வர்ணாஸ்ரமம்
இல்லாத
வர்ணங்களின் ஆசிரமம்.
பட்டாம்பூச்சிகள்
--------------------------------------
சேயோன்
வாழ்க்கை ஒரு பயணம்.மைல் கல் எண்களே வாழ்க்கைக் குறிப்புகள்.குறிப்பிட என்னிடம் எதுவும் இல்லை.நட்போடு தொடர்வோம். அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்
வர்ணாஸ்ரமம்
இல்லாத
வர்ணங்களின் ஆசிரமம்.
பட்டாம்பூச்சிகள்
--------------------------------------
சேயோன்
ஆர்டெலிஜென்ஸ்
-------------------------------------
ருத்ரா.
பிரம்மமே இல்லை என்று
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதியது
கைபேசியோடு
தைத்து வைத்திருந்த
ஒரு "ஆப்ஸ்".
வாதராயணர் ஸ்லோகங்கள்
பேசாமல்
மிச்சர்
தின்று கொண்டிருக்கின்றன.
----------------------------------------------
அவனா? இவனா?
----------------------------------------ருத்ரா.
அச்சமும் கவலைகளும்
நம் எதிரில்
ஊமைகளாய் நிற்கின்றன.
அவைகளுக்கு
கடவுள்கள் என்று
பெயர் சூட்ட
வைத்தது யார்?
நம் நரம்புகளில்
வீணையை மீட்டி
கொத்துக் கறி போட்டது யார்?
இனிமையாய் இருந்தாலும்
காலத்துச் சுருதிக்கட்டைகளின்
காதுகளைத் திருகியா
தேன் எடுப்பது?
வண்டி வண்டியாய்
வார்த்தைச்சகடங்கள்
கட கடத்த மந்திரங்களின் அடியில்
நசுங்கி க் கிடப்பது யார்?
கடவுளா? மனிதனா?
அவனை இவன் தான்
அடையாளம் காட்ட வேண்டும்!
-----------------------------------------------------
தமிழ் மூச்சுகள்.
--------------------------------------ருத்ரா
காற்றில் உற்றுக் கேள்
அந்த பனை ஓலைகளின்
உரசல்களை.
நம் தமிழ் மூச்சுகளின்
எழுத்தாணிக் கீறல்கள்
என் மேசையில்
பாதராயணார் ஒரு
பூனைக்குட்டியாய்
உட்கார்ந்திருக்கிறார்...
பிரம்மசூத்திரமாய்.
இந்த சிகரெட் பெட்டியில்
555 சிகரெட்டுகள்.
அதாவது சூத்திரங்கள்.
புகைவளையங்களாய்.
பாஷ்யம் என்று
உடுக்கை அடித்துக்கொண்டிருக்கிறார்
வெகு ஜோராய்
ஆதிசங்கரர்.
கீரியும் பாம்பும்
இன்னும் வெளியிலேயே
வரவில்லை.
இரண்டுமே பிரம்மம் தானாம்.
கேட்டால்
ஒன்று பிரம்மம்
இன்னொன்று "அப்பிரம்மம்"
என்பார்கள்.
சாதி சாதித்தது.
நீதி சாய்ந்தது.
இந்த கம்பியூட்டர்கள் கூட
"ஜனநாயகத்தை"
உடைந்த சிலேட்டுகளில் தான்
எழுதிக்கொண்டிருக்கின்றன.
-------------------------------------------
ருத்ரா.
" என்பு தோல் போர்த்த"..
-------------------------------------------
மதம்
சாதி
கடவுள்
இவையெல்லாம் என்ன?
மானுடத்தின்
"என்பு தோல் போர்த்த"
உடம்பு மட்டுமே இவை.
உள்ளடக்கமான
உயிர் உள்ளம் அறிவு அன்பு
இவற்றிற்கெல்லாம்
ஒரு கல்லறை கட்டுவதற்கா
இந்த சொற்கள் இங்கே
தோரணங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றன.
அந்தக் கல்லறை
உன் கருவறையாய்
மயக்கம் காட்டுவதை எதிர்த்து
ஓ! மானிடமே
விழித்துக்கொள்.
-------------------------------------------------
ருத்ரா