என்னை
ஏன் எழுப்பினாய்?
எழுப்பியது அம்மா தான்.
பத்து மாதம் தூங்கி
என்னைத்தூங்கவிடாமல்
பண்ணினாயேடா..
போதும் எழுந்திரு.
இந்த உலகம் ஒரு வினாடியில் கூட
சும்மா இருப்பதில்லை..
பையன்
பெரிய ஆளாய் வரவேண்டும்
அவள் கவலை அவளுக்கு.
என் கவலையின் வண்ணத்திரைப்படம்
இப்போது தான்
கனவு ரீல் விட்டுக்கொண்டிருக்கிறது.
பட்டாம்பூச்சி தோட்டத்துக்குள்
நுழைந்து விட்டேன்.
கொத்து கொத்தாய் மில்லியன்களாய்
எத்தனை எத்தனை
அங்கே மொய்த்துக்கிடக்கின்றன.
அந்த ஒன்று எங்கே?
அந்த சிறகு ஓரத்தில்
ஒரு மச்சம் உண்டே...
தெரியவில்லை
அடுத்த கனவில் பார்ப்போம்.
போர்வயை சலிப்போடு
உதறினேன்.
_____________________________________________________
அஞ்சிறைத்தும்பி.
No comments:
Post a Comment