2014-09-06

சிறகுகளாய்

   
 
                                              1996ல் நான் கம்பியூட்டரில் வரைந்த ஓவியம்

சிறகுகளாய்
====================================ருத்ரா
கனவு விரிகிறது
சிறகுகளாய்.
என் பிம்பத்தில்
உன் இதயம் தேடுகிறேன்.
நுரைக்கீறல்களில்
கனவுப்படலம் கூட‌
ஓலம் இடுகிறது.
ஒரு முத்து உதிர்த்தால்
குறைந்தா போவாய்?
அன்றொரு நாள்
இதழ் பிரித்தாய்
சொல் அமுதம் கிடைக்குமென்று
கோடி தருணங்கள்
ஊசி மழைபெய்ய‌
காத்திருந்தேன்.
கல்லெறிந்து ஒரு சிற்றலையை தூவிவிட்டு
சென்று விட்டாயே.
பேயிரைச்சல் தேவையில்லை
சுநாமி என்று பெயர் சூட்ட.
நுள்ளிச்சென்ற உன் மௌனம் போதும்.
அது கடலையும் தூர்த்துவிட்டது.
வானத்தையும் குப்புறக்கவிழ்த்து விட்டது.
மட வாத்துக்கு
கொட்டாங்கச்சிக்குளம் கூட‌
கொந்தளிக்கும் கடல்கள்.

=============================================ருத்ரா.

 

No comments: