அவள் எனும் அனாடமி
____________________________________
சொற்கீரன்
என்ன தான் அவள்?
சங்குப்பூவா?
குவி கனவுகளின்
கதிர் வீச்சுகளா?
சதையைத் தின்னும்
ரேடிய விளாறுகளிலா
அரிக்கப்பொகிறாள்?
பூதம் காட்டும் அவள் முல்லைகளில்
எல்லாம்
மூழ்கடிக்கப்பட்டு விடுமா?
ராமானுஜனின் மாடுலர் ஃபங்ஷன்களா
அவள் கொத்துச்சிரிப்புகள்?
புரியாமலே
புதைந்து கொண்டு
எனை எந்த
குமிழிகளில்
சோழி குலுக்கிப்போட்டு
வெடிக்கச்செய்வாள்?
ப்ரத்யங்கிரஹா கோரைப்பற்கள் காட்டி
கொஞ்சும் நாணல்கீற்றுகளாய்
ஆற்றின் கரையோரம்
நிற்பாளா?
க்ளுக் சிரிப்புக்குள்
ஏலியன்கள் குளுவானுமாய்
மில்லியன் கணக்கில்
வந்து பிம்பம் காட்டுபவளா?
யார் அவள்?
இந்த கேள்வியே போதும்
மின்னல் மழை பொழிய.
கிரீன் ஃபங்ஷன் தொகுப்புக்கணிதத்தில்
எத்தனை முறை
செருமி
இந்த இதயத்தை சுக்குநூறாக்குவாள்?
இவள் அநாடமியை
யாராவது வி ஆர் கேமிராவில்
பதிவிட்டு தரமுடியுமா?
அது போதும் என்று
இந்த எல்லா கனவுச்செதுக்கல் மற்றும்
கொத்தும் உளிக்காயங்களிலிருந்து
தப்பி
பறந்து விடுவேன்.
அவளின் இந்த பிம்பம் போதும்
அதில்
ஆயிரம் பிம்பம் காட்டி
மறைந்து ஒளிர்வேன்.
_____________________________________________________
No comments:
Post a Comment