2024-06-19

இரைவனே இப்போது மிச்சம்.

 இறைவா! எங்கே இருக்கிறாய்?

_________________________________________

சொற்கீரன்.




இறைவனிடம்

என் மனம் திறந்து

அவன் மனம் திறந்து

பரிமாறிக்கொள்ளலாம் 

என்று பார்த்தால்

இவர்கள் மறைத்துக்கொண்டல்லவா

இருக்கிறார்கள்.

நான்கு திசைகளிலும் மறைத்து

நான் மறை என்றார்கள்.

சரி 

நீங்களே

மந்திரம் சொல்லிக்கொள்ளுங்கள்.

நாங்கள்

வெள்ளைக்காரன் சன்னல் வழியாக‌

பிரம்மத்தைப்பார்த்துக்கொள்ளுகிறோம்

என்றால்

அய்யோ

கடவுளையே தீட்டு ஆக்கிவிட்டார்களே

என்று 

கோர்ட்டுக்கே போய்

அரசியல் சாசனம் என்று

அட்டை மட்டும் போட்டுக்கொண்டிருக்கும்

அந்த மனு சாஸ்திரத்தையே

நம் தலையில் பாரம் ஏற்றினார்கள்.

கடவுளுக்கே அந்த அநீதி பொறுக்காமல்

இவர்கள் மீது அவர்

அம்பு விட்ட போது

அந்த பிரம்மத்துக்கே

பிரம்ம ஹத்தி தோஷம் வந்து விட்டதாய்

சம்ப்ரோக்ஷணம் செய்து

அந்த பிரம்மத்தை

அசுத்தத்தாலேயே

அபிஷேகம் செய்தார்கள்.

அவமானம் தாங்காமல்

பிரம்மம் எங்கோ போய்விட்டது.

பொருள் தொலைந்து போன‌

ஸ்லோகங்களை மட்டும் தான்

உமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சூழ்ச்சிகளுக்கு

இரையாகிப்போன‌

இரைவனே இப்போது மிச்சம்.


______________________________________________



No comments: