2023-03-08

உலக மகளிர் தினம்



உலக மகளிர் தினம்

-----------------------------------------------------------------------------



பெண்ணே!

உலக மகளிர் தினம் என்று

மலர்க்கிரீடம் சூட்டினோம்.

அந்த மலர்கள் சிரித்தன‌

அவள் வண்ணச்சீறடிகளே

உலகின் புகழ்பெற்ற பூங்காங்கள்.

அவள் காலடிகளையா தலையில் சூடுவது?

அதில் ரோஜா எனும் 

ஒரு மலர் முள்ளை வைத்து

குத்திக்காட்டியது.

போதும்.

கவிதைகள் எனும் உங்கள் 

கள்ளின் குடங்களைக்கொட்டி கவிழ்த்தது?

இந்த சமுதாயம் சமூக அநீதிகளால்

புண்பட்டுக் கிடப்பது 

அறிவீர்களா?

புண்படுத்தியவர்களே

இப்படி 

புளகாங்கிதம் கொண்டு

அம்மன் அபிஷேகங்கள் நடத்தியது போதும்.

வளையல்கள் ஒலிப்பதற்கு மட்டும் அல்ல‌

இந்தக்கைகள்.

அறிவு ஆள்வதும் 

அகிலம் ஆள்வதும்

மகளிர் வழி பரிணாமங்களே

அறத்தொடு அரசியல் மலர்த்தும்!

வெல்லும் வெல்லும்.

பெண்ணே வாழ்க!

பெண்மையே வெல்க!

__________________________________________‍

ருத்ரா 

No comments: