புத்தக தினம்.
_________________________________சேயோன்.
குபெயர்ச்சி புத்தகம்
விற்றுத் தீர்ந்தது.
வாஸ்து சாஸ்திரமும் பி ஆர்க்கும் ...ஒரு ஒப்பீடு
கல்லூரியில் இருந்தே ஆர்டர் வந்து
அத்தனையும் காலி.
தக்காளி சாஸோடு தாமரை ஆப்பம்
செய்வது எப்படி?
புத்தகங்கள் எல்லாம் காலி.
ஒரு வாரத்தில் பத்து பில்லியன்
சம்பாதிப்பது எப்படி?
இது தீர்ந்து போய்
மேலும் எட்டு லட்சம் காப்பிகளுக்கு
ஆர்டர் ரெடி.
அதோ பாருங்ள் பக்கத்து வரிசை
புதிய வெளியீடுகளை....
"புல்லின் காட்டுக்குள்
புல்லாங்குழல் கனவுகள்"
"சமவெளியைத் தேடி மனித நீதி"
"நாலு வர்ண பட்டாம்பூச்சிகள்"
இன்னும் இன்னும்
"எரிமலை இசையமைத்த
மனித உரிமைக் குரல்கள்"
உயரமாய் அடுக்கியது அடுக்கியபடி...
____________________________________________
No comments:
Post a Comment