அந்த பெருமாள் கோயில்
பிரகாரங்களில் சிதறிக்கிடந்த
தானியங்களை
வயிறு புடைக்கத் தின்று விட்டு
அந்த மசூதியின்
உச்சி மாடங்களில் போய்
ஆனந்தமாய்
அடைந்துகொண்டன
புறாக்கள்.
"பக்கூம் பக்கூம்"
என்று
பேசிக்கொண்டன
"பாவம்...மனிதர்கள்" என்று.
--------------------------------------------சேயோன்.
No comments:
Post a Comment