2024-08-14

நுள்ளி விளையாடலாம்.

 சொற்கள் 

கத்தரிக்காய் என்றால்

கூட்டு வைக்கலாம்.

அத்திக்காய் இத்திக்காய் 

என்றால்

பாட்டு எழுதலாம்.

கோவைக்காய் என்றால்

உள்ளே மதுரைக்காயையும்

சேர்த்து துவட்டல் துள்ளலுடன்

நறு வெண்சோறு சமைக்கலாம்.

கவிதைக்கு பேர் என்ன? ஊர் என்ன?

யாதானும் ஊராமல் நாடாமால்

செம்புழுதி மண்ணின் துளியையும்

பாடலாம்.

பனை உயரக்கள்ளியின் 

சுடர்ப்பூவும் வருடலாம்.

அருகு வரும் 

அந்த அதிர்வு சிறைப்புள்ளோடு

கொஞ்சம் வாயடலாம்

வாருங்கள்.

வானத்தையும் கொஞ்சம் 

நுள்ளி விளையாடலாம்.

__________________________________________

எப்சி


No comments: