உலக புத்தக தினம்
----------------------------------
சேயோன்.
அறிவு மரத்தின்
நுனிக்கொம்பர் ஏறி
அஃதிறந்தூக்கிய
பின்னே
மனிதனுக்கு
புத்தகங்கள் வெறும்
காகித சடலங்களே.
ஏடுகளும் சிலேட்டுகளும்
எங்கோ எகிறிவிழுந்தன.
"காலிகோ பைண்டு"
கனத்த புத்தகங்களும்
குப்பைத்தொட்டி
இரைப்பைக்குள்ளே
இறந்து பட்டன.
பிஞ்சு மனிதக்குஞ்சுகள் கூட
கை பேசி சொடுக்கலில்
சாட் ஜிபிடியின்
செயற்கை மூளையில்
அண்டங்கள் அனைத்தையும்
அங்குலம் அங்குலமாய்
அளைந்து
விளையாடுகின்றன.
"குவாண்டம்
எண்டாங்கிள்மெண்டில்"
சன்னலைத் திறந்தால்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்
குளிர் பூந்தமிழில்
பூச்செண்டு
நீட்டக்காத்திருக்கும்.
---------------------------------------------
No comments:
Post a Comment