பாழும் கிணறு என்று
தெரிகிறது.
அடியில்
பேரழிவு நிழலாடுகிறது.
ராமரும் கை தொட்டு
கொடுத்து விட்டார்.
வில்லை வளைத்து
முறிக்க காத்திருக்கிறார்கள்.
அக்கிரமங்களின்
அம்பு மழையில்
வரலாறுகள்
கந்தல் கந்தல்கள் தான்.
"யாரங்கே?
அந்த
தேச விரோதச்சொல்லை
ஒலித்தது?....
யார்? யார்? யார்?...."
சூலாயுதங்களும்
கதாயுதங்களும்
வெறி கொண்டன.
அவை என்ன சொற்கள் ?
ரத்தச்சேற்றில்
அமிழ்வதாயினும் அவை
இன்னமும் ஒலிக்கின்றன.
"வெல்க ஜனநாயகம்."
--------------------------------------------
ருத்ரா.
,
No comments:
Post a Comment