ஏடுகள்.
----------------------------------------
ருத்ரா.
மொழியின்
வரலாற்றுச் சதைகள் வற்றியபின்
நமக்குக் கிடைத்த
எலும்புக் கூடுகள் இவை.
அன்று நம்மோடு
கல் பேசியது.
புல் பேசியது.
புள் பேசியது.
புள்ளும் பேசியது.
புயலும் பேசியது.
ஆனால்
கடவுள் என்று சொல்லிக்கொண்டு
எந்தப் பயலும் பேசவில்லை.
பின் எப்படி இந்த
எச்சில் மந்திரங்களில்
புதைந்து போனோம்?
No comments:
Post a Comment