2024-06-22

குடி மகனே குடி!

 குடி மகனே குடி!

__________________________________

ருத்ரா


தப்பில்லை.

உன் உள்நாக்கைக்கொண்டு

உரசி உரசி

இந்த வானக்கூரையை

இடித்துத்தள்ளு.

அப்புறம் வெட்டவெளிதானே

உன் கோவணம்.

உனக்குள் நொதித்த‌க் 

குமிழிகளையெல்லாம்

வேதங்கள் என்று சொல்லு.

புராணங்கள் என்று வாந்தியெடு.

இன்னும்

மனு சாஸ்திர மெத்தனாலையும்

கலக்கு கலக்கு 

என்று கலக்கிக்கொண்டே இரு.

மக்கள் என்று

மனித வெளிச்சங்கள் என்று

எதுவுமே

இங்கு மிச்சம் இருக்க வேண்டாம்.

புல் பூண்டுகள் மட்டும்

புருஷ சூக்தம் 

சொல்லிக்கொண்டிருக்கட்டும்.

போதையை வைத்துக்கிறுக்கியதெல்லாம்

புரிந்து கொள்ள மீண்டும்

போதையை ஏற்றிக்கொண்டாக வேண்டும்.

யாகத்தில் குதிரைமாமிசங்கள் மட்டும்

வெந்து கொண்டிருக்கட்டும்.

யாருக்கு இவை?

பிரம்மனுக்கா?

இங்கே எல்லாம் வெந்து வெந்து

தின்று தீர்க்கப்படும்

பிரம்மனையும் சேர்த்து தான்.

அப்படியும் 

பிதுங்கி வழியும் சமஸ்கிருத எச்சில்களில்

பிரம்மத்தை தேடி

அலைவதும் வீணே.

சோமச்செடியை நசுக்கிய‌

ரசத்தில் நுரைத்த‌

பொய்யே பிரம்மம்.

சரி தானே...

சஹநாவவது சஹநோ புனக்து..

சொல்லுங்கோ..சொல்லுங்கோ

நாழியாறது

நாலு ஆத்துக்கு போணுமோ 

இல்லியோ...


_______________________________________________________________










No comments: