2024-06-23

என்டாங்கில்மெண்ட்

 அதே கவலை தான்.

அதே அதே..எப்படி

என்ற 

மண்டைக்குடைச்சல்கள்.

"கண்ணொடு கண்ணிணை நோக்கியது..."

மட்டுமே நிகழ்ந்தது.

அப்புறம்

கோடி கோடி ...ஒளியாண்டுகள் தூரம்.

குவாண்டம் என்டாங்கில்மெண்ட்

என்று கணித சமன்பாடுகளை

நீட்டிக்கொண்டு

போக முடியவில்லை.

இதோ 

அந்த கண்களுக்கும்

இந்தக்கண்களுக்கும்

இடையே

அம்புகள்..ஈட்டிகள்

ரத்த அணுக்கள் ஒவ்வொன்றும்

ராட்சத கதாயுதங்களாய்

முரண்டு பிடித்துக்கொண்டு

இனிமையின் குருட்சேத்திரம்.

உனது வெற்றி எனது தோல்வி.

எனது வெற்றி உனது தோல்வி.

கீதைகள் எல்லாம்

சொற்கள் ஒடிந்து உடைசல்கள் ஆகின்.

கிருஷ்ணன்கள் கூட‌

எவண்டா இதை மேய்ப்பது என்று

மாடுகள் மேய்க்கப்போய் விட்டான்.

இனிய தேன்மழைக்குள்

அடர்மழையின் 

கொடும் போர்..போர்.

_____________________________________

அஞ்சிறைத்தும்பி.

 




No comments: