மே தினம்
----------------------
செங்கீரன்.
உனக்கு இன்னும்
எத்தனை உறக்கங்கள்
வேண்டும்?
ஒரு தடவை விழித்ததே
போதும் என்று
மீண்டும் உறக்கமா?
அறிவுப்பிழம்பின்
அந்த லண்டன்
வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்
மே தினம்
----------------------
செங்கீரன்.
உனக்கு இன்னும்
எத்தனை உறக்கங்கள்
வேண்டும்?
ஒரு தடவை விழித்ததே
போதும் என்று
மீண்டும் உறக்கமா?
அறிவுப்பிழம்பின்
அந்த லண்டன்
"வாக்"
-----------------------------------
பூங்காவில் நடப்பதே
வாழ்க்கை ஆனது.
கண் காது வாய்
மூக்கு எல்லாம்
கிளைகள் இலைகள் சருகுகள்
மற்றும்
காக்காய் எச்சங்கள் தான்.
-----------------------------------------
சேயோன்.
பனங்கட்டையில்
ஊசியை நட்டு இழு...
எறும்புகள் சிரிக்கின்றன.
தேர்.
---------------------------------------
சேயோன்.
யாரோ சாவி
கொடுக்கிறார்கள்.
யாரோ செய்த பொம்மை தான்
நான்.
ஏதோ ஒரு
"எக்ஸோப்ளானட்டிலிருந்து"
ஏ ஐ மூலம்
எவனோ ஒருவன் இங்கே
என்னை
தும்மச் சொல்கிறான்.
துடிக்கச் சொல்கிறான்.
இப்படி கூட நம் அறிவின்
சாரம் சோரம் போய்விடலாம்.
அவை
நம் புராணங்களின்
"அல்காரிதங்கள்" என்று கூட
"தீஸிஸ்"கள்
குவிக்கப்படலாம்.
உள்ளே இருக்கும்
உச்சிக் குடுமிகள் யாவும்
நச்சுக் குடுமிகளே.
அதற்காக மனிதர்களை
நசுக்கி நசுக்கி
கொல்கிற
அந்த வர்ணாசிரமத்தின்
மரண மத்தாப்புகளை
இந்த தீபாவளிக்குள்ளாவது
கொளுத்தி அழித்திட
வேண்டாமா ?
அதற்கு
முதலில் மூடத்தனத்தின்
வேர் மூலங்களை...
சாதி மத
சூழ்ச்சிகளையெல்லாம்....
சாம்பலாக்குவோம்.
வரலாறு
விழித்துக்கொள்ளட்டும்!
--------------------------------------------
ருத்ரா.
பாழும் கிணறு என்று
தெரிகிறது.
அடியில்
பேரழிவு நிழலாடுகிறது.
ராமரும் கை தொட்டு
கொடுத்து விட்டார்.
வில்லை வளைத்து
முறிக்க காத்திருக்கிறார்கள்.
அக்கிரமங்களின்
அம்பு மழையில்
வரலாறுகள்
கந்தல் கந்தல்கள் தான்.
"யாரங்கே?
அந்த
தேச விரோதச்சொல்லை
ஒலித்தது?....
யார்? யார்? யார்?...."
சூலாயுதங்களும்
கதாயுதங்களும்
வெறி கொண்டன.
அவை என்ன சொற்கள் ?
ரத்தச்சேற்றில்
அமிழ்வதாயினும் அவை
இன்னமும் ஒலிக்கின்றன.
"வெல்க ஜனநாயகம்."
--------------------------------------------
ருத்ரா.
,
ஐனநாயகம்
என்ற சிந்தனை
பெரும்பான்மையாக
இல்லாத நாடுகளில்
சிறுபான்மையான
சதுரங்க கட்டங்களே
பகடைகள் மூலம்
ஆள்வதற்கு
பவனி வருகின்றன.
இவர்களின்
பரமபதக்கட்டங்களில்
சாதி மத பாம்புகளே
ஏணிகளை விழுங்கிவிடும்
அனக்கொண்டாக்களாய்
ஆட்சி செலுத்துகின்றன.
இந்த எந்திரங்களின்
தந்திரமான
இருட்டு மூலைகளில் தான்
வாக்கு ஈசல்களின்
உதிர்ந்த சிறகுகள்
குவிந்து கிடக்கின்றன.
-------------------------------------------
செங்கீரன்.
அந்த பெருமாள் கோயில்
பிரகாரங்களில் சிதறிக்கிடந்த
தானியங்களை
வயிறு புடைக்கத் தின்று விட்டு
அந்த மசூதியின்
உச்சி மாடங்களில் போய்
ஆனந்தமாய்
அடைந்துகொண்டன
புறாக்கள்.
"பக்கூம் பக்கூம்"
என்று
பேசிக்கொண்டன
"பாவம்...மனிதர்கள்" என்று.
--------------------------------------------சேயோன்.
உலக புத்தக தினம்
----------------------------------
சேயோன்.
அறிவு மரத்தின்
நுனிக்கொம்பர் ஏறி
அஃதிறந்தூக்கிய
பின்னே
மனிதனுக்கு
புத்தகங்கள் வெறும்
காகித சடலங்களே.
ஏடுகளும் சிலேட்டுகளும்
எங்கோ எகிறிவிழுந்தன.
"காலிகோ பைண்டு"
கனத்த புத்தகங்களும்
குப்பைத்தொட்டி
இரைப்பைக்குள்ளே
இறந்து பட்டன.
பிஞ்சு மனிதக்குஞ்சுகள் கூட
கை பேசி சொடுக்கலில்
சாட் ஜிபிடியின்
செயற்கை மூளையில்
அண்டங்கள் அனைத்தையும்
அங்குலம் அங்குலமாய்
அளைந்து
விளையாடுகின்றன.
"குவாண்டம்
எண்டாங்கிள்மெண்டில்"
சன்னலைத் திறந்தால்
ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்
குளிர் பூந்தமிழில்
பூச்செண்டு
நீட்டக்காத்திருக்கும்.
---------------------------------------------
தலை எது? வால் எது?
---------------------------------------------
ருத்ரா.
ஆதியும்அந்தமும் இல்லாததே
"சனாதனம்" என்பவர்களே
பிரம்மத்தின்
தலை எது? வால் எது?
அறிந்துகொண்டீரா?
அது
இரண்டல்ல என்றீர்கள்.
ஒன்றே தான் என்று
சுட்டுவதற்கும்
இயலாது என்றீர்கள்.
அப்புறமும்
நாக்கில் நரம்பின்றி
நாலு வர்ணம் சொல்கின்றீர்.
----------------------------------------------
எத்தனை இரைச்சல்கள்
-------------------------------------------ருத்ரா.
எத்தனை இரைச்சல்கள்
மந்திரங்கள் என்ற பெயரில்?
எத்தனை யாகங்கள்
உயிர்களைத் தீயிலிட்டு?
எத்தனை பொய்மைகள்
மாயைகளால்
மெருகேற்றப்பட்டு?
போதும் இறைவா!
உன்னைப் பற்றிய ஓர்மை
உனக்கே இல்லாதபோது
எங்களுக்கு எதற்கு
குண்டலினிகளும்
கபாலம் பிளந்து
அந்த "பிரம்மரந்தரங்களும்?"
பாஷ்யங்களின்
வெறும் ஓசை தெறித்த
மகரந்தங்கள்
மனிதம் அற்ற
மலட்டு வர்ணங்களிலா
"சுப்ரபாத" வெளிச்சங்களை
காட்ட இயலும்?
------------------------------------------
இங்கே
பொய்க்கால்
குதிரையாட்டங்கள்
தூள் கிளப்புகின்றன
நிஜக்குதிரைகள்
அங்கே
குதிரைபேரத்திற்கு
அந்த "நாற்காலி"கள்
அருகே காத்திருக்கும்போது.
------------------------------------------------ருத்ரா.
வர்ணாஸ்ரமம்
இல்லாத
வர்ணங்களின் ஆசிரமம்.
பட்டாம்பூச்சிகள்
--------------------------------------
சேயோன்
ஆர்டெலிஜென்ஸ்
-------------------------------------
ருத்ரா.
பிரம்மமே இல்லை என்று
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதியது
கைபேசியோடு
தைத்து வைத்திருந்த
ஒரு "ஆப்ஸ்".
வாதராயணர் ஸ்லோகங்கள்
பேசாமல்
மிச்சர்
தின்று கொண்டிருக்கின்றன.
----------------------------------------------