2024-04-26

அவன் அன்றி ஓர் அணுவும்...


யாரோ சாவி

கொடுக்கிறார்கள்.

யாரோ செய்த பொம்மை தான்

நான்.

ஏதோ ஒரு

 "எக்ஸோப்ளானட்டிலிருந்து"

ஏ ஐ மூலம்

எவனோ ஒருவன் இங்கே

என்னை

தும்மச் சொல்கிறான்.

துடிக்கச் சொல்கிறான்.

இப்படி கூட நம் அறிவின் 

சாரம் சோரம் போய்விடலாம்.

அவை

நம் புராணங்களின்

"அல்காரிதங்கள்" என்று கூட

"தீஸிஸ்"கள்

குவிக்கப்படலாம்.

உள்ளே இருக்கும்

உச்சிக் குடுமிகள் யாவும்

நச்சுக் குடுமிகளே.

அதற்காக மனிதர்களை

நசுக்கி நசுக்கி

கொல்கிற 

அந்த வர்ணாசிரமத்தின்

மரண மத்தாப்புகளை

இந்த தீபாவளிக்குள்ளாவது

கொளுத்தி அழித்திட

 வேண்டாமா ?

அதற்கு

முதலில் மூடத்தனத்தின்

வேர் மூலங்களை...

சாதி மத 

சூழ்ச்சிகளையெல்லாம்....

சாம்பலாக்குவோம்.

வரலாறு 

விழித்துக்கொள்ளட்டும்!

--------------------------------------------

ருத்ரா.


















No comments: