2021-09-03

ஒரு ரோஜாவை....

 


ஒரு ரோஜாவை....

___________________________ருத்ரா


என்னை

இந்த முட்டுச்சந்தில்

கொண்டு வந்து நிறுத்திவிட்டாய்.

இந்த இணைய விரல் சொடுக்கல்களில்

சிக்கி விட்டேன்.

மறைந்தும் மறையாமலுமாய்

பளீரிட்ட உன்

சிரிப்பூவை வலைப்பூவாக்கி

பதிவுகள் இட்டுக்கொண்டே 

இருக்கிறேன்

கடலில் போட்ட கூழாங்கற்களைப்போல்.

தினமும்

கதை போல‌

சொற்களைக்கொண்டு

நீள நீளமாயும்

திமிரிய சுருள்களாகவும்

அனக்கொண்டாவைப்போல்

எழுதி எழுதி

அந்த சுட்டெரிக்கும் கனவை

விழுங்கத்துடிக்கிறேன்.

மடிப்பொறியும் கை பேசியும்

உன் உள்ளத்தின் 

மூலை முடுக்குகளைத்தேடித்தான்

ப்ரவுஸ் செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு வழியாய்

என் கல்லறையைக்

கட்டத்துவங்கிவிட்டேம்

இந்த‌

டிஜிடல் செங்கற்களைக்கொண்டு.

மெஷின் லேர்னிங் மூலம்

என் மூளைக்குள்

ஒரு புதிய செயற்கை மூளையை

பதியமிடப்போகிறேன்.

அந்த சிலிகான் சில்லுகளிலும்

கசியும் ரத்தத்தில்

ஊறிக்கிடப்பேன்.

மரணித்து மரணித்து

உயிர்த்துக்கொண்டே இருப்பேன்.

என்றைக்காவது

நான் எல்லாம் விறைத்த ரோபோவாய்

அபூர்வ ரசாயனக்கலவையின்

ஒரு உலோகத்தில்

ஒரு ரோஜாவை 

உன் முன் நீட்டுவேன்.


______________________________________

No comments: