2024-08-17

என்ன செய்யலாம் சகோ?

 

 என்ன செய்யலாம் சகோ?

________________________________



என்ன சகோ

ஒரு மாதிரியாய் இருக்கிறீர்கள்.

என்ன மாதிரியாய் இருந்தாலும்

ஒரு பூ கூட

விழ வில்லையே.


சரி விடுங்கள்.

ஃபில்ம் போகலாமா?

போகலாம் தான்.

அங்கேயும் 

அந்த இமைகளின்

பிறாண்டல் இனிமையில்

நான் மாய்ந்தே போவேன்.


அப்போ

புத்தகத்திருவிழா?

ஆமாம்.

மனத்தை ஏமாற்றிவிட்டு

பக்கம் பக்கமாய்

புரட்டிக்கொண்டிருக்கலாம்.

இருந்தாலும்

அந்த அச்சுமை நாற்றத்திலும்

பட்டாம்பூச்சிகள் நசுங்கிச்சொல்லும்

சிறகுச்சுவடுகள்

சில்லிட வைக்குமே.

என்ன செய்யலாம் சகோ?


ஒன்றும் செய்யமுடியாது.

நானே அன்னமாய் அவர்களிடம்

தூது போகிறேன்.

சொல்லிமுடிப்பதற்குள்

குவாக் குவாக் என்று

சின்ன சின்ன கடுகுக்கண்கள்

கருப்பும் பச்சையும் நீலமுமாய்

மினுமினுக்க‌

சிறகு பரப்பி

என் காலைச்சுரண்டிக்கொண்டு

நிற்கிறாள்

_________________________________________

எப்சி.


No comments: