கல்லாடன் கவிதைகள்
____________________________________________
12.06.2024
முட்டுக்கொடுத்தவர்கள் எல்லாம்
ஆகா ஓகோ என்கிற
ஜனநாயகத்தூண்கள் அல்ல.
அந்தக்கட்டைக்கால்களையும்
குதிரைபேரம் செய்து
ஒரு சர்வாதிகார மிருகக்குட்டியை
எப்படி தன்
செல்ல பொமரேனியன் ஆக்கிக்கொள்ள முடியும்
என்பதில் கரை கண்டவர்கள் இவர்களே.
கறையாகிப்போனது
நம் ஜனநாயக எண்ணிக்கை கணக்குத்தான்.
"வார் ஃபார் பீஸ்"...
அமைதி அமர்த்திவைக்க போர் என்பார்கள்.
ஏன் அந்த விஷ்ணுவே ஒரு "பெனவெலண்ட் டிக்டேட்டராக"
அவதரித்து
இந்த ஜனநாயக விரோதிகளை
வதைத்துவிட்டு செல்லலாகாதா என்று
தினமும் விஷ்ணுசஹஸ்ரநாமம் சொல்பவர்கள்
ஏங்கி ஒரு அறிக்கை விடலாம்.
"மாமா...பேஷா செஞ்சுட்டாப் போறது..
கன்யாகுமரிலே பாத்தேளோ இல்லியோ..
இனி இந்த "தேசவிரோதிகள்" தலைகளையெல்லாம்
கொய்யாமல் விடாது என் விஷ்ணுச்சக்கரம்."
முதல் தலை அவருடையது தான்.
3வது முறையிலிருந்து இன்னும்
3000ஆவது வரைக்கும் இது தான்.
அரக்கர்கள் எல்லாம் ஓடி ஒளிந்தார்கள்.
ஏனென்றால்
தேவலோகமே மிகப்பெரும் கொடிய
அரக்கர்களையும் மிஞ்சிய
அரக்கர்களின் கூடாரம் ஆகிப்போனதால் தான்.
யூ ட்யூபுகளில்
இனிமேல் இந்த ஏமாற்றுவேலைகள் எல்லாம்
நடக்காது...
அவர் சோலி முடிஞ்சுது
இவர் சோலி முடிஞ்சுது
என்று
"ஃபால்ஸ் ஹோப்" கொடுக்கும்
அறிவாளிப்பேச்சாளர்களே!
அதோ அந்த
காஞ்சுபோன புல் கூட
எழுந்து கொண்டு இனி பற்றிகொள்ளும்
என்கிற எதேனும் ஒரு
இக்னிஷன் பாய்ண்ட்
புலப்படும் வரை இந்த
புலம்பல் காவியங்களுக்கு
முற்றுப்புள்ளி வையுங்கள்.
"விண்குழலின் புல்லாங்குழல்கள்"
விடியல்கள் தருவதில்லை.
__________________________________________________
______________________________________
No comments:
Post a Comment