2024-04-24

"பாவம் மனிதர்கள்"



அந்த பெருமாள் கோயில்

பிரகாரங்களில் சிதறிக்கிடந்த

தானியங்களை

வயிறு புடைக்கத் தின்று விட்டு

அந்த மசூதியின் 

உச்சி மாடங்களில் போய்

ஆனந்தமாய்

அடைந்துகொண்டன

புறாக்கள்.

"பக்கூம் பக்கூம்"

என்று 

பேசிக்கொண்டன

"பாவம்...மனிதர்கள்" என்று.

--------------------------------------------சேயோன்.




No comments: