2024-05-07

சுஜாதாவின் விசைப்பலகை

 



சுஜாதாவின் விசைப்பலகை


______________________________________________ருத்ரா






சுஜாதாவின் "யாகம்"

________________________________



"என் கையைப் பின்பக்கத்தில் கட்டினாள்."அழைத்துச் செல்லுங்கள்" என்றாள்.


ஆறு பேர் என்னை நெருங்கினார்கள்."






சுஜாதாவின் "யாகம்" சிறுகதை இப்படி முடிகிறது.




அப்புறம் நம் விஷுவலைசேஷனில்


எல்லாம் தெரிகிறது.


எல்லாம் புரிகிறது.


ஒரு வீட்டுக்கு ஒருவனை பலிகொடு.


ஒரு ஊருக்கு நாலு பேரை பலிகொடு.


ஒரு நாட்டுக்கு


ஆயிரம் ஆயிரமாய் பலி கொடு.


பிரம்மம் எனும் ஆர்கசம் எனும் பேரின்பம்


அப்போது தான் உச்சம் பெரும்.


வேத ஸ்லோகங்களின் 


அடி அமிலம் 


இப்படித்தான் 


மனிதனோடு சேர்த்து 


சமூகத்தை எரிக்கிறது.


எரிக்கிறதை


புனிதமாகச்சொன்னால் "யாகம் அல்லது யக்ஞம்".


கோத்ராவும் புல்வாமாவும்


அப்படித்தான் என்று


பத்திரிகைகள் எழுதலாம்.


வேதங்கள் காற்றின் ஒலிகள்.


அது மனித நாக்குகளில் வருடப்படும்போதே


அபவுர்ஷம் என்பதிலிருந்து


புருஷம் ஆகி தீட்டு ஆகிவிடுகிறது.


அப்புறம் எதற்கு இந்த‌


புருஷ சூக்தங்களும்


வர்ணாசிரமங்களும்?


சுஜாதா 


(அவர் பூணூலில் இருந்தால்)


இப்படி எழுதுவது


ஒரு எழுத்தின் நேர்மையின் நெருப்பாகத்தான்


இருப்பதாக நமக்கெல்லாம்


சிலிர்க்கிறது.


ஆரியம் திராவிடம் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்


இன்னும் வடமொழிகளும் கூட‌


ஃபிஸிக்ஸின் "க்ராண்ட் யுனிஃபிகேஷன்" போல்


ஒரு புள்ளியில் நிலைகுத்துகிற வேலையை 


சுஜாதா அவர்கள் செய்திருப்பார்.


இப்போதும் கணிமொழிக்குள்


தமிழின் ஒரு சங்கப்பலகையை


தோண்டியெடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகள்


செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.


சுஜாதாவின் எழுத்துக்குள்


நம் தமிழ் தொன்மையின் ஃபாசில்கள் கூட‌


உறங்கிக்கொண்டிருக்கலாம்.


வேதத்தை அகழ்வாராய்ச்சி செய்தால்


தமிழ் எனும் அந்த ராட்சச டினோசார்களின்


எலும்பு மிச்சங்கள் கிடைக்கலாம்.


பக்கங்களை சேர்த்துக்கொண்டே


கடைசி அட்டைக்கு காத்திருக்காமல்


ஆயிரம் ஆயிரம் பக்கங்களை 


அடுக்கிக்கொண்டே போகும்


அசுர புத்தகம் சுஜாதா.


அத்தனையிலும் அறிவுத்தேனின் 


இனிப்புகள் பிலிற்றும்


இன்ப அனுபவங்கள்.


அவர் எழுத்துக்களுக்குள் நுழைந்து


ஒரு ஹிக்ஸ் போசானின்


செக்ஸ் கலைடோஸ்கோப்பை


அதாவது 


("கப்ளிங்க் கான்ஸ்டன்ட்டும்


ஃபெய்ன்மன் டையாகிராம்ஸ்ம்")


சுழற்றி சுழற்றி


படித்துப்பார்க்க ஆசை.


சுஜாதாவின் விசைப்பலகைக்கு


பல கைகள் உண்டு.




____________________________________________________________________

No comments: