்ய உபநிஷத காரிகைக்கு

உள் நுழைந்து 

முடக்கென்று பிடித்துக்கொண்ட‌ 

சிந்தனைச்சுளுக்குகளை

நீவி விடும் கௌடபாதன் வரிகள்..

தொடாமலேயே

சிந்தனை செயல் அறிவு உணர்வு

ஆகியவற்றால் தொடாமல் தொடுவது எனும்

"அஸ்பரிச யோகம்"...

ஆம்..

வாழாமலேயே வாழ்வது...

சரி தான்

அந்த முட்டை அப்படியே இருக்கட்டும்.

அதிலிருந்து

இந்த பிரபஞ்சங்கள் சிறகு முட்டிக்கொண்டு

வெளி வரட்டும்...

சரியா..

வாழ்க்கை எனும் அது

எப்படியேனும் வாழட்டும்..

அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே

நமது வேலை..

அல்லது இலக்கியம் 

அல்லது தத்துவம்

அல்லது

எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...

சமுதாயம்..

இதன் ரம்ப நாக்குகள்

அறுத்து தள்ளும்

அவலங்களின் சிதிலங்களின்

சித்திரங்கள் 

ரத்த வண்ணத்தில் மட்டுமே

வலியை வடித்துக்கொண்டிருக்கட்டும்.


_________________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 11:15 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-11

திரைச்சீலை

 


சன்னலுக்கு 

பூப்போட்ட துணியில்

திரைச்சீலை மாட்டியிருந்தது

புதிதாய்.

வானம் வெட்கப்பட்டது 

கண்டாங்கிச்சீலை 

உடுத்திக்கொண்டது போல்.

பறவைகளும் அந்த வண்ணக்கிளையில்

கூடு கட்டிக்கொள்ளத் தவித்தன.

உள்ளே வந்துவிட்ட‌

பட்டாம்பூச்சிகளும் மலர்களைத்தேடின.

சிறகுகளில் ஒட்டியிருந்த‌

மகரந்தங்களை

சன்னல் கம்பிகளில்

உதிர்த்துவிட்டுப்போயின.

பூக்கள் மீது

மண்ணாங்கட்டிகளுக்கும்

இங்கு மோகம் தான்.

சன்னலை ஒட்டியிருந்த அந்த‌

மேஜையில்

என் பேனாவும் காகிதமும் மட்டுமே

மலடு தட்டிக்கிடந்தன.


_______________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:09 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-05

தீர்வு

 தீர்வு

____________________________________________‍

ருத்ரா



அந்த பாழடைந்த மூலையில்

நூலாம்படைகளின் சித்திரம்.

தூரிகை

கண்ணுக்குத்தெரியாமல்

வண்ணங்கள் ஏதும் குழைக்காமல்

அந்த கோட்டோவியமே

நம் நிலை காட்டும் ஓவியம்.

எத்தனைப் பூச்சிகளை

சுருட்டி சுருட்டிப்போட்டு

அந்த சிலந்தி விழுங்கியிருக்கிறது.

சாதியாக‌

மதமாக‌

சடங்குகளாக‌

சாஸ்திரங்களாக‌

மந்திரக்கூப்பாடுகளாக‌

இந்த மக்கள் எல்லாம்

இந்த மாயவலையில் 

சுருட்டப்படுகிறார்கள்.

இத்தனை நூற்றாண்டுகளாக‌

இந்த பின்னலும் நெசவும்

மூடத்தனத்தில் முடங்கிய நம்

சரித்திரங்களையே 

சின்னாபின்ங்களின்

சித்திரங்கள் ஆக்கியிருக்கின்றன.

அந்த பாழடைந்த மூலைகளில்

இதோ நம்

பகுத்தறிவு தீப் பந்தங்களைப்

பிடியுங்கள்.

விட்டால் இந்த சாணக்கிய சிலந்திகள்

விடிவின் வாசல் திறக்கும்

சூரியன்கள் மீதே

ஒட்டடை படர்ந்து

நம்மை 

அறியாமை இருட்டில் தள்ளிவிடும்.

விழித்தெழு தமிழா!

இனி உன் குரலே 

யாவற்றுக்கும் தீர்வு.


______________________________________________‍‍









இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:51 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-04

எல்லோரும் கொண்டாடுவோம்

 எல்லோரும் கொண்டாடுவோம்

__________________________________________________



கடவுள் என்பதை 

மனிதனே  உருவாக்கினான்.

மனிதன் முதன் முதலில் 

அறிவு கொண்டு சிந்திக்க தொடங்கிய போது

இது என்ன? 

அது ஏன்? 

இது எப்படி? 

என்ற கேள்விகளால் துளைக்கப்பட்டான்.

எல்லாம் எப்படி தொடங்கியது 

என்பதில் தான் 

அவன் தேங்கிபோனான்.

அது செயற்கையான கொள்ளுதல் (கொள்கை)

ஆக இருக்கும் போது 

இதை வைத்துக்கொள்ளுவோம் என்று

தன் கைப்பிடிக்குள் (பிண்டம்) ளிருந்து 

ஒன்றை உருவாக்கினான். 

அப்படித்தேங்கியவர்களே 

கோவில் என்றும் சிலை என்றும் 

கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முழு மனிதர்களாக 

மேற்பட்ட கேள்விகளை 

இன்னும் கேட்டுக்கொண்டிருப்பவர்களே

இந்த உலக வாழ்க்கையின் வளர்ச்சியை 

உருவாக்கி இருக்கிறார்கள்.

அவர்களுடைய செயற்கை செட்டிங்குகளே

இந்த மதங்கள்.

இந்த பொ(ய்)ம்மைகளை வைத்து 

முதிர்ச்சி அடையாத 

இவர்கள் விளையாடலாம்.

ஆனால் பொம்மை ஆயுதங்களை 

உண்மை ஆயுதங்கள் ஆக்கி 

மனிதர்களை பலிகொள்ளும் அளவுக்கு 

"கெட்ட போரிடும்"நிகழ்வுகளில் வீழ்வது 

மனிதப்பரிமாணத்தின் 

தலைகீழ் வீழ்ச்சி.

இது சாதாரண வீழ்ச்சி அல்ல‌

ஒரு நயாகரா வீழ்ச்சி.

பாருங்கள் அதன் குதியாட்டங்களை.

இரைச்சல்காடுகளில்

அமுங்கிப்போனவை 

மெல்லிய உண்மைகளே.

மனிதனே கடவுள்.

மனிதனுக்கு மனிதனாய்

வாழும் அந்த அன்பு மின்சாரத்தின்

பாய்மமே பிரம்மம்.

அப்படி என்றால் கடவுள் என்று

ஒன்றுமே இல்லையா?

ஆம்.

நான் சொன்னால் நீ கோபம் கொள்ளுவாய்.

நீயே

சொல்லிக்கொள்ளேன்.

ஆம்...

இல்லை.



__________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:49 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சப்பரம்

சப்பரம்

___________________________________________

ருத்ரா



ஒவ்வொரு மணித்துளியும்

சொட்டு சொட்டாய்

முற்றுப்புள்ளி வைக்கிறது.

இடைவெளியைக்கூட‌

லட்சக்கணக்காய் கூறு போடுகிறது

இயற்கை எனும் இயற்பியல்.

அந்த நுண்துளிக்காலத்தில்

நுண்ணுயிரிகளின்

பிரபஞ்சங்கள் பல கோடி.

எதை அடையாளம் காண்பது.

ஆம்.

திரும்பிப்போக‌

வீடு மறந்து விட்டது

கடவுளுக்கு.

மனிதன் வழி காட்டுகிறான்

தன் கணித நுட்பத்தால்.

"எண்கள் என்பவை எல்லை கடந்தது.

அதில் பகா எண் எனும் 

ப்ரைம் நம்பர்களின்

இறுதி எண்ணில் தான் 

உங்கள் வீடு" என்றான்.

கடவுளும் மலைத்தது போல் நின்றார்.

அப்புறம் 

சிரித்துக்க்கொண்டே சொன்னார்.

அந்த வீடு நீ தான்.

அதில் எப்போது நுழைவாயோ

அதில் தான் நானும் நுழைவேன்."

அவனது "வாயேஜர்"

இப்போது தான்

சூரியன் வீட்டு புழக்கடையைத்

தாண்டியிருக்கிறது.

"ம்ம்ம் சப்பரம் புறப்படட்டும்."

குரல்கள் குதூகலித்தன.

கோவிலிலிருந்து 

சாமி ஊர்வலம் துவங்கியது.


___________________________________________________ 

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:31 PM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-03

உனக்கு புரிந்து போயிருக்கும்

 எப்படி வேண்டுமானலும் 

எதற்கு வேண்டுமானாலும்

கவலைப்படு.

கவலைப்படவேண்டுமே 

என்ற 

கவலையே இல்லாமல்

கவலைப்படு.

கவலைகள் அடர் மழை தான்.

இந்தக் கவலையையே

குடையாக்கிக்கொள்.

கொஞ்ச நாளில் 

உன் அகராதியே மாறிப்போகும்.

எந்தச்சொல்லுக்கு

நீ அர்த்தம் தேடினாலும்

அது கவலை என்றே

அர்த்தம் சொல்லும்.

இப்போது தான்

ஒரு சொல்லின் அர்த்தம்

அகராதியே இல்லாமல்

உனக்கு புரிந்து போயிருக்கும்.

அது

"வாழ்க்கை"


___________________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 8:23 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-02

புழுக்கூடு உடைந்தது.

 புழுக்கூடு உடைந்தது.

______________________



கடவுள் 

ஒரு சுகமான தலையணை.

சூரியக்கதிர்கள்

மயில்பீலிகளாய் வந்து

சன்னல் கம்பிகளை

முத்தமிட்டு

என் முகத்திலும் 

அது நிழலாடும்போது

புரிகிறது

இரவெல்லாம் அந்த தலையணையில்

பள்ளம் விழுந்து

என்னோடு புரண்டு கொண்டிருந்தது

கடவுள் தான் என்று.

இவ்வளவு காலம் இப்படியிருந்த‌

தலையணையின் பள்ளத்தாக்கில்

ஒரு நாள் திடீரென்று

ரோஜாக்களின் மழை?

அதில் கிளு கிளுப்பாய்

சிரிப்பொலிகள்.

ஓ!

இது அவள்.

அந்த பேருந்து நிறுத்தத்தில்

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை.

கடவுள் கட கடவென்று சிரித்தார்.

நண்பா!

இது நான் செய்த புதிய ஏற்பாடு.

அந்த பழைய ஏற்பாடு போதும்.

தலையணயில் ஒரு ஈடன் தோட்டம்

உனக்கு 

ஒரு புதிய பூவை வீசியிருக்கிறது.

மகரந்தங்கள் பரிமாறிக்கொள்ளட்டும்.

இந்த மூளியான வெளியிலிருந்து

நான் எறிந்த மலர்களின் ஏணி இது.

உயிர்ப்பூவின் நாளம் 

அறுபடுவதற்கு நீ அனுப்பப்படவில்லை.

மகிழ்ச்சியாய் இரு.

மனிதம் எனும் முதல் குமிழிப்பூ

அதிலிருந்து தான்

இதழ் விடுகிறது.

புழுக்கூடு உடைந்தது.

வண்ணச்சிறகுகள் வானம் நிரவட்டும்.

போய் வருகிறேன்.

இப்போது தலையணை மறைந்து போனது.

கனவு மேகங்களின் 

பஞ்சடைத்த தலையண தான்

எப்போதும்.

அவள் சிரிப்பில் புல்லரித்துப்போய்...

புரண்டு கொண்டிருக்கிறேன்.

சூரியன் சுள்ளென்று கடித்தான்

கட்டெறும்பு போல்


____________________________________________________

ருத்ரா



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:27 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தேங்காய்களின் உலகதினம்

 தேங்காய்களின் உலகதினம்

___________________________________

ருத்ரா



உலகத்தேங்காய்களே!

அதற்கு முன் நீங்கள்

இளநீர்க்காய்கள்.

அதற்கு முன் 

நீங்கள் தென்னை மரங்கள்.

உள்ளே குலுங்குவது

இனிக்கின்ற வெறும்

தண்ணீர் அல்ல.

ஈழத்தமிழர்களின் 

லட்சம் படுகொலைகளுக்கு

இன்னும் 

வடிக்கின்ற கண்ணீர் தான் அது

என்று

ஓ உலகத்தேங்காய்களே

உங்களுக்கு ஓர்மை இல்லையோ?


_____________________________________________


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:29 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

அரிதாரம் பூசுகின்றது

 


சொட்டு சொட்டாய் 

என் மீது உதிர்ந்து கொண்டிருக்கிறது.

அதை

பேனாவுக்குள் அடைத்து

அல்லது 

விசைப்பலகையில் 

தட்டச்சுக்குள் கோர்த்து

மாலை தொடுக்கிறேன்.

எழுத்துக்குள் ரசம் பாய்ச்சி

ஒரு கண்ணாடி பிம்பமாய்

என்னைக் காட்டிக்கொண்டேயிருக்கிறது.

அங்கங்கே திட்டு திட்டாய்

ரசம் இல்லாத இடத்தில்

இன்னொரு முகம்

தெரிகிறது.

அது யார்?

அது ஏன் தெரியவேண்டும்?

சிரிப்பு தெரிகிறது.

அதன் அழைப்பின் சுழிப்பில்

நீலக்கடலும் நீலவானமும்

கலந்து கொடுத்த காக்டெய்லில்

கலர் கலர் கனவுகள்

இமை விளிம்பில் 

அரிதாரம் பூசுகின்றது


______________________________________________

ருத்ரா

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:56 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2022-09-01

"இன்பச்சாறு"


ஏன் புலம்புகின்றீர்கள்?

எதற்காக இந்த‌

ஒப்பாரியும் அழுகையும்?

அழுகை என்பது எதிர்மறை.

இதனை நேர் மறையாக்க‌

அந்த ஏழுகடல் கண்ணீர்

அத்தனையயும் அல்லவா

இறைத்தாக வேண்டும்.

நேர் என்ன?எதிர் என்ன?

எல்லாம் நலமாக இருந்தால்

வண்ண மயில்  முருகன் 

அழகோ அழகு தான்.

உள்ளம் கொஞ்சம் குப்புறக்கவிழ்ந்தாலும்

எரிச்சலில்

இந்த ரெண்டு பொண்டாட்டிக்காரனை 

கும்பிட்டு என்ன லாபம் என்போம்.

கடவுளுக்கு தாடி மீசை

கொம்பு பல் மழு ஆயுதம்

கூடவே இரண்டு மூன்று

பொண்டாட்டிகள்...

இதெல்லாம்

நம் மனத்து அரக்கத்தனங்கள்.

நம் மனதுகளையெல்லாம் கழற்றி

அடித்துத்துவைத்து காயப்போட்டு

மடித்து எடுத்து வைக்க வேண்டும்.

புத்தகங்களும் கூகிள்களும் போதும்.

சிறு பிள்ளை விளையாட்டுக்கு

மாத்திரமே

கோவில்களும் கும்பாபிஷேகங்களும்.

இப்போது இது கோரைப்பல் காட்டி

பலி கேட்கிறது.

மத முக்த் பாரதம் தான் வேண்டும்.

இல்லாவிட்டால்

காணி நிலம் வேன்டும்..

பத்து பதினைந்து தென்னை மரங்கள் 

வேண்டும்.

அதனூடு முத்துச்சுடர் போல்

முழு நிலா வரவேண்டும்...

என்றெல்லாம் 

எழுத்தைப்பிழிந்து "இன்பச்சாறு"

குடிக்கலாம்.


__________________________________________________

ருத்ரா


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 7:22 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

மாய அம்பு.

 


ராவணன்களால் தானே

இங்கே ராமனுக்கு மதிப்பு.

"ராம்லீலாவில் 

ராவணன்களை கொளுத்திய பிறகு

ராமர் கோயிலுக்குள் இனி

ராவணன் சாம்பல் தானே மிச்சம்.

இப்போது

இவர்களின் ராமருடைய அம்புக்கு 

வதம் ஆவது 

இந்த மக்களே மக்களே மக்களே தான்.

பெட்ரோல் விலையே 

ராமனின் 

அந்த மாய அம்பு.


_________________________________ருத்ரா

20.10.2021

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 10:38 AM 3 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

கருத்து தெரிவி

 கருத்து தெரிவி

_______________________________

Facebook

எதை தெரிவிப்பது?

போதும்.

எழுபத்திஐந்து ஆண்டுகள் 

ஆகிவிட்டன.

அந்தக்கொடியை சுருட்டி மடக்கி

வைத்து விட்டு

இன்னும் நூறாண்டுகளுக்கு

முதலிலிருந்தே

தொடங்க வேண்டும்.

நம்மை எதிர்த்து

நமது போராட்டத்தை.

மூக்கிலிருந்து வழியும்

சளியோடும்

முழு நிர்வாணத்துக்கு

நழுவும் 

அரை டவுசரோடும்

அந்த 

தலைச்சுமை ஏந்தி நிற்கும்

செல்வங்களுக்கும்

நம் பொருளாதாரத்துக்கும்

எந்த சம்பந்தமும் இல்லை

என்று

நம் பொட்டில் அறைகிறது

இந்த காட்சி.

அந்த அன்பரின் அரவணைப்பு

சட்டென்று விழும் 

நம் கண்ணீர்த்துளிகளை

துடைத்து விடுகிறது.

___________________________ருத்ரா



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:57 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

தவளைச் சத்தங்கள்

 தவளைச் சத்தங்கள்

_____________________________________

ருத்ரா




ஹை வேயா?

அனக்கொண்டாவா?

ஏழைகளின் துண்டு துண்டு

நிலங்கள் கூட 

விழுங்கப்பட்டு விட்டனவே.


________________________________________1



பெட்ரோல் விலையிலா>

சிலிண்டர் விலையிலா?

ஓட்டல் இட்லி விலையிலா?

மூச்சு இழுத்துக்கொண்டிருக்கிறதே

என்று

மருத்துவ மனைக்குள் போனால்

அந்த "படுக்கை"க் கட்டணத்திலா?

எதில் இருக்கிறான்

நரகாசுரன்?

இந்த தீபாவளிக்குள்ளாவது

சொல்லிவிடுங்களேன்.


____________________________________________2



2024 என்று

பீதி கிளம்பிக்கொண்டிருக்கிறதே.

அந்த‌

"ஃபேண்டம் கேலக்சி"

நம் தலையில் வந்து

விழுந்திடுமோ?


____________________________________________3

இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 9:24 AM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

சன்னல் வழியே

  சன்னல் வழியே 

-------------------------------------------------------------------------------

ருத்ரா 



சன்னல் வழியே

ஒரு நீல சதுரமாய் வெட்டியெடுத்த‌

வானம் என் காதுகளில்

கிசு கிசுத்தது.

எங்கோ எதிலோ ஒரு 

மாங்கிளையிலிருந்து

ஒரு மைனா 

இந்த பிரபஞ்சத்தின் 

ஜியாமெட்ரியின் கணித சூத்திரத்தை 

சொல்லி சொல்லிகாட்டியது.

மனிதம் எனும் 

அந்த மத்தாப்பு வெளிச்சத்தின் 

வண்ணம் காட்டியது.

சாய்வு நாற்காலியின் 

அரைப்படுக்கை நிலையிலும் 

என் கனவுக்கு முதுகுத்தண்டு 

இன்னும் முறியவில்லை.

அது ஏன் 

தனி மனிதன் கூட்டமாகும்போது 

வெறும் மந்தையாகின்றான்.?

ஈசல்கள் உதிர்த்த 

இறக்கை குப்பைகளாகின்றான்?

"டப்" என்று ஒரு சத்தம்.

என்னவென்று சன்னல் வழியே நோக்கினேன்.

ஒரு காக்கை மின்சாரக்கம்பத்திலிருந்து 

செத்து விழுந்தது.

மறுகணம் 

ஒன்று ,இரண்டு ,மூன்று...என்று 

காக்கைகளின் எண்ணிக்கை 

வானத்தையே விழுங்கும் சமுத்திரம் ஆனது.

அது வெறும் 

இந்து மகா சமுத்திரம்  அல்ல.

இந்த மண்ணின் அடிவயிற்று 

சீற்றங்களின் லாவாக்களின் 

கருப்பு இறக்கைகளின் அலைவிரிப்புகள்.

போதும் 

எங்களுக்கு கிளிகளும் மயில்களும் வேண்டாம்.

இந்தக்காக்கைசிறகுகளே வேண்டும்.

காக்கைச்சிறகின் அந்த சிவப்பு நந்தலாலாக்கள் 

அணிவகுத்தால் 

இந்த கடப்பாரைகளும் புல்டோசர்களும் 

தவிடு பொடியாகும்.


-------------------------------------------------------------------------------------



இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 4:22 AM 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Followers

உள்ளே...

  • ►  2025 (6)
    • ►  Apr 2025 (6)
  • ►  2024 (64)
    • ►  Aug 2024 (6)
    • ►  Jul 2024 (14)
    • ►  Jun 2024 (11)
    • ►  May 2024 (18)
    • ►  Apr 2024 (13)
    • ►  Mar 2024 (2)
  • ►  2023 (38)
    • ►  Dec 2023 (5)
    • ►  Nov 2023 (4)
    • ►  Oct 2023 (1)
    • ►  Jul 2023 (6)
    • ►  Jun 2023 (3)
    • ►  Apr 2023 (2)
    • ►  Mar 2023 (8)
    • ►  Feb 2023 (9)
  • ▼  2022 (52)
    • ▼  Dec 2022 (5)
      • நிழலாடு முன்றில்
      • "அயலான்"
      • தமிழ்ப்பூவே.
      • தரிசனம்.
      • ஓடி விளையாடு
    • ►  Nov 2022 (7)
      • கோடு
      • நிழலாடு முன்றில்
      • பட்டினத்தாரும் கொண்டைவைத்த பம்பரமும்
      • பாடுங்கள் ஒரு பாட்டு.
      • கொலுசுகள்
      • அழலேர் வாளின் ஒப்ப
      • குகை
    • ►  Oct 2022 (9)
      • STANDARD MODEL by L
      • ஓவியன்
      • தீபாவளி வாழ்த்துக்கள்
      • திருநீறாற்றுப்படை
      • பரிமாணங்கள்
      • பொன்னியின் செல்வன்
      • மானுடமே ஓங்கட்டும்.
      • பிரம்ம சிரிப்பு
      • வீரசிவாஜி வாழ்க!
    • ►  Sep 2022 (31)
      • வைராவி குளம்
      • பெரியார் ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
      • இன்று இதயங்களின் தினம்
      • வௌவால் பிரபஞ்சம்
      • "கவுண்ட் டவுண்"
      • நாகேஷ்
      • முற்றுப்புள்ளி இல்லாமல்...
      • "இந்த லிங்குக்கு மிக்க நன்றி"
      • மணிமுத்தாறே!
      • அவனே தான் அவன்.
      • பறப்பான்
      • பொறிஞர்களுக்கு ஒரு உலக தினம்
      • குற்றாலக்குளியல்
      • திரண்டு நில்லுங்கள்
      • கல்யாண்ஜியின் நாய்க்குட்டிகள்
      • வண்ணதாசனின் தரிசனம்.
      • கழச்சி
      • எதையோ சொல்லிவிட்டுப்போங்கள்...
      • திரைச்சீலை
      • தீர்வு
      • எல்லோரும் கொண்டாடுவோம்
      • சப்பரம்
      • உனக்கு புரிந்து போயிருக்கும்
      • புழுக்கூடு உடைந்தது.
      • தேங்காய்களின் உலகதினம்
      • அரிதாரம் பூசுகின்றது
      • "இன்பச்சாறு"
      • மாய அம்பு.
      • கருத்து தெரிவி
      • தவளைச் சத்தங்கள்
      • சன்னல் வழியே
  • ►  2021 (18)
    • ►  Sep 2021 (11)
    • ►  Aug 2021 (6)
    • ►  May 2021 (1)
  • ►  2019 (1)
    • ►  May 2019 (1)
  • ►  2018 (1)
    • ►  Feb 2018 (1)
  • ►  2016 (4)
    • ►  Sep 2016 (2)
    • ►  Aug 2016 (1)
    • ►  Jan 2016 (1)
  • ►  2015 (4)
    • ►  Dec 2015 (2)
    • ►  Oct 2015 (2)
  • ►  2014 (12)
    • ►  Sep 2014 (2)
    • ►  Aug 2014 (2)
    • ►  Jul 2014 (2)
    • ►  Jun 2014 (2)
    • ►  Feb 2014 (4)
  • ►  2011 (1)
    • ►  Oct 2011 (1)
  • ►  2009 (3)
    • ►  Jul 2009 (1)
    • ►  Mar 2009 (2)
  • ►  2008 (1)
    • ►  Nov 2008 (1)

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
பதிப்புரிமை ஆசிரியர்க்கே. Simple theme. Powered by Blogger.