எத்தனை இரைச்சல்கள்
-------------------------------------------ருத்ரா.
எத்தனை இரைச்சல்கள்
மந்திரங்கள் என்ற பெயரில்?
எத்தனை யாகங்கள்
உயிர்களைத் தீயிலிட்டு?
எத்தனை பொய்மைகள்
மாயைகளால்
மெருகேற்றப்பட்டு?
போதும் இறைவா!
உன்னைப் பற்றிய ஓர்மை
உனக்கே இல்லாதபோது
எங்களுக்கு எதற்கு
குண்டலினிகளும்
கபாலம் பிளந்து
அந்த "பிரம்மரந்தரங்களும்?"
பாஷ்யங்களின்
வெறும் ஓசை தெறித்த
மகரந்தங்கள்
மனிதம் அற்ற
மலட்டு வர்ணங்களிலா
"சுப்ரபாத" வெளிச்சங்களை
காட்ட இயலும்?
------------------------------------------
No comments:
Post a Comment