2022-12-03

தமிழ்ப்பூவே.

 தமிழ்ப்பூவே.

உனக்குள் புயல் உண்டு.

தழல் உண்டு.

தாகமும் உண்டு

வேகமும் உண்டு

எப்படி இந்த‌

பிணத்தூக்கம் வந்தது?

உன் மண்ணும் மொழியும்

நீ மறந்து விட்டால்

உன் கால் படும் 

புழுதி கூட‌

ஹை ஹை என்று

"இந்தி" யால்

உனை குதிரை ஓட்டும்.

கவனம் கொள்.

இந்தி மொழியும் உன்

சிந்துவின் மொழிதான்.

ஆனால்

அது தேவபாடையாய் அல்லவா

உனக்கு ஒரு

பாடை கட்ட வருகிறது.

கவனம் கொள் தமிழா!

கவனம் கொள்!


_________________________________________

ருத்ரா

No comments: