தலை எது? வால் எது?
---------------------------------------------
ருத்ரா.
ஆதியும்அந்தமும் இல்லாததே
"சனாதனம்" என்பவர்களே
பிரம்மத்தின்
தலை எது? வால் எது?
அறிந்துகொண்டீரா?
அது
இரண்டல்ல என்றீர்கள்.
ஒன்றே தான் என்று
சுட்டுவதற்கும்
இயலாது என்றீர்கள்.
அப்புறமும்
நாக்கில் நரம்பின்றி
நாலு வர்ணம் சொல்கின்றீர்.
----------------------------------------------
No comments:
Post a Comment